Just In
- 26 min ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 30 min ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இந்த கார் உயிருக்கே ஆபத்து.. திடீரென தீப்பற்றியதால் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கி பலியான தொழிலதிபர்
கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். எவ்வளவு முயன்றும் அவரால் காரை விட்டு வெளியே வர முடியவில்லை.
கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். எவ்வளவு முயன்றும் அவரால் காரை விட்டு வெளியே வர முடியவில்லை. சம்பந்தப்பட்ட கார் நாடு முழுவதும் ஆங்காங்கே திடீர் திடீரென தீப்பற்றி எரிவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரை சேர்ந்த தொழிலதிபர் மிஹிர் பன்ச்சால். வதோதரா நகரில் மிகவும் பிரபலமான நபரான மிஹிர் பன்ச்சால், ஃபோர்டு என்டேவர் கார் ஒன்றை வைத்துள்ளார். சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புடைய இந்த காரை, கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் வாங்கியிருந்தார்.
இந்த சூழலில் நேற்று (நவ. 20) காலை 11 மணியளவில், தனது ஃபோர்டு என்டேவர் காரில், மிஹிர் பன்ச்சால் பயணித்து கொண்டிருந்தார். மிஹிர் பன்ச்சால்தான் காரை ஓட்டி சென்றார். வேறு யாரும் காரில் உடன் பயணம் செய்யவில்லை.
அப்போது காரின் இன்ஜினில் திடீரென தீப்பற்றியது. இதை உடனடியாக கவனித்து விட்ட மிஹிர் பன்ச்சால், ஒரு வழியாக போராடி காரை சாலையோரமாக நிறுத்தினார். அவர் சாலையோரமாக நிறுத்திய நேரத்தில், காரில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனால் மிஹிர் பன்ச்சால் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி விட அவர் முயற்சி செய்தார். ஆனால் அந்த நேரத்தில் அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தார். சீட் பெல்ட்டை கழற்ற அவர் தீவிரமாக முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை.
துரதிருஷ்டவசமாக சீட் பெல்ட் ஜாம் ஆகி விட்டது. அது செயல்படவே இல்லை. இதனால் சீட் பெல்ட்டை கழற்றி விட்டு, காரை விட்டு மிஹிர் பன்ச்சாலால் வெளியேற முடியவில்லை. கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காருக்குள் மிஹிர் பன்ச்சால் அப்படியே சிக்கி கொண்டார்.
சாலையோரமாக கார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வந்த நேரத்தில் கார் முழுவதும் தீயில் எரிந்து விட்டது.
காருக்குள் சிக்கி கொண்டிருந்த மிஹிர் பன்ச்சால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கொளுந்து விட்ட எரிந்த காரில், சீட் பெல்ட்டை கழற்ற முடியாததால், தொழிலதிபர் ஒருவர் சிக்கி கொண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இத்தனைக்கும் அது புது கார். அதனை வாங்கி ஒரு மாத காலம்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் திடீரென தீப்பற்றி, அதன் உரிமையாளரது உயிரை குடித்து விட்டது. கார் திடீரென தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் ஃபோர்டு என்டேவர் கார் ஒன்று தீப்பற்றி எரிவது இது முதல் முறை அல்ல என்பதும் கவனிக்கத்த விஷயம். டாக்டர் சரனா ரெட்டி என்பவருக்கு சொந்தமான ஃபோர்டு என்டேவர் கார் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அப்போதும் காரின் இன்ஜினில்தான் முதலில் தீப்பற்றியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
டாக்டர் சரனா ரெட்டியின் காரில் தீப்பற்றியது ஏன்? என்பதற்கான காரணமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பாணியில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இதில், தொழிலதிபர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆனால் இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து, ஃபோர்டு நிறுவனம் இதுவரை எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஃபோர்டு என்டேவர் எஸ்யூவி வகையை சேர்ந்த கார் ஆகும். என்டேவர் காரை லான்ச் செய்வதற்கு முன்பாக ஃபோர்டு நிறுவனம் அதனை பல்வேறு இடங்களில் டெஸ்ட் செய்து பார்த்தது.
அப்போது ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு முறை இதேபோல் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. ஆனால் அந்த குறைபாடுகளை ஃபோர்டு நிறுவனம் நிவர்த்தி செய்யாததன் காரணமாகவே தற்போது இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஃபோர்டு என்டேவர் கார்கள் தொடர்ச்சியாக திடீர் திடீரென தீப்பற்றி எரிந்து வரும் சம்பவங்கள், நாடு முழுவதும் உள்ள அதன் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வருங்காலங்களில் ஃபோர்டு என்டேவர் காரின் விற்பனை சரிவடையலாம் என கூறப்படுகிறது.
TV9 Gujarati வெளியிட்டுள்ள செய்தியின்படி, உயிரிழந்த மிஹிர் பன்ச்சாலுக்கு 42 வயதாகிறது. வதோதரா நகர மக்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமான நபராக இருந்து வந்தார். இந்த சூழலில் பரிதாபமான முறையில் அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் டிரைவ்ஸ்பார்க் யூ டியூப் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்
டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ டியூப் சேனலை பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!