Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 2 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உங்கள் பைக்கில் உங்கள் நண்பர் சென்று விபத்தில் சிக்கினால் இன்சூரன்ஸ் கிடையாது..!
உங்கள் பைக்கில் உங்கள் நண்பர் செல்லும் போது விபத்திற்குள்ளானால் அந்த விபத்திற்காக மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் இழப்பீட்டை கோர முடியாது என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உங்கள் பைக்கில் உங்கள் நண்பர் செல்லும் போது விபத்திற்குள்ளானால் அந்த விபத்திற்காக மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் இழப்பீட்டை கோர முடியாது என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்திற்கு இன்சூரன்ஸ் மிகவும் அவசியமானது. உங்கள் வாகனம் விபத்தில் சிக்கினால் உங்களால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கான நஷ்டஈட்டை வழங்குவதற்காக அரசு இதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில் மூன்றாம் நபருக்கான வாகன காப்பீட்டை பயன்படுத்தி சில முறைகேடுகளில் ஈடுபட துவங்கியதாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மத்தியில் புகார்கள் எழுப்பப்பட்டது.
அதாவது வாகனத்தின் உரிமையாளர் அல்லாமல் மற்றவர் வாகனத்தை ஓட்டி செல்லும் போது விபத்து ஏற்பட்டால் அந்த மூன்றாம் நபருக்கு ஏற்பட்ட காயத்திற்கு நஷ்ட ஈடு வழங்க கோரி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் மூலம் கோரப்படுகிறது.
மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது இன்சூரன்ஸ் எடுத்த வாகனம் சிக்கிய விபத்தில் இந்த வாகனத்திற்கும், வாகனத்தின் உரிமையாளருக்கும் தொடர்பில்லாத ஒருவர் காயமடைந்தால் மட்டுமே அவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டள்ளது.
தற்போது சொந்த வாகனத்திலேயே சென்ற மூன்றாம் நபருக்காக இன்சூரன்ஸ் தொகை கோருவது குறித்த விளக்கம் சட்டங்களில தெளிவாக இல்லை. இது குறித்து சங்கீதா என்ற பெண் உட்பட சிலர் கர்நாடக மாநிலத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், ஒருவர் தனது சொந்த செயல்கள் மூலம் நடந்த விபத்திற்கு அவரால் மூன்றாம் நபருக்கான இழப்பீடை கோர முடியாது என உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் அந்த வாகனம் முழு காப்பீடு பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்கள் இழப்பீட்டு தொகையை கோரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது குறித்த சட்ட திருத்தத்தை மேற்கொண்ட 1988ம் ஆண்டு மோட்டர் வாகன சட்டம் பிரிவு 166ஐ திருத்தும் படி பரிந்துரை செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பைக்குகளில்தான் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் பைக்குகளை சரியாக பராமரிக்காமல் அதனால் ஏற்படும் விபத்துக்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் தற்போது புகார் கூறப்பட்டு வருகிறது.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!