Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 3 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 4 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 6 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- News எல்.முருகனுக்கு டெல்லி டாஸ்க்! கச்சிதமாக செஞ்சு முடிச்சிட்டாரே! எடப்பாடி இதை எதிர்பார்த்து மாட்டாரு
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிமீ பயணம்! உலக நாடுகளை அசரடிக்கும் இந்திய கம்பெனியின் எலெக்ட்ரிக் கார்
உலக நாடுகளை பிரம்மிக்க வைக்கும் வகையில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையிலான எலெக்ட்ரிக் காரை இந்திய நிறுவனம் ஒன்று வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
உலக நாடுகளை பிரம்மிக்க வைக்கும் வகையில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் பயணம் செய்யும் வகையிலான எலெக்ட்ரிக் காரை இந்திய நிறுவனம் ஒன்று வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. இதுதவிர பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையானது சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக கருதப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். எனவே அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா என உலகின் பல்வேறு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன.
இந்தியாவை எடுத்து கொண்டால் தற்போதைக்கு மஹிந்திரா மற்றும் டாடா போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன. ஆனால் இந்த வாகனங்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக இருப்பது ஒரு குறையாக கருதப்படுகிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பதே ரேஞ்ச் என்று குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பெர்ஃபார்மென்ஸ் சர்வதேச தரத்திற்கு இல்லை எனவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்தத்தில் ரேஞ்ச், தரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில், சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவிற்கு இந்திய நிறுவனங்கள் தயார் செய்யும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
ஏனெனில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் வெகுவாக முன்னேறி விட்டன. டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் அதிக ரேஞ்ச் கொண்டவை. இதில், பாதுகாப்பு விஷயங்களுக்கும் கொஞ்சம் கூட பஞ்சமிருக்காது.
அத்துடன் விமானத்தையே இழுத்து செல்லும் அளவிற்கு அதன் பெர்ஃபார்மென்ஸ் இருக்கும். எனவேதான் இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பிடுவதை பலர் தவிர்த்து வருகின்றனர்.
ஆனால் அந்த குறைகளை எல்லாம் களையும் விதமாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் எஸ்201 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் எஸ்யூவி கார் ஒன்றை விரைவில் லான்ச் செய்கிறது.
அதன்பின் எஸ்201-ஐ அடிப்படையாக கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
2016ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இ2ஓ ஸ்போர்ட் (e2o Sport) என்ற எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக காட்சிக்கு வைத்திருந்தது. இதில், 380வி (380V) பேட்டரி சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தது. இதன் ரேஞ்ச் 200 கிலோ மீட்டர்கள்.
மஹிந்திரா நிறுவனம் புதிதாக லான்ச் செய்யவுள்ள எலெக்ட்ரிக் காரிலும் இதே பேட்டரி சிஸ்டம்தான் பொருத்தப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்படும்.
எனவே மிகவும் அதிக ரேஞ்ச் கொண்ட மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் என்ற பெருமையை இது பெறும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வரும் 2020ம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது.
தற்போது எலெக்ட்ரிக் எஸ்-201 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இந்த காரில், சாங்யாங் டிவோலி காரை அடிப்படையாக கொண்ட அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். சாங்யாங் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றுதான் டிவோலி.
கொரியாவை சேர்ந்த சாங்யாங் கார் நிறுவனத்தை இந்தியாவின் மஹிந்திரா குழுமம் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய எலெக்ட்ரிக் எஸ்-201 எஸ்யூவி காரானது புனேவுக்கு அருகே சகான் என்ற இடத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படவுள்ளது.
இதனிடையே சகான் தொழிற்சாலையில், எலெக்ட்ரிக் கேயூவி 100 காரின் அசெம்ப்ளிங், வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மையான கார்களில் ஒன்று கேயூவி 100. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2019ம் ஆண்டின் மத்தியில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
இதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. எனவே சகான் தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கேயூவி100 காரின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படுகிறது. இந்தியாவில் தரமான எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியிருப்பதற்கான அறிகுறிதான் இது.
உண்மையில் இதற்கு மத்திய அரசும் ஒரு காரணம். பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை இந்தியா செலவிட்டு வருகிறது. எனவே இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை வெகுவாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஃபேம் இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி கொண்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் மூலமாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மானியம் கிடைப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.
எனவேதான் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன. இதனிடையே மஹிந்திரா நிறுவனம் லான்ச் செய்யவுள்ள எலெக்ட்ரிக் எஸ்-201 காரின் விலை 20 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கார் ஓட்டும்போது நிறைய பேரு இந்த தவறு பண்ணுறோம்!! வெளிநாடுகளில் இதுக்கு தடை இருக்கு...
-
டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!