Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கமிஷனருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்... என்ன நடந்தது என தெரிந்தால் ஆச்சரியம் நிச்சயம்
போலீஸ் கமிஷனருக்கே அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அசத்தியுள்ளனர். என்ன நடந்தது என முழுமையாக தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் நிச்சயம்.
போலீஸ் கமிஷனருக்கே அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அசத்தியுள்ளனர். என்ன நடந்தது என முழுமையாக தெரிந்தால் உங்களுக்கு ஆச்சரியம் நிச்சயம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு சராசரியாக 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாததே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றுவதே கிடையாது.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பெரும்பாலான போலீசாரும் கூட போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக பின்பற்றுவது இல்லை என்பதே உண்மை. அத்துடன் தவறு செய்யும் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் போலீசார் மீது புகார்கள் உள்ளன.
இந்தியாவில் போலீஸ் வாகனம் ஒன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒரு விஷயம் அல்ல. ஏனெனில் பெரும்பாலான போலீஸ் வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறி கொண்டுதான் உள்ளன.
ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய போலீஸ் வாகனம் ஒன்றிற்கு அபராதம் விதிப்பது என்பது இந்தியாவில் வழக்கத்திற்கு மாறான ஒரு விஷயம்தான். அதுவும் போலீஸ் உயரதிகாரி ஒருவரின் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அரிதிலும் அரிதான இந்த சம்பவம் ஐதராபாத் நகரில் நடைபெற்றுள்ளது. ஐதராபாத் நகரில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பணியாற்றி வருபவர் அனில் குமார். அரசாங்கம் இவருக்கு வழங்கிய அதிகாரப்பூர்வ கார் (டொயோட்டா பார்ச்சூனர்) 'நோ பார்க்கிங்' பகுதியில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது.
இதனை அபினய் தேஷ்பாண்டே என்ற பத்திரிக்கையாளர் பார்த்து படம் எடுத்து விட்டார். உடனடியாக அந்த படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். அதில், ''இந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படுமா? இடம்: மகன்களி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் நேரம்: 2018 நவம்பர் 15 மதியம் 3 மணி'' என குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையையும் 'டேக்' செய்தார். உடனடியாக இந்த புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என சமூக வலை தளங்களில் வைரலாக பரவி தொடங்கியது. எனவே ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாக இதற்கு பதில் அளித்தனர்.
|
அதில், 'சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமம்' என குறிப்பிட்டிருந்தனர். அத்துடன் நோ பார்க்கிங் ஏரியாவில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த போக்குவரத்து கூடுதல் கமிஷனரின் காருக்கு அபராதம் விதித்ததற்கான சலானின் ஸ்க்ரீன் ஷாட் போட்டோவையும் இணைத்திருந்தனர்.
the news minute வெளியிட்டுள்ள செய்தியின்படி, TS 09 PA 3330 என்ற பதிவு எண் கொண்ட போக்குவரத்து கூடுதல் கமிஷனரின் காருக்கு 235 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட டொயோட்டா பார்ச்சூனர் கார் தெலங்கானா டிஜிபி அலுவலகத்தின் கீழாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அனில் குமார் அதனை தனது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வருகிறார். மகன்களி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆய்வு பணி ஒன்றிற்காக சென்றபோதுதான் அவரது கார் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து கூடுதல் கமிஷனருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை பலர் வரவேற்றுள்ளனர். அதே சமயம் அபராத தொகையை செலுத்த அவர் தனது பணத்தை பயன்படுத்தினாரா? அல்லது அரசாங்க பணத்தை பயன்படுத்தினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக டிவிட்டர் பயனாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் டிவிட்டரில், ''ஐபிஎஸ் அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை பாராட்டுகிறேன். ஆனால் அபராத தொகையை செலுத்தியது யார்? இது அரசாங்க வாகனம் என்பதால், மக்களின் வரிப்பணம் அபராதமாக செலுத்தப்பட்டதா?
சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்'' என கூறியுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இதே கருத்தைதான் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.