Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்திரா காந்தி தொடங்கி வைத்த பயணம்.. புதிய சரித்திரம் படைத்தது மாருதி சுஸூகி.. தகர்க்க முடியாத சாதனை
2 கோடி கார்களை விற்பனை செய்த இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற இமாலய சாதனையை மாருதி சுஸூகி படைத்துள்ளது. இந்த அரிய சாதனையை படைக்க, 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகியுள்ளது.
2 கோடி கார்களை விற்பனை செய்த இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற இமாலய சாதனையை மாருதி சுஸூகி படைத்துள்ளது. இந்த அரிய சாதனையை படைக்க, 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த சாதனை பயணம் குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸூகி. இந்திய மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனம், புதிய இமாலய சாதனை ஒன்றை இன்று (ஜூலை 23ம் தேதி) படைத்துள்ளது.
மாருதி சுஸூகி நிறுவனம், 2 கோடி (20 மில்லியன்) கார்களை விற்பனை செய்து சரித்திரம் படைத்துள்ளது. ஆம், இன்று இந்திய சாலைகளில் 2 கோடி மாருதி சுஸூகி கார்கள் ஓடுகின்றன. இத்தகைய சாதனையை நிகழ்த்திய இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் மாருதி சுஸூகி தன்வசப்படுத்தியுள்ளது.
மாருதி நிறுவனத்தின் முதல் கார் கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது. அன்றில் இருந்து கணக்கிட்டால், 2 கோடி கார்களை விற்பனை செய்த சாதனையை படைக்க, மாருதி சுஸூகி நிறுவனம் 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களை எடுத்து கொண்டுள்ளது.
மாருதி 800தான் இந்நிறுவனத்தின் முதல் கார். இந்த காரை வாங்கியவர் என்ற பெருமைக்கு உரியவர் டெல்லியை சேர்ந்த ஹர்பால் சிங். அப்போது குலுக்கல் முறையில்தான் அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த காருக்கான சாவியை, ஹர்பால் சிங்கிடம் வழங்கியது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி.
34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் உருண்டோடி விட்டன. தற்போது 2 கோடி கார்களை உற்பத்தி செய்து விட்டது மாருதி சுஸூகி. இந்நிறுவனத்திற்கு இன்று இந்தியாவில் 2 பிளாண்ட்கள் உள்ளன. அந்த 2 பிளாண்ட்களும் ஹரியானா மாநிலத்தில்தான் அமைந்துள்ளன.
இதுதவிர மாருதி நிறுவனத்தின் பார்ட்னரான சுஸூகி நிறுவனத்திற்கு குஜராத் மாநிலத்தில் ஒரு பிளாண்ட் உள்ளது. தற்போது இந்த 3 பிளாண்ட்களிலும் சேர்த்து, ஒரு வருடத்திற்கு 17.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் இது போதாது என்கிறது மாருதி சுஸூகி. வருடத்திற்கு 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என மாருதி சுஸூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்டி விட முடியும் என மாருதி சுஸூகி நிறுவனம் நம்புகிறது.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் அடுத்த இலக்கை கேட்டால், ஒரு நிமிடம் தலை சுத்தும். வருடத்திற்கு 50 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதுதான் மாருதி சுஸூகி நிறுவனத்தின் அடுத்த மெகா இலக்கு. அதாவது ஆண்டுக்கு 50 லட்சம் கார்களை விற்பனை செய்ய மாருதி சுஸூகி நிறுவனம் விரும்புகிறது.
இதில், 15 லட்சம் கார்கள் எலக்ட்ரிக் கார்களாக இருக்க வேண்டும் என மாருதி சுஸூகி நிறுவனம் நினைக்கிறது. இந்த மெகா இலக்கை, குறைந்தபட்சம் 2030ம் ஆண்டிற்குள் எட்டிவிட வேண்டும் என திட்டம் போட்டு, முயற்சி செய்து வருகிறது மாருதி சுஸூகி.
இதன்படி மாருதி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் 2020ம் ஆண்டில் லான்ச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை வேகன் ஆர் கார்தான் பெறப்போகிறது. இதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது.
இதுதவிர ஸ்விப்ட், ஆல்டோ, டிசையர், பலினோ கார்களின் எலக்ட்ரிக் வெர்ஷன்களை களமிறக்கவும் மாருதி சுஸூகி முடிவு செய்துள்ளது. 2 கோடி கார்கள் விற்பனை இலக்கை எட்டியமைக்காக, மாருதி சுஸூகி இந்தியா நிறுவனத்தின் MD & CEO கெனிச்சி அயுகவா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கெனிச்சி அயுகவா கூறுகையில், ''எங்களது மதிப்பு மிகுந்த வாடிக்கையாளர்கள், தொழில் ரீதியிலான பார்ட்னர்கள், பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கம் என அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்'' என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ''2 கோடி கார்களை விற்பனை செய்திருப்பதன் மூலம், மாருதி சுஸூகி என்ற பிராண்டின் மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம். தரம், பாதுகாப்பு, டெக்னாலஜியில் வாடிக்கையாளர்களுக்கு நன்கு சேவையாற்றி வருகிறோம்'' என்றார்.
மாருதி சுஸூகி நிறுவனம் இன்று 2 கோடி கார்களை விற்பனை செய்து விட்டது. இதில், முதல் 50 லட்சம் கார்களை விற்பனை செய்ய சுமார் 21 ஆண்டுகளை மாருதி சுஸூகி நிறுவனம் எடுத்து கொண்டது. 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முதல் 50 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை இந்நிறுவனம் படைத்தது.
அன்றில் இருந்து சுமார் 6 ஆண்டுகளில் (2011ம் ஆண்டு மார்ச் மாதம்), அடுத்த 50 லட்சம் கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்தது. ஆக, 1983ம் ஆண்டு டிசம்பர் முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒட்டுமொத்தமாக 1 கோடி கார்களை மாருதி சுஸூகி நிறுவனம் விற்பனை செய்து விட்டது.
இதன்பின்னர் அடுத்த 50 லட்சம் கார்களை, 2015ம் ஆண்டு மே மாதம் விற்பனை செய்தது மாருதி சுஸூகி. 2வது 50 லட்சம் கார்களுக்கும், மூன்றாவது 50 லட்சம் கார்களுக்கும் இடைப்பட்ட இடைவெளி 50 மாதங்கள். ஆனால் இதன் பின் வெகுவேகமாக கார்களை விற்பனை செய்தது மாருதி சுஸூகி.
இதன்மூலம் 2015ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது 2018ம் ஆண்டு ஜூலை வரை வெறும் 38 மாதங்களில், அடுத்த 50 லட்சம் கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்து விட்டது. ஆக மொத்தம் 34 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களில் 2 கோடி கார்களை மாருதி சுஸூகி விற்பனை செய்து தள்ளியுள்ளது.
விட்டாரா பிரெஸ்ஸாதான் மாருதி சுஸூகி நிறுவனம் உற்பத்தி செய்த 2 கோடியாவது கார். ஹரியானாவில் உள்ள பிளாண்ட்டில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனையை மற்ற நிறுவனங்கள் முறியடிப்பது சிரமமே. அதற்குள் மாருதி சுஸூகி புதிய சாதனையை படைத்து விடும்.
மாருதி சுஸூகி நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டில், மொத்தம் 16 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர ஐரோப்பா, ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகள் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதியும் செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!