Just In
- 47 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 52 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அம்பானி, அதானிக்கு புதிய பிஸ்னஸ் பிளான் போட்டு கொடுக்கும் மோடி… போக்குவரத்து துறை தனியார் மயம்
இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவது மூலம் தற்போது உள்ள ஓட்டை உடைசல் பஸ்களை மாற்றி புதிய பஸ்களை குறை
இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு மாஸ்டர் பிளான் ஒன்றை வகுத்துள்ளது. அதாவது போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதன் மூலம், தற்போது உள்ள ஓட்டை, உடைசல் பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை குறைந்த செலவில் இயக்க முடியும் என்றும், நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் போக்குவரத்து துறையை லாபகரமான பாதைக்கு கொண்டு வர முடியும் என்றும் அரசு நம்புகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில், அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வரும் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்பின் படிப்படியாக மக்கள் மத்தியிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களை பயன்படுத்தும்படி மக்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.
இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களையும் பயன்படுத்தும்படி, மாநில அரசுகளும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை கோவை, ஓசூர் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில், அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகளவில் வாங்க வேண்டும் என்பதற்காக, மானியம் வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு, ஃபேம் என்ற அமைப்பு மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஃபேம் அமைப்பு முதல் கட்ட பணிகளை முடித்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி ஆயோக் அமைப்பு, புதிதாக ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போக்குவரத்து கழகங்களில் தற்போது உள்ள பஸ்கள், டீசல் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், பெரும்பாலான ரூட்களில் இயங்கும் பஸ்கள் நஷ்டத்தையே ஏற்படுத்துகின்றன. எனவே ஒரு சில ரூட்களில் கிடைக்கும் லாபத்தை வைத்தே போக்குவரத்து கழகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதை கருத்தில் கொண்டு தற்போது தனியார் நிறுவனங்களுக்கு, நிதி ஆயோக் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி தனியார் நிறுவனங்களுக்கு தற்போது உள்ள ரூட் தரப்படும். தனியார் நிறுவனங்கள் அந்த ரூட்டில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க வேண்டும்.
பஸ் இயக்கம் மற்றும் பராமரிப்பு முழுவதும் தனியாரின் செலவு. பஸ்சின் பேட்டரிக்கு செலவாகும் மின்சாரத்தை அரசு வழங்கும். அத்துடன் பஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் அரசு வசூலிக்கும்.
இதில் கிடைக்கும் லாபத்தில், தனியார் நிறுவனங்களுக்கு பங்கு வழங்கப்படும். இதன் மூலம் பஸ்களுக்கான பராமரிப்பும், இயக்கமும் தனியார் வசம் சென்றுவிடும். அத்துடன் தற்போது அரசிடம் உள்ள ஒட்டை, உடைசல் பஸ்களை இனி செயல்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது.
இதற்காகதான் தற்போது தனியார் நிறுவனங்களுக்கு, நிதி ஆயோக் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் அரசுடன் பங்குதாரராக சேர, அக். 4ம் தேதிக்குள் ஒப்பந்தங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஒப்பந்தங்கள் மீது, அக்.12ம் தேதி விவாதம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.
தற்போது போக்குவரத்து கழகங்கள் எல்லாம் மாநில அரசின் வசம்தான் இருக்கின்றன. ஏற்கனவே மும்பை, ஐதராபாத், மணாலி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், அந்தந்த மாநில அரசுகள், எலெக்ட்ரிக் பஸ்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன. தமிழக அரசு இன்னும் சில நாட்களில் சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை களம் இறக்கவுள்ளது.
இந்நிலையில் நிதி ஆயோக் தற்போது பங்குதாரர்களாக இணைக்கவுள்ள தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள், மாநில அரசிற்கு பிடித்திருந்தால், அவர்களும் அதை பயன்படுத்தி தங்கள் மாநிலங்களில் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம். இந்த தகவலை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது 1.5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 2023ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஓடும் ஒட்டுமொத்த வாகனங்களில் 5 சதவீத வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.
எனினும் கடந்த நிதியாண்டில் விற்பனையான ஒட்டுமொத்த வாகனங்களில் வெறும் 1 சதவீத வாகனங்கள்தான் எலெக்ட்ரிக் வாகனங்களாக அமைந்தன. கர்நாடகா, மஹாராஷ்டிரா, உ.பி., ஆந்திரா மற்றும் கோவா மாநிலங்களில் அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
நிதி ஆயோக் அமைப்பு தற்போது திட்டமிட்டுள்ளபடி மாற்று எரிபொருள் கொண்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சென்றுவிட்டால், ஆண்டுதோறும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அரசு செலவிட்டு வரும் 300 பில்லியன் டாலர் அதாவது ரூ.20 லட்சம் கோடியை மிச்சப்படுத்த முடியும். மேலும் 1 ஜிகா டன் அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு வெளியாவதையும், 2030ம் ஆண்டிற்குள் குறைக்க முடியும் என தெரியவந்துள்ளது.
பாலாவின் பார்வையில்:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் டீசல் பஸ்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த நிலைமையை மாற்ற எலெக்ட்ரிக் பஸ்கள் நிச்சயமாக கை கொடுக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இதே திட்டத்தை செயல்படுத்தி பார்த்துள்ளனர். தினம் ரூ.7000 நஷ்டம் ஏற்படுத்தி வந்த ரூட்டில், எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கியதால், ரூ.8000 லாபம் கிடைத்தது. எனவே இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு வருவது வரவேற்க்கத்தக்கதுதான்.
எனினும் இது போன்ற தனியார் மயமாக்கல்களில், அம்பானி, அதானி போன்றவர்கள், தங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களை கொண்டு வந்து, கொள்ளை லாபம் எடுத்துகொண்டு போகவும் வாய்ப்புள்ளது. எனவே தனியார் நிறுவனங்களுக்கு பதிலாக, பஸ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கே அரசு இந்த வாய்ப்பை வழங்கும் பட்சத்தில், பஸ்சின் பராமரிப்பு மற்றும் இயக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும். மேலும் இந்த செயல்பாடுகளானது, சிறு நிறுவனங்களை ஊக்குவிப்பதாகவும் இருக்கும்.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்