Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 2 hrs ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அபராதம் என்ற பெயரில் பகல் கொள்ளை.. வாகன ஓட்டியிடம் 1.4 லட்ச ரூபாயை சுருட்டிய போலீசார்
போலீசாரின் தவறுதலால் வாகன ஓட்டி ஒருவர் 1.4 லட்ச ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
போலீசாரின் தவறுதலால் வாகன ஓட்டி ஒருவர் 1.4 லட்ச ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள மலபார் ஹில் பகுதியை சேர்ந்தவர் ரஹில் மெஹ்தா. வைர வியாபாரியான ரஹில் மெஹ்தாவிடம், ஹோண்டா அக்கார்டு மற்றும் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்கள் உள்ளன.
ஹோண்டா அக்கார்டு காரில் 84 முறையும், பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரில் 19 முறையும் என ஒட்டுமொத்தமாக 103 முறை ரஹில் மெஹ்தா அதிவேகத்தில் பயணித்துள்ளார். அதாவது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் அவரது கார் சென்றுள்ளது.
2018ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலத்தில், 103 முறை ரஹில் மெஹ்தாவின் கார்கள் அதிவேகத்தில் பயணித்துள்ளன. மும்பையில் உள்ள பந்த்ரா வொர்லி சீ லிங்க் பகுதியில்தான் இந்த விதிமீறல் நடைபெற்றுள்ளது.
ரஹில் மெஹ்தாவின் கார்கள் அதிவேகத்தில் பயணித்ததை, பந்த்ரா வொர்லி சீ லிங்க் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கண்டறிந்து விட்டன. ரஹில் மெஹ்தா ஒவ்வொரு முறை அதிவேகமாக சென்றதற்கும் தலா ரூ.1,000 என 103 முறைக்கு ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தனக்கு ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட தகவல் ரஹில் மெஹ்தாவிற்கு தெரியவில்லை. ஏனெனில் இதுதொடர்பாக அவருக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. இந்த சூழலில், கடந்த செப்டம்பர் 23ம் தேதி, மும்பையின் கிராஃபோர்டு மார்க்கெட் பகுதிக்கு ரஹில் மெஹ்தா சென்றார்.
அப்போது தவறுதலாக நோ பார்க்கிங் ஏரியாவில் தனது ஹோண்டா அக்கார்டு காரை, ரஹில் மெஹ்தா நிறுத்தி விட்டார். எனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் சுனில் பாட்டீல் என்பவர், ரஹில் மெஹ்தாவின் ஹோண்டா அக்கார்டு காரை பறிமுதல் செய்து விட்டார்.
பின்னர் அந்த காரின் பதிவு எண், போலீஸ் டேட்டா பேஸ் உடன் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போதுதான் ரஹில் மெஹ்தாவின் ஹோண்டா அக்கார்டு கார் 84 முறை அதிவேகமாக பயணித்திருப்பதும், அதற்கான அபராத தொகை ரூ.84 ஆயிரம் இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.
அத்துடன் தொடர் விசாரணையில், ரஹில் மெஹ்தாவிடம் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார் ஒன்று இருப்பதும், அந்த காருக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்தது. எனவே ஒட்டுமொத்த அபராத தொகையான ரூ.1.3 லட்சத்தை உடனே செலுத்தும்படி ரஹில் மெஹ்தாவிற்கு போலீசார் உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த விதிமீறல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தனக்கு எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை எனவும் ரஹில் மெஹ்தா தெரிவித்தார். ஆனால் அதனை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
எனவே உடனடியாக அபராத தொகை ரூ.1.3 லட்சத்தை ரஹில் மெஹ்தா செலுத்தி விட்டார். அத்துடன் கிராஃபோர்டு மார்க்கெட் பகுதியில், ஹோண்டா அக்கார்டு காரை நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியதற்கான அபராத தொகை ஆயிரம் ரூபாயையும் ரஹில் மெஹ்தா செலுத்தி விட்டார்.
ஒட்டுமொத்தமாக ரூ.1.4 லட்சத்தை ரஹில் மெஹ்தா அபராதமாக செலுத்தியுள்ளார். மும்பையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ரஹில் மெஹ்தாவிற்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகையை போலீசார் அபராதமாக விதிக்கவில்லை.
முன்னதாக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பாலிவுட் நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலருக்கும் ரூ.103 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த 103 கோடி ரூபாயை வசூலிக்கும் பணியை மும்பை போலீசார் தற்போது தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ரஹில் மெஹ்தாவிற்கு போலீசார் முன்கூட்டியே உரிய முறையில் தகவல் தெரிவித்திருந்தால், அதிவேகம் என்ற தவறை அடுத்த முறை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். எனவே ஏதேனும் அபராதம் நிலுவையில் உள்ளதா? என முன்கூட்டியே தெரிந்து கொள்வதே பாதுகாப்பான ஒன்றாக இருக்கும்.
நிலுவையில் உள்ள அபராதங்களை தெரிந்து கொள்ளவும், அதனை செலுத்தவும் செல்போன் ஆப் ஒன்றை மும்பை போலீசார் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளனர். இதன் பெயர் மும்பை டிராபிக் போலீஸ் (Mumbai Traffic Police-MTP) ஆப்.
இதனை முதலில் உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் உள்ள My Vehicles என்ற பகுதியில், உங்கள் செல்போன் எண், கார் அல்லது டூவீலரின் பதிவு எண் ஆகியவற்றை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் My E-Challans என்ற பகுதியில் சென்று பார்த்தால், ஏதேனும் அபராதம் நிலுவையில் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் ரஹில் மெஹ்தாவிற்கு ஏற்பட்டது போன்ற மோசமான அனுபவத்தை மும்பைவாசிகள் தவிர்க்கலாம்.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!