Just In
- 17 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
லோடு ஆட்டோவில் பயணித்து விபத்தில் சிக்கியவர்களுக்கு நஷ்டஈடு இல்லை! 7 ஆண்டிற்கு பின் வந்த தீர்ப்பு
2011ம் ஆண்டு லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்று விபத்தில் சிக்கி பலியான சம்பவத்தில் பலியானவர்களுக்கு இன்சூரன்ஸ் கோர உரிமையில்லை என்று சென்னை உயர்நீதின்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உழுக்கிய இ
2011ம் ஆண்டு லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்று விபத்தில் சிக்கி பலியான சம்பவத்தில் பலியானவர்களுக்கு இன்சூரன்ஸ் கோர உரிமையில்லை என்று சென்னை உயர்நீதின்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உழுக்கிய இந்த சம்பவத்திற்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது.
சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லும் போது விபத்தில் சிக்கினால் சரக்கு வாகனத்தில் சென்ற நபர்கள் பலியானாலோ அல்லது காயமடைந்தாலோ அவர்கள் அதற்கான நஷ்ட ஈடை பெற தகுதியற்றவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சுமார் 15 பேர் லோடு ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தனர்.
அந்த லோடு ஆட்டோ சரியாக ரயில்வே கிராங்கிகை கடக்கும் போது பழுதானால் நடுவழியில் நின்றது. அந்த நேரம் பார்த்து அந்த வழியாக ரயில் வந்தது. எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மீது மோதிய விபத்தில் பலர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் அப்பொழுது தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. பலர் இந்த சம்பவம் குறித்தே பல விவாதங்களை நடத்தினர். இந்நிலையில் லோடு ஆட்டோவினர் பாரதிஆக்ஸா என்ற நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுத்திருந்தனர்.
அவர்கள் லோடு ஆட்டோ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என கேட்டபோது அந்நிறுவனம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனத்தின் மீது தர்மபுரி கோர்ட்டில் வழக்கு தொடுக்கபட்டது. அந்த வழக்கில் பலியானவர்களுக்க நஷ்ட ஈடை வழங்க கோரி கடந்த 2014ம் ஆண்டு செப் 23ம் தேதி தீர்ப்பு வெளியானது.
ஆனால் பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
சுமார் 4 ஆண்டுகள் வரை விசாரணை நடந்தது. இதில் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மோட்டார் வாகன சட்ட பிரிவு 147ஐ குறிப்பிட்டு இந்த சட்டத்தின் படி லோடு ஆட்டோவில் ஆட்கள் பயணித்து விபத்திற்குள்ளானால் அதற்கான பொறுப்பை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்க தேவையில்லை என்று வாதிட்டனர்.
மோட்டார் வாகன சட்ட பிரிவு 147ன் படி லோடு ஆட்டோவில், அதன் டிரைவர்/ ஓனர் மற்றும் லோடு ஏற்றி செல்லும் லோடின் டிரைவர் அல்லது அவர்களுக்கான பிரதிநிதி மட்டுமே பயணம் செய்யலாம். மற்றவர்கள் பயணம் செய்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸை கோர முடியாது.
மேலும் லோடின் ஓனர்கள் விபத்தில் சிக்கினாலும் வாகனம் விபத்தில் சிக்கிய நேரத்தில் வாகனத்தில் அவர்களது லோடு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவர்களுக்கான இன்சூரன்ஸிற்கும் இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கிற்கு தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி நாட்டில் சட்டபுறம்பாக வாகனங்களில் பயணிப்பதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இதை கட்டுப்படுத்த வேண்டியதும், அதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டியதும் அரசின் கடமை. அதே நேரத்தில் இன்சூரன்ஸ் வழங்கப்படும் போதே அதற்கான விதிகள் சரியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி லோடு ஆட்டோக்களில் அனுமதிக்கபட்ட நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் பணத்தை கோரும் உரிமை உள்ளது. விதிமுறைகளை மீறி பயணம் செய்பவர்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இன்சூரன்ஸ் பணத்தை கோர முடியாது.
விதிமுறை மீறி பயணம் செய்யும் போது வாகனம் விபத்திற்குள்ளானால் விதிமுறைகளை மீறி பயணம் செய்தவர்களுக்கு அந்த வாகனத்தின் உரிமையாளரே பொறுப்பு.
இது குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் சட்ட விதிமுறைகளை மீறி பயணிப்பவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றத்தால் மீற முடியாது. ஆகையால் இந்த வழக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பென்ச் தீர்ப்பளித்தது.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
குறிப்பிட்ட சம்பவம் நடந்து சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் தற்போது உள்ளது. அவர்கள் மேல் முறையீடு செய்தால் மேலும் இந்த வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்படலாம் என தெரிகிறது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு