Just In
- 1 hr ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 6 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 6 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 7 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இந்தியாவை புரட்டி போடபோகும் மோடியின் 7C திட்டம்… மீண்டும் ஒரு புதிய இந்தியாவிற்கு வாய்ப்பு….
பிரதமர் மோடி எதிர்கால இந்தியாவை மொபிலிட்டியை ஸ்மார்ட்டாகவும், மாற்று எரிபொருள் கொண்ட வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் மாற்ற 7C என்ற திட்டத்தை சர்வதேச மொபிலிட்டி உச்சி மாநாட்டில் அறிவித்துள்
பிரதமர் மோடி எதிர்கால இந்தியாவை மொபிலிட்டியை ஸ்மார்ட்டாகவும், மாற்று எரிபொருள் கொண்ட வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் மாற்ற 7C என்ற திட்டத்தை சர்வதேச மொபிலிட்டி உச்சி மாநாட்டில் அறிவித்துள்ளார். இதை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் பெட்ரோல் தேவை குறைவு, போக்குவரத்து நெருக்கடி குறைவு போன்ற பல பிரச்னைகள் தீரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் சர்வதேச மொபிலிட்டி உச்சி மாநாடு டில்லியில் நேற்றும் இன்றும் நடந்து வருகிறது. இந்த மாநாட்டை மத்திய அரசின் நிதி அயோக் அமைப்பு "MOVE" என்ற தலைப்பில் ஒருங்கினைத்துள்ளது. இதில் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவின் மொபிலிட்டியின் கீழ் முதலீடு செய்யும் நிறுவனங்களின் சிஇஓக்கள், அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து முக்கிய பங்காக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு போக்குவரத்தை எளிமைப்படுத்துவதும், அதன் மீதனான குழப்பங்களை தீர்ப்பதும் முக்கிய அம்சமாக இருக்கிறது.
இதை செய்வதன் மூலம் இந்தியாவின் அடுத்த தலைமுறையினருக்கு போக்குவரத்து துறையில் பெரும் வேலை வாய்ப்புக்களை உருவாகும். இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் இயங்கும் வாகனங்களில் 15 சதவீதம் மாற்று எரிபொருளை கொண்ட வாகனமாக இருக்க வேண்டும்.
மேலும் இந்தியாவில் பொது வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும், குறிப்பாக பஸ்கள், ஆட்டோ ரிக்ஷாக்களின் கட்டணத்தை குறைப்பதன் மூலம் மக்களை பொது வாகன ரக போக்குவரத்திற்கு எளிதாக கொண்டு வர முடியும்.
மேலும் இந்தியாவிற்கு இருக்கும் பெரும் சவால் போக்குவரத்து நெருக்கடி மற்றும் மாசு, இதில் பொது போக்குவரத்தை அதிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் பெரும் அளவில் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்தலாம். தற்போது போக்குவரத்து நெருக்கடியை முழுமையாக தீர்க்க பொளுளாதார மற்றும் சூழியல் தேவைகளை ஆராய்வே தற்போது முடியவில்லை.
இந்தியாவில் தற்போது 100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் விமான போக்குவரத்து, சாலை கட்டமைப்பு, ரயில் பாதை கட்டமைப்பு, துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம் விரைவாக நடந்து வருகிறது.
இந்தியாவின் அடுத்த சவாலான மாசுவை பொருத்தவரை அதை சமாளிக்க கிளின் எனர்ஜியை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அதன் மூலம் அந்த வாகனம் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டரும் கிளின் கீலோமீட்டராக இருக்கும்.
மத்திய அரசை பொருத்தவரை எதிர்கால இந்தியாவை புரட்டி போட இருக்கும் 7c கொள்ளைகளை பின்பற்றவிருக்கிறது. அது என்னெவ்ன்றால் காமென், கனெக்டெட், கன்வீனியென்ட், கன்ஜக்ஷன் ப்ரீ, சார்ஜ்டு, க்ளீன், மற்றும் கட்டிங் எட்ஜ், இந்த கொள்கைகளை உட்பட்டு உங்கள் தயாரிப்புகள் இருக்கும் என நம்புகிறேன், எதிர்கால இந்தியா யாரும் எதிர்பாராத இந்தியாவாக இருக்கட்டும்" என பேசினர்.
இந்த கூட்டரத்தில் சுமார் 2,200க்கும் மேற்பட்ட சர்வதேச ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதில் மத்திய அரசிற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் செல்ல தனிப்பாதை அல்லது தற்போது உள்ள நெடுஞ்சாலையில் தனி லேன்கள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி அறிவித்த 7c திட்டத்தில் காமென் என்பது பொது வாகன பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதையும், கனெக்டெட் என்பது போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் இணைப்பு வசதிகளையும், கம்வீனியென்ட் என்பது சுலபமான போக்குவரத்து வசதியையும், கன்ஜெக்ஷன் ப்ரீ என்பது போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் இருப்பதையும், சார்ஜ்டு என்பது மாற்று எரிபொருள் வாகனத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதையும், கட்டிங் எட்ஜ் என்பது குறைவான செலவில் இவைகளை செயல்படுத்துவதையும் குறிப்பதாக பொது வெளியில் பேசப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாருதி சுஸூகி நிறுவன சேர்மன் பார்கவா, ஹைபிரிட், எலெக்ட்ரிக், மற்றும் ஹைட்ரஜன் வாகனங்களை தயாரிக்க அந்நிறுவனம் ஆயத்தமாகி வருவதாக தெரிவித்தார். மேலும் அந்நிறுவனத்தின் வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கூட்டம் நடக்கும் இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் இந்த க்ளீன் எனர்ஜி பயன்பாடு மற்றும் மாற்று எரிபொருள் வாகனம் குறித்த பேச்சு கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதையடுத்து நிறுவன தலைவர்கள் அந்த கூட்டத்திலேயே தங்கள் நிறுவனம் இது குறித்து அடுத்த சில ஆண்டுகளில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பதை பேசினர்.
அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி துவக்கி வைத்த ஃபேம் 2 திட்டம் குறித்து இந்த கூட்டத்தில் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறித்து அவர் அவ்வளவாக பேசவில்லை, இது வந்திருந்தவர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை தந்தது. எனினும் இன்றும் கூட்டம் நடப்பதால் அதில் அவர் பேசுவார் என எதிர்பார்க்கலாம்.
மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் மராஸ்ஸோ என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் புகைப்பட ஆல்பத்தை உங்கள் பார்வைக்காக கீழே வழங்கியுள்ளோம்.. விரைவில் இந்த காரை நீங்கள் இந்திய ரோடுகளில் காணலாம்.
-
73 வயதில் நம்மால் எழுந்து நிற்க முடியுமானு கூட தெரியல!! இந்த பாட்டிக்கு வயசு வெறும் நம்பர் தான்!
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..