Just In
- 53 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறை... இலக்கு நிர்ணயித்து ஆள் பிடிக்கும் போலீசார்...
இனி சாலையில் பயணம் செய்கையில் தப்பி தவறி கூட இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். இல்லாவிட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
இனி சாலையில் பயணம் செய்கையில் தப்பி தவறி கூட இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். இல்லாவிட்டால் 6 மாதம் வரை சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும். வாகன ஓட்டிகளை சிறையில் அடைப்பதற்காக போலீசார் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் என்பது பெயரளவிற்குதான் இருக்கிறது. பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதே கிடையாது. சாலை விபத்துக்களின் காரணமாக, உலக அளவில் அதிக உயிர்களை பறி கொடுக்கும் நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதற்கு இதுவே காரணம்.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைந்து, வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, குடி போதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது என நம்மவர்களின் போக்குவரத்து விதிமுறை மீறல்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இந்த வகையில் நம்மவர்கள் செய்யும் முக்கியமான போக்குவரத்து விதிமீறல் நடைபாதையில் (Footpath) வாகனம் ஓட்டுவது. பாதசாரிகள் நடந்து செல்வதற்கு என சாலையில் இருபுறமும் ஆங்காங்கே நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முழுக்க முழுக்க பாதசாரிகள் நடந்து செல்வதற்காக மட்டுமே இந்த நடைபாதைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் நடைபாதையிலும் வாகனத்தை ஓட்டி செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் விரைவாக செல்ல வேண்டும் என்ற காரணங்களுக்காகவே, பெரும்பாலான வாகன ஓட்டிகள் இப்படி விதிமுறைகளை மீறி, நடைபாதையில் பயணம் செய்கின்றனர்.
Recommended Video
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த பிரச்னை உள்ளது. பாதசாரிகளின் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவதால், அவர்கள் நடந்து செல்ல வழி இல்லாமல் தவிக்கின்றனர். அத்துடன் விபத்து நிகழ்வதற்கான அபாயங்களும் உள்ளது.
பாதசாரிகள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டக்கூடாது என போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எதற்கும் இதுவரை உரிய பலன் கிடைக்கவில்லை.
அபராதம் விதித்தாலும் வாகன ஓட்டிகள் அதனை எளிதாக செலுத்தி விடுகின்றனர். அத்துடன் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர். எனவே இதனை எப்படி கட்டுப்படுத்துவது என யோசித்த போலீசார், தற்போது சிறை தண்டனை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.
ஆம், நடைபாதையில் வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 279ன் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகன ஓட்டிகளுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பெங்களூரு நகர போலீசார்தான் தற்போது இந்த அதிரடியான நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். ஏனெனில் நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த பிரச்னை இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூருவில்தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், ''பல்வேறு வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், நடைபாதையில் வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவேதான் தற்போது இந்த நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளோம்.
இந்த வார இறுதிக்குள் குறைந்தபட்சம் 500 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் நடைபாதையில் வாகனங்களை செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான எச்சரிக்கையை விடுப்பதே எங்களின் நோக்கம்.
இனிமேல் நடைபாதையில் வாகனங்களை செலுத்துவதற்கு முன்பாக வாகன ஓட்டிகள் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, நடைபாதையில் வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முடியும்'' என்றனர்.
பெங்களூர் மிரர் வெளியிட்டுள்ள செய்தியின்படி, காலை மற்றும் மாலை நேரங்களில்தான் வாகன ஓட்டிகள் இந்த தவறை அதிகம் செய்கின்றனர். குறிப்பாக மடிவாலா, கோரமங்களா, ஆடுகோடி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான வாகன ஓட்டிகள் நடைபாதையில் பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படுவதால், வருங்காலங்களில் நடைபாதையில் வாகனங்களை செலுத்தும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும் என்பது போலீசாரின் எதிர்பார்ப்பு. பாதசாரிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் அதுவே.
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!