Just In
- 10 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முதலில் இதை செய்து விடுங்கள்.. இல்லாவிட்டால் உங்கள் காரை எப்போது வேண்டுமானாலும் போலீசார் தூக்கலாம்..
இந்தியாவில் வாகனங்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். இதனால் வாகனங்கள் வாங்கும் போதே இன்சூரன்ஸூம் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வாகனங்களுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். இதனால் வாகனங்கள் வாங்கும் போதே இன்சூரன்ஸூம் வழங்கப்படுகிறது.
புதிய வாகனம் வாங்கும் போது ஒரு வருட இன்சூரன்ஸ் மட்டுமே கட்டாயம் வழங்கப்படுகிறது. அதன் பின் அவர்கள்தான் அதை அவர்களது வசதிக்கு ஏற்றார்போல் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான மதிப்பீடு கொண்ட இன்சூரன்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும்.
தற்போது பெறப்படும் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் காலம் உயர்த்தப்பட்டிருந்தாலும், பழைய கார்கள் இவ்வாறே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அந்த வாகனங்களின் இன்சூரன்ஸை புதுப்பிக்காமலேயே தொடர்ந்து சாலைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வப்போது போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டாலும் அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இவர்கள் தொடர்ந்து இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களையே சாலைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் விபத்தில் சிக்காத வரை அரசிற்கு பிரச்னை இல்லை. ஆனால் அந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அரசு பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியது உள்ளது.
இந்த கார்கள் விபத்தில் சிக்கி அதில் மூன்றாம் நபருக்கு ரத்த காயமோ உயிரிழப்போ ஏற்பட்டால் அவர்கள் நேரடியாக கோர்ட்டில் வந்து அதற்கான நஷ்டஈடை கோருகின்றனர். அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இல்லாததால் கோர்ட்டை தவிர வேறு வழியில்லை.
இந்த சம்பவத்தில் காரின் உரிமையாளர் இன்சூரன்ஸ் வாங்காத தவறுக்கு கார் விபத்தில் சிக்கிய மூன்றாம் நபர் இன்னல்களை சந்திக்க வேண்டியது உள்ளது.
சமீபத்தில் இது குறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் விபத்தில் பாதிக்கப்படும் மூன்றாம் நபர் எந்த தவறும் செய்யாதவர். அதே நேரத்தில் விபத்தும் தவிர்க்க முடியாதவையே.
இவ்வாறான சம்பவங்கள் இனி நிகழ்ந்தால் அதில் பாதிக்கப்பட்ட நபருக்கான நஷ்ட ஈட்டை இன்சூரன்ஸ் பெறாத வாகனத்தின் உரிமையாளரேதான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
கோர்ட் வழங்க சொல்லிய நஷ்ட ஈட்டை வாகனத்தின் உரிமையாளரால் வழங்க முடியவில்லை என்றால் அவர் மீது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்படலாம். இறுதியாக அவர் சிறைக்கு செல்லாம்.
அவ்வாறு நடந்தால் பாதிக்கப்பட்ட நபருக்கான நஷ்ட ஈடு கிடைக்காது. முதலில் வழக்கு தொடரப்பட்டதே நஷ்டத்தை ஈடு செய்ய கோரிதான். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் நஷ்டத்தை ஈடு செய்யவே முடியாது. இதை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் கோர்ட்டிற்கு சென்றது. அதில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் விபத்தை ஏற்படுத்தி அதில் பாதிக்கப்படும் மூன்றாம் நபருக்கு ஏற்படும் நஷ்டத்தை இன்சூரன்ஸ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஈடு செய்ய வேண்டும்.
இதை அவர்கள் சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அது பொதுவெளியில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை மூன்றாம் நபருக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
இதன் மூலம் இனி இந்தியாவில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் விபத்தை ஏற்படுத்தினாலும் அதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலர் இன்சூரன்ஸ் வாங்கும் போது மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸைதான் அதிகமாக விரும்புகின்றனர். அதற்கான முக்கிய காரணம் அதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் குறைவும், அரசும் அதை மட்டும் தான் கட்டாயமாக்கியுள்ளது.
ஆனால் சொந்த சேதாரத்திற்கான இன்சூரன்ஸூம் மார்கெட்டில் உள்ளது. சொந்த சேதாரம் மற்றும் மூன்றாம் நபருக்கான சேதாரம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக காம்பிரஹேன்ஸிவ் இன்சூரன்ஸ் என்ற வகை இன்சூரன்ஸூம் உள்ளது.
இது போன்ற செய்திகளை உங்கள் மொபைலில் உடனுக்குடன் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீங்கள் உங்களது தேவையை கணக்கிட்டு இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் விபத்தில் சிக்கினால் உங்களுக்கு கிடைக்கும் தொகையையும் கணக்கிட்டு உங்களுக்கு தகுந்த இன்சூரன்ஸை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!