மூலிகை பெட்ரோல் ரகசியத்தை வெளியிடுகிறாரா ராமர் பிள்ளை? புதிய வீடியோவால் பரபரப்பு

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமர் பிள்ளை, தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். வரும் நவ. 20ம் தேதி நாம் தமிழர்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்ததாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமர் பிள்ளை, தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். வரும் நவ. 20ம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த இடையன் குளம் பகுதியை சேர்ந்தவர் ராமர் பிள்ளை. 1996ம் ஆண்டு இவரை பற்றி இந்தியா அல்ல உலகமே பேசியது. இதற்கு முக்கிய காரணம் இவர் சொன்ன விஷயம் தான் அன்று உலகையே புரட்டி போடும் வகையில் இருந்தது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

அன்று அவர் பெட்ரோலை மூலிகைகளை கொண்டு தயாரிக்கலாம் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பல்வேறு இடங்களில் இவர் இந்த மூலிகை பெட்ரோலை செய்தும் காண்பித்தார். அது தீயில் எரிந்தது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இவரது இந்த கண்டுபிடிப்பை கண்ட பலர் இவரை வியந்து பார்த்து பாராட்டினர். இவர் அந்த ஆய்வின் போது கொதிக்கும் தண்ணீரில் சில மூலிகைகளை போட்டு கலக்குகிறார். இது தண்ணீரில் இருந்து எரிபொருளை உருவாக்குவதாக கூறுகிறார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

தண்ணீரை விட எரிபொருள் லேசாக இருப்பதால் அந்த பாத்திரத்தில் தண்ணீர் கீழேயும், எரிபொருள் மேலேயும் வருகிறது. இதை பிரித்தெடுப்பது மூலம் நாம் மூலிகை பெட்ரோலை பெற முடியும் என அவர் கூறிவருகிறார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

1996-1998ம் காலகட்டத்தில் இவர் இந்திய ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டார். இவரது கண்டுபிடிப்புகள் பற்றி ஆய்வு செய்ய பல்வேறு ஆய்வாளர்கள் விரும்பினர். பலர் இவரை நேரில் சந்தித்து இவரது கண்டுபிடிப்பு குறித்து கேட்டனர்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இதற்கிடையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி ராமர் பிள்ளையை சென்னைக்கு நேரில் அழைத்து மூலிகை பெட்ரோல் குறித்து கேட்டார். அவர் முன்பு மூலிகை பெட்ரோலை தயாரித்தும் காண்பித்தார். அவரை பாராட்டிய கருணாநிதி மத்திய அரசிற்கு இவரது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பெற உதவ வேண்டும் என கோரினார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

பின்னர் தொடர்ந்து ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோலை தயார் செய்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதை வாங்கி தங்கள் வாகனங்களில் பயன்படுத்திய பலருக்கும் வாகனத்தில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இதற்கிடையில் சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசியர்கள் சிலர் இது குறித்து தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தங்கள் முன்பு இதை செய்து காண்பிக்க முடியுமா? என்றும் அவரிடம் கேட்டனர். ராமர் பிள்ளையும் ஒப்புக்கொண்ட பின்பு அவர்கள் அதை ஒரு பொது வெளியில் நிகழ்த்தினர்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

அந்த சம்பவத்தின் போது ராமர் பிள்ளை வழக்கம் போது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சில மூலிகைகள் மற்றும் ரகசிய பொருட்களை சேர்த்து ஒரு குச்சியை வைத்து தயாரிக்க துவங்கினார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

அவர் வைத்திருந்த குச்சி மீது சந்தேகப்பட்ட ஐஐடி பேராசியர்கள் அவரது குச்சியை வாங்கிவிட்டு லேப்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடி குச்சியை வைத்து அதை பயன்படுத்த சொன்னார்கள். அப்பொழுது மூலிகை பெட்ரோல் தயாராகவில்லை.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

அதன்பின் அவரது குச்சியை வைத்து அவரது மூலிகை பெட்ரோலை மீண்டும் தயாரிக்க சொன்ன போது மூலிகை பெட்ரோல் உருவானது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இது குறித்து அறிக்கை அளித்த ஐஐடி பேராசிரியர்கள் அவர் தயாரிப்பது பெட்ரோல் இல்லை. ஆனால் அது எரிபொருளாக பயன்படுத்தலாம். அவர் அதனை தயாரிக்கும் போது ஒரு குச்சியை பயன்படுத்துகிறார். அதனுள் டோலுவின், நாப்தா என்ற பெட்ரோலிய பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

அவ்வாறு இருந்தால் அது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். அதைதான் இவர் வேறு விதமாக செய்து காண்பிக்கிறார். இந்த டோலுவின், நாப்தா ஆகிய பொருட்களை தண்ணீரில் கலப்பதன் மூலம் எரிபொருள் உருவாக வாய்ப்புள்ளது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

ஆனால் இந்த எரிபொருளை வைத்து வாகனங்களை இயக்குவது என்பது எல்லாம் புத்திசாலித்தனமான விஷயம் அல்ல. அதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. இவர் தயாரிப்பது எரிபொருள்தான் என்றாலும் அதனால் பெட்ரோலுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்தனர்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

அதன்பின் மூலிகை பெட்ரோல் என கூறி மக்களை ஏமாற்றி ரூ.2 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தாக ராமர் பிள்ளையின் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு சுமார் 20 ஆண்டுகள் நடந்த நிலையில் அவர் செய்தது மோசடி என கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. எனவே அவர் உட்பட 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இதற்கிடையில் சில ஆண்டுகள் மீடியாவில் தலைகாட்டாமல் இருந்த ராமர் பிள்ளை குறித்தும், அவரது கண்டுபிடிப்புகள் குறித்தும், கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இதை பார்த்த ராமர் பிள்ளை மீண்டும் மீடியாக்களில் தலை காட்ட துவங்கினர். தொடர்ந்து தனக்கு எதிராக சதி நடந்து வருவதாகவும் அரசியல்வாதிகள் தன்னை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

மேலும் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடியும், அப்போதைய ராணுவ அமைச்சர் மனோகர் பாரீக்கரும் தனது மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பை பார்வையிட்டதாகவும்,

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

தற்போது தனது கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு ராணுவத்தினர் சான்று வழங்கியதாகவும் பல்வேறு மீடியாக்களிடம் வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

கடைசியாக அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மக்கள் மற்றும் மீடியாக்களின் முன்னிலையில் அவர் தனது மூலிகை பெட்ரோலை எப்படி தயாரிப்பது என்பதை வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இதற்கிடையில் அரசு அனுமதியின்றி மக்களை திசை திருப்ப இவர் முயற்சிப்பதாக கூறி கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியே இவரை கைது செய்தனர். அதன்பின் அவர் என்ன ஆனார்? மக்கள் முன்பு இதை கொண்டு வருவரா? என்ற தகவல் இல்லாமல் இருந்தது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (10ம் தே தி) நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் ஒரு முகநூல் பக்கம் சார்பில் ராமர் பிள்ளையின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் அவர் வரும் நவ.20ம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் தான் மீண்டும் மூலிகை பெட்ரோலை தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

இதற்கான ஏற்படுகளை நாம் தமிழர் கட்சியினர் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இவ்வாறு அரசு அனுமதியில்லாமல் மக்கள் முன்னிலையில் அறிவியல் பூர்வமான ஒரு விஷயத்தை மக்களை முட்டாளாக்கும் வகையில் செய்து காட்டுவது என்பது சாத்தியமா? என்பது தெரியவில்லை.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

அவர் தயாரிக்கும் பொருளை எரிபொருள் என மற்றவர்கள் ஒப்புக்கொண்டாலும் அது ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்றுதான் எனவும் இதை இவர் கண்டுபிடித்ததாக ஒப்பு கொள்ள முடியாது. மேலும் இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் பலர் தரப்பில் கூறப்படுகிறது.

நவ.20ம் ல் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடுகிறார் ராமர் பிள்ளை?

நவ.20ம் தேதி என்ன நடக்க போகிறது? மக்கள் மத்தியில் ராமர் பிள்ளை என்ன செய்து காண்பிக்க போகிறார்? அவர் மூலிகை பெட்ரோலை தயாரிக்கும் ரகசியத்தை வெளியிடுவாரா? அல்லது வெறும் விளம்பரத்திற்காக அந்த சந்திப்பு நடத்தப்படுமா? இதற்கு அரசு அனுமதிக்குமா? அல்லது மீண்டும் ராமர் பிள்ளை கைது செய்யப்படுவாரா? நாம் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Img Sources: Puthiyathalaimurai, Thanthi TV, Seemanism

Most Read Articles
English summary
Ramar pillai revealing secret of herbal petrol on nov 20. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X