ஒரே காரில் பயணிக்கும் ராகுல் காந்தி, அமித் ஷா... என்னங்க சொல்றீங்க?

இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் டொயோட்டா பார்ச்சூனர் கார் மூலமாக அவர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.

By Arun

இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், குறிப்பாக ராகுல் காந்தி, அமித் ஷா ஆகியோரும் கூட டொயோட்டா பார்ச்சூனர் கார் மூலமாக ஒன்றுபடுகின்றனர். பார்ச்சூனர் மட்டுமே அவர்களுக்கு இடையே இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை என்றும் கூட சொல்லலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

டொயோட்டா நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு முதல் பார்ச்சூனர் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இன்றைய தேதியில், இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி வகை கார்களில் டொயோட்டா பார்ச்சூனரும் ஒன்று.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

சாதாரண பொதுமக்கள் மட்டும் அல்ல. இந்தியாவை ஆளும், சர்வ வல்லமை பொருந்திய அரசியல்வாதிகள் பலரின் விருப்பமான காராகவும் இருப்பது டொயோட்டா பார்ச்சூனர்தான். அமித் ஷா, ராகுல் காந்தி போன்ற மிக முக்கியமான அரசியல்வாதிகள் பார்ச்சூனர் காரைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே கொள்கை ரீதியில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி கொள்வது அவர்களின் வழக்கம். ஆனால் கார் என்று வந்து விட்டால், டொயோட்டா பார்ச்சூனர் மூலமாக அவர்கள் ஒன்றுபடுகின்றனர்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

இந்திய அரசியல்வாதிகளுக்கு இடையே இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமையான விஷயம் எதுவென்றால், அது பார்ச்சூனர் கார்தான். ஏனெனில் காரை தேர்ந்து எடுக்கும் விஷயத்தில் மட்டும், டொயோட்டா பார்ச்சூனர் என்ற பாக்ஸையே அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக டிக் அடிக்கின்றனர்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

ராகுல் காந்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். சோனியா காந்தியிடம் இருந்த அந்த பதவி தற்போது ராகுல் காந்திக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவின் 2வது பெரிய கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி அதிகமாக பயணம் செய்யக்கூடியவர்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

ராகுல் காந்தி பல எஸ்யூவி கார்களை பயன்படுத்தினாலும், அவரது கான்வாய்களில் இன்றியமையாத ஒரு காராக இருப்பது பார்ச்சூனர்தான். முந்தைய தலைமுறை பார்ச்சூனரை அவர் பயன்படுத்துகிறார். இதில், அவர் பயணிப்பதை அடிக்கடி பார்க்க முடிந்திருக்கிறது.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

அமித் ஷா

மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா. இன்றைய தேதிக்கு பிரதமர் மோடிக்கு அடுத்து இந்தியாவின் அதிகாரம் மிக்க நபர் என்றால் அது அமித் ஷாதான். அவர் தனது பயணங்களுக்கு வெள்ளை நிற டொயோட்டா பார்ச்சூனர் காரை பயன்படுத்துகிறார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

அவரது கான்வாயில் எப்போதும் சில பார்ச்சூனர் கார்கள் வரும். அதில் ஒன்றை அமித் ஷா பயன்படுத்துகிறார். ராகுல் காந்தியை போல் இதுவும் முந்தைய தலைமுறை பார்ச்சூனர்தான். இதே பார்ச்சூனர் காரில்தான் பல இடங்களுக்கு அமித் ஷா வந்து செல்கிறார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

எடியூரப்பா

கடந்த சில நாட்களுக்கு முன் பத்திரிக்கை செய்திகளில் அதிகம் அடிபட்டது பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பாவின் பெயர்தான். ஏனெனில் கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்ற உடனேயே அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

எடியூரப்பா தனது தினசரி பயன்பாட்டிற்கு டொயோட்டா பார்ச்சூனர் காரைதான் பயன்படுத்தி வருகிறார். அவரிடம் இருப்பது பழைய தலைமுறை பார்ச்சூனர். மிக நீண்ட காலமாகவே எடியூரப்பா இந்த காரைதான் பயன்படுத்தி வருகிறார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

கேப்டன் அமரிந்தர் சிங்

பஞ்சாப் மாநில முதல் அமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேப்டன் அமரிந்தர் சிங் உள்ளார். இவர் பழைய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் காரை தனது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வருகிறார். வட இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை பார்ச்சூனர் மிகவும் பிரபலமான வாகனம்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

கேப்டன் அமரிந்தர் சிங் தான் பயன்படுத்தும் பார்ச்சூனர் காரின் புகைப்படங்களை பல முறை வெளியிட்டுள்ளார். அந்த காரை அவர் எவ்வளவு விரும்புகிறார், அந்த கார் அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு அந்த புகைப்படங்களே சாட்சி.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

அருண் ஜெட்லி

பாஜக கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி. இவர் மத்திய அரசின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் (உடல் நிலை சரியில்லாததால் தற்போது ஓய்வில் இருக்கிறார்). அருண் ஜெட்லி தனது தினசரி பயன்பாட்டிற்கு பார்ச்சூனர் காரை பயன்படுத்தி வந்தார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

நாடாளுமன்றத்திற்கு வழக்கமாக பார்ச்சூனர் காரில்தான் அருண் ஜெட்லி வருவார். அருண் ஜெட்லியிடம் இருப்பது பார்ச்சூனர் காரின் 4X4 வேரியண்ட். ஆனால் இதே காரைதான் இன்றளவும் பயன்படுத்தி வருகிறாரா? என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

வசுந்தரா ராஜே

பாஜக கட்சியை சேர்ந்த வசுந்தரா ராஜே, ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்தியாவில் உள்ள சில பெண் முதல் அமைச்சர்களில் வசுந்தரா ராஜேவும் ஒருவர். இவரும் தனது அதிகாரப்பூர்வ காராக டொயோட்டா பார்ச்சூனரைதான் பயன்படுத்துகிறார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

வசுந்தரா ராஜேவிடம் இருப்பது வெள்ளை நிற பார்ச்சூனர். ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் பல்வேறு கூட்டங்களுக்கு இந்த காரில்தான் வசுந்தரா ராஜே செல்கிறார். முதல் அமைச்சர் ஆவதற்கு முன்பாகவும் கூட பார்ச்சூனர் காரைதான் வசுந்தரா ராஜே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

வெங்கையா நாயுடு

இந்தியாவின் துணை குடியரசு தலைவராக உள்ள வெங்கையா நாயுடு, இதற்கு முன்பாக மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி வந்தவர். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் உள்பட பல கார்களை அவர் பயன்படுத்தி வருகிறார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

ஆடி க்யூ 7 போன்ற லக்ஸரி கார்களும் வெங்கையா நாயுடுவிடம் உள்ளன. எனினும் மற்ற எஸ்யூவி கார்களை காட்டிலும், பழைய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனரை பயன்படுத்துவதைதான் அவர் விரும்புகிறார். தினசரி பயன்பாடு மற்றும் கூட்டங்களுக்கு செல்ல பார்ச்சூனரைதான் அவர் அதிகம் தேர்வு செய்கிறார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச மாநில பாஜக கட்சியின் அசைக்க முடியாத தலைவர்களில் ஒருவர் சிவராஜ் சிங் சவுகான். அம்மாநில முதல் அமைச்சராக தற்போது சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். இவர் தனது தினசரி பயன்பாட்டிற்கு 2 கார்களை பயன்படுத்துகிறார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

ஒன்று ஆல் நியூ டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா. மற்றொன்று டொயோட்டா பார்ச்சூனர். இதில், இன்னோவா கிரிஸ்டா காரைதான் சிவராஜ் சிங் சவுகான் அதிகம் பயன்படுத்துகிறார். எனினும் பழைய தலைமுறை வெள்ளை நிற பார்ச்சூனர் காருடனும் அவரை அடிக்கடி பார்க்க முடிந்திருக்கிறது.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

சிவராஜ் சிங் சவுகானிடம் மற்றொரு காரும் உள்ளது. முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார்தான் அது. இந்த காரையும் கூட சிவராஜ் சிங் சவுகான் தனது பயணங்களுக்காக அவ்வப்போது பயன்படுத்தவே செய்கிறார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

கேடி ராமாராவ்

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திரசேகர ராவ் முதல் அமைச்சராக உள்ளார். அவரது அமைச்சரவையில், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் கேடி ராமாராவ்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

மிக இளம் வயதிலேயே அமைச்சராகி விட்ட கேடி ராமாராவ், தனது அன்றாட பயன்பாட்டிற்கு பழைய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் காரை பயன்படுத்தி வருகிறார். அவர் பயன்படுத்தும் ஒரே கார் இது மட்டுமே. இதனால் அனைத்து இடங்களுக்கும் இந்த காரில் மட்டுமே அவர் வந்து செல்வார்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

அனைவரும் விரும்புவது ஏன்?

இப்படி இந்தியாவை ஆளும் பல முன்னணி அரசியல்வாதிகளும் டொயோட்டா பார்ச்சூனர் காரைதான் பயன்படுத்தி வருகின்றனர். அதன் மாடர்ன் லுக், சிறப்பான ஆப் ரோடு திறன்கள் ஆகியவையே இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

டொயோட்டா பார்ச்சூனர் கார் இந்திய மார்க்கெட்டில் தற்போது 26.69 லட்சம் முதல் 32.48 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இதன் டாப் எண்ட் வேரியண்ட்டான 2.8 4x4 AT மாடல்தான் 32.48 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

2.7 லிட்டர் பெட்ரோல், 2.8 லிட்டர் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் பார்ச்சூனர் கார் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மோட்டார் 166 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் டீசல் மோட்டார் 177 பிஎஸ் பவரையும், மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 420 என்எம் டார்க் திறனையும், ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனில் 450 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ராகுல் காந்தி, அமித் ஷாவை ஒன்றுபடுத்திய டொயோட்டா பார்ச்சூனர்! பிரதமர் மோடியும் இணைவாரா?

மோடி மட்டும் வேற லெவல்!

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 760 எல்ஐ செக்யூரிட்டி எடிசன் என்ற காரை பயன்படுத்தி வருகிறார். அவர் பிரதமர் என்பதால், எண்ணிலடங்கா பாதுகாப்பு அம்சங்கங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

மோடி பயன்படுத்தும் கார்கள் குறித்த விரிவான தகவல்களையும், அவரது கார் அணிவகுப்பில் உள்ள ரகசியங்கள் குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Source: Cartoq

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Popular indian politicians who use the Toyota Fortuner as their daily ride. Read in tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X