Just In
- 1 hr ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 1 hr ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- 2 hrs ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 3 hrs ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
Don't Miss!
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ 35க்கு வழங்க பதஞ்சலி நிறுவனம் தயார்: பாபா ராம்தேவ்
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ரூ.80ஐ தாண்டி விற்பனையாகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள 12 நகரங்களல் இன்று பெட்ரோல் விலை ரூ.90ஐ தாண்டிவிட்டது. மக்கள்
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ரூ.80ஐ தாண்டி விற்பனையாகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள 12 நகரங்களில் இன்று பெட்ரோல் விலை ரூ.90ஐ தாண்டிவிட்டது. மக்கள் மத்தியில் தற்போது இதுதான் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.
பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த பலர் பல இடங்களில் இருந்து பல்வேறு விதமான யோசனைகளை சொல்லி வருகின்றனர். மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என்று சிலரும், மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என்று சிலரும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கர்நாடக மாநில அரசானது, செஸ் வரியை குறைத்துள்ளது. அதாவது கர்நாடகாவில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.2 குறையும் வகையில், வரி குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் இது போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபா ராம்தேவ், பெட்ரோலை தன்னால் ரூ.35க்கு வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
டில்லியில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்த போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது : "பிரதமர் மோடியின் கொள்கையை பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் அவர் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலைவாசி உயர்வு, மோடி அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதை 2019 தேர்தலில் மோடி சந்திக்க வேண்டும். அதே நேரத்தில் அவரின் தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்த திட்டம் எதிர்காலத்தில் இந்தியாவை பெருமைப்படுத்தும் ஒரு திட்டமாக மாறும் என எனக்கு நம்பிக்கை உள்ளது.
மத்திய அரசு ஒத்துழைத்தால், பதஞ்சலி நிறுவனம் மூலம் பெட்ரோலை ஒரு லிட்டர் ரூ.35க்கு விற்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கு மத்திய அரசு சில வரிச்சலுகைகளை வழங்க வேண்டும். அவ்வாறு நடந்தால் நாட்டில் உள்ள அனைவருக்கும் ரூ.35க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்கும்.
தற்போது மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது வரி போடுவதை குறை சொல்கின்றனர். இந்த வரியை நிறுத்தி விட்டால், அரசிடம் உள்ள பணம் குறைந்து காலியாகிவிடும். இதனால் எதிர்காலத்தில் சிறந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்த முடியாது.
அதே நேரத்தில் பெட்ரோலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வர பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். என் விருப்பமும் அதுதான். பெட்ரோல், டீசலை கண்டிப்பாக ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வந்தாலும், அதை கட்டாயம் 28 சதவீதமாக வைக்ககூடாது.
அந்த வரி விதிப்பு என்பது மிக குறைவான ஒரு வரி விதிப்பு. இதைக்கொண்டு நாட்டின் வருவாயை ஏற்ற முடியாது. எனவே 28 சதவீதத்திற்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டு, அது பெட்ரோல், டீசலுக்கான ஸ்பெஷல் ஸ்லாபாக அமைக்கப்பட வேண்டும்.
நான் அரசியலை விட்டு விலகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. தற்போது யாருக்கும் எந்த கட்சிக்கு ஆதரவாக நான் செயல்படுவதில்லை. அனைத்து அரசியல் கட்சிகளோடும், அரசியல் கட்சி தலைவர்களோடும் இணைந்தே செயல்படுகிறேன்" என கூறினார்.
தற்போது ரூ.80க்கு மேல் விற்பனையாகும் பெட்ரோலை, பாபா ராம்தேவ் எவ்வாறு ரூ.35க்கு வழங்குவார் என்பதை பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. மாறாக மத்திய அரசு சிறிது வரிச்சலுகை அளித்தால் அது சாத்தியம் என்று மட்டுமே அவர் கூறியுள்ளார்.
பாலாவின் பார்வையில்:
இந்தியாவில் பெட்ரோல் மீது மத்திய அரசு லிட்டருக்கு ரூ.19 வரையிலும், மாநில அரசு 32 சதவீதம் வரையிலும் வரியை விதிக்கின்றன. கிட்டத்தட்ட இந்த வரியில் முழு விலக்கு அளித்தால் மட்டுமே ரூ.35க்கு பெட்ரோல் சாத்தியம். ஆனால் அப்படி செய்வதால் அரசு பெரும் அளவில் இழப்புகளை சந்திக்க நேரிடும். அப்படி விலக்கு வழங்குவதாக இருந்தால், அரசு நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்கே இந்த விலக்கை வழங்கி விடலாம்.
மாறாக பதஞ்சலி நிறுவனத்திற்கு தனிப்பட்ட முறையில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது பாபா ராம் தேவ் கூறியுள்ளதை வெறும் விளம்பர பேச்சாக மட்டுமே பார்க்க முடியும். அவர் உண்மையிலேயே ரூ.35க்கு பெட்ரோல் வழங்கும் திட்டத்தை வைத்திருந்தால், அதை அரசிடம் தெரிவித்து சிறிய அளவில் வரிச்சலுகை பெற்று வழங்கினால் இந்திய மக்கள் அதிக பயன்பெறுவார்கள். ஆனால் இது எல்லாம் நடக்கக்கூடிய விஷயமா என்ன?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!