Just In
- 4 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
லோடு ஆட்டோவில் பயணித்து விபத்தில் சிக்கியவர்களுக்கு நஷ்டஈடு இல்லை! 7 ஆண்டிற்கு பின் வந்த தீர்ப்பு
2011ம் ஆண்டு லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்று விபத்தில் சிக்கி பலியான சம்பவத்தில் பலியானவர்களுக்கு இன்சூரன்ஸ் கோர உரிமையில்லை என்று சென்னை உயர்நீதின்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உழுக்கிய இ
2011ம் ஆண்டு லோடு ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்று விபத்தில் சிக்கி பலியான சம்பவத்தில் பலியானவர்களுக்கு இன்சூரன்ஸ் கோர உரிமையில்லை என்று சென்னை உயர்நீதின்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உழுக்கிய இந்த சம்பவத்திற்கு சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது.
சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்லும் போது விபத்தில் சிக்கினால் சரக்கு வாகனத்தில் சென்ற நபர்கள் பலியானாலோ அல்லது காயமடைந்தாலோ அவர்கள் அதற்கான நஷ்ட ஈடை பெற தகுதியற்றவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பங்கேற்ற சுமார் 15 பேர் லோடு ஆட்டோ ஒன்றில் பயணம் செய்தனர்.
அந்த லோடு ஆட்டோ சரியாக ரயில்வே கிராங்கிகை கடக்கும் போது பழுதானால் நடுவழியில் நின்றது. அந்த நேரம் பார்த்து அந்த வழியாக ரயில் வந்தது. எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோ மீது மோதிய விபத்தில் பலர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் அப்பொழுது தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. பலர் இந்த சம்பவம் குறித்தே பல விவாதங்களை நடத்தினர். இந்நிலையில் லோடு ஆட்டோவினர் பாரதிஆக்ஸா என்ற நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுத்திருந்தனர்.
அவர்கள் லோடு ஆட்டோ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும் என கேட்டபோது அந்நிறுவனம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனத்தின் மீது தர்மபுரி கோர்ட்டில் வழக்கு தொடுக்கபட்டது. அந்த வழக்கில் பலியானவர்களுக்க நஷ்ட ஈடை வழங்க கோரி கடந்த 2014ம் ஆண்டு செப் 23ம் தேதி தீர்ப்பு வெளியானது.
ஆனால் பாரதி ஆக்ஸா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
சுமார் 4 ஆண்டுகள் வரை விசாரணை நடந்தது. இதில் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் மோட்டார் வாகன சட்ட பிரிவு 147ஐ குறிப்பிட்டு இந்த சட்டத்தின் படி லோடு ஆட்டோவில் ஆட்கள் பயணித்து விபத்திற்குள்ளானால் அதற்கான பொறுப்பை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்க தேவையில்லை என்று வாதிட்டனர்.
மோட்டார் வாகன சட்ட பிரிவு 147ன் படி லோடு ஆட்டோவில், அதன் டிரைவர்/ ஓனர் மற்றும் லோடு ஏற்றி செல்லும் லோடின் டிரைவர் அல்லது அவர்களுக்கான பிரதிநிதி மட்டுமே பயணம் செய்யலாம். மற்றவர்கள் பயணம் செய்தால் அவர்களுக்கு இன்சூரன்ஸை கோர முடியாது.
மேலும் லோடின் ஓனர்கள் விபத்தில் சிக்கினாலும் வாகனம் விபத்தில் சிக்கிய நேரத்தில் வாகனத்தில் அவர்களது லோடு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அவர்களுக்கான இன்சூரன்ஸிற்கும் இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிந்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கிற்கு தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி நாட்டில் சட்டபுறம்பாக வாகனங்களில் பயணிப்பதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இதை கட்டுப்படுத்த வேண்டியதும், அதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டியதும் அரசின் கடமை. அதே நேரத்தில் இன்சூரன்ஸ் வழங்கப்படும் போதே அதற்கான விதிகள் சரியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி லோடு ஆட்டோக்களில் அனுமதிக்கபட்ட நபர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் பணத்தை கோரும் உரிமை உள்ளது. விதிமுறைகளை மீறி பயணம் செய்பவர்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இன்சூரன்ஸ் பணத்தை கோர முடியாது.
விதிமுறை மீறி பயணம் செய்யும் போது வாகனம் விபத்திற்குள்ளானால் விதிமுறைகளை மீறி பயணம் செய்தவர்களுக்கு அந்த வாகனத்தின் உரிமையாளரே பொறுப்பு.
இது குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் சட்ட விதிமுறைகளை மீறி பயணிப்பவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
அந்த தீர்ப்பை உயர்நீதிமன்றத்தால் மீற முடியாது. ஆகையால் இந்த வழக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பென்ச் தீர்ப்பளித்தது.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
குறிப்பிட்ட சம்பவம் நடந்து சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் தற்போது உள்ளது. அவர்கள் மேல் முறையீடு செய்தால் மேலும் இந்த வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்படலாம் என தெரிகிறது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!