Just In
- 55 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 9 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 கார்கள் மட்டுமே விற்பனை.. பிகோ உற்பத்தியை நிறுத்த ஃபோர்டு முடிவு?
செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 பிகோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. எனவே பிகோ காரின் உற்பத்தியை நிறுத்தி விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தில் வெறும் 5 பிகோ கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. எனவே பிகோ காரின் உற்பத்தியை நிறுத்தி விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு (Ford). இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று பிகோ (Figo). ஆனால் சமீப காலமாக பிகோ கார்களின் விற்பனை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.
இதன் உச்சகட்டமாக 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் சேர்த்து வெறும் 5 பிகோ கார்களை மட்டுமே ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதற்கு முன்னதாக வேறு எப்போதும் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் பிகோ கார்கள் விற்பனையானது இல்லை.
இந்த எண்ணிக்கையானது ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களில் ஒன்றான மஸ்டங்கை விட குறைவு என்பது மற்றொரு கவனிக்கத்தக்க அம்சமாகும். ஏனெனில் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 12 மஸ்டங் கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் உள்ள சில ஃபோர்டு நிறுவன டீலர்கள், பிகோ காருக்கு டெலிவரி எடுப்பதை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பிகோ காரின் உற்பத்தியை நிறுத்தி விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
விற்பனை கடுமையான சரிவை சந்தித்து இருப்பதால்தான், தற்போது உள்ள பிகோ காரின் உற்பத்தியை நிறுத்தி விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ செய்தி எதனையும் ஃபோர்டு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது புதிய பிகோ காரை 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக மட்டும் ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஃபோர்டு பிகோ காரானது வெளிநாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதனிடையே பிகோ காரின் விற்பனை மட்டுமல்லாது ஃபோர்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு கார்கள் விற்பனையும் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஃபோர்டு நிறுவனமானது உள்நாட்டில் 8,230 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த கால கட்டத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஃபோர்டு நிறுவன கார் என்ற பெருமையை எகோ ஸ்போர்ட் பெறுகிறது.
2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 3,789 ஃபோர்டு எகோ ஸ்போர்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த இடங்களை ஃப்ரீஸ்டைல் (2,302) மற்றும் ஆஸ்பயர் (1,640) ஆகியவை பிடித்துள்ளன.