Just In
- 3 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 3 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 5 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 5 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்தை கொண்டு வந்தே தீருவோம் : மோடி ; நம்மை குறி வைப்பது இதற்குதான்
டில்லியில் மேற்கு எக்ஸ்பிரஸ்வே திறந்து வைத்த மோடி இந்தியா நீர் வழி போக்குவரத்தில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், சாகர் மாலா திட்டம் முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்றும் பேசியுள்ளார். சாகர்மாலா திட்டத
டில்லியில் மேற்கு எக்ஸ்பிரஸ்வே திறந்து வைத்த மோடி இந்தியா நீர் வழி போக்குவரத்தில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், சாகர் மாலா திட்டம் முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்றும் பேசியுள்ளார். சாகர்மாலா திட்டத்தின் படி தமிழகத்திற்கு சீர்காழி மற்றும் இணையம் பகுதியில் துறைமுகம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டிற்கு ஆண்டு போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தினமும் செயல் இழக்கும் வாகனங்களை விட புதிதாக விற்பனையாகும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியிருக்கிறது.
இந்த வாகனங்களை எல்லாம் உட்கொள்ளும் வகையில் கட்டமைப்பு வசதிகள் அதிகமான அளவில் செய்யப்பட்டு வருகின்றன. அதிகமாக வாகனங்கள் பயன்படுத்தப்படும் ரூட்களில் புதிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள் கட்டமைக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி டில்லியில் இருந்து அருகே உள்ள சில மாநிலங்களை இணைக்கும் கிழக்கு பெரிபெரல் எக்ஸ்பிரஸ் வே என்ற திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார். இது குறித்து இந்தியாவே பேசியது. பல்வேறு அம்சங்களுடன் இந்த சாலை கட்டமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டில்லியில் இருந்து மேற்கு பகுதிகளை இணைக்க மேற்கு பெரிபேரல் எக்ஸ்பிரஸ் வே-வை திறந்து வைத்தார். இந்த சாலை டில்லி -ஆம்பாலா-அமிர்தசரஸ், டில்லி-ஆக்ரா-வாரணாசி-டன்குனி, டில்லி-ஜெய்பூர்-ஆமதாபாத்-மும்பை மற்றும் டில்லி-ஹிஸர்-பாஸில்கா-இந்தியா-பாக்., எல்லைப்பகுதி ஆகிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டில்லி-உ.பி-ராஜஸ்தான் இடையே செல்லும் வாகனங்கள் டில்லி டிராபிக்கிற்குள் வராமல் நேரடியாக செல்ல முடியும். இதனால் டிராபிக் குறைவதோடு மாசு ஏற்படுவதும் பெரும் அளவில் குறையும்.
இந்த சாலை மத்திய மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களையும், மேற்கு மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.1,915 கோடி திட்டமதிப்பில் 2009ம் ஆண்டே முடிக்கப்பட வேண்டிய இந்த பணி பல கட்டங்களாக இழுக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்டதை வித 9 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்துள்ளது.
மேலும் இந்த சாலை ஹரியானா மாநிலத்தில் 5 மாவட்டங்களையும் இணைக்கிறது. இந்த சாலைகளை சுற்றியுள்ள சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் 5 புதிய நகரங்களை உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த மேற்கு பெரிபேரல் எக்ஸ்பிரஸ்வே சாலையை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி : "மக்களின் போக்குவரத்தை சுலபமாக்குவதே மத்திய அரசின் மிக முக்கியமான நோக்கம். இந்த சாலை மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும் சுற்றுச்சுழலில் ஏற்படும் மாசு குறையும். இது மட்டும் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கான பயணம் சுலபமாகும். இதனால் இதன் மூலம் பயன்பெறும் ஒவ்வொருவரின் வாழ்வும் மேம்படும்.
இது போன்று சாலைகள், ரயில்வேகள், ஹைவே மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளுடன் தற்போது நீர் வழி போக்குவரத்தையும் அதிகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மக்களுக்கு குறைவான விலையில் வேகமாக பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது புதிய வகை எலெக்ட்ரிக் ரயில்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை மேம்படுத்தி வருவதும் இந்த மாற்றத்திற்கான ஒரு படிதான். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பு இந்தியாவில் பெருகியதும் மக்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட்டு விட்டு மெதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்சியில் மத்திய அரசு 37 ஆயிரம் கி.மீ. ஹைவே/எக்ஸ்பிரஸ் வே அமைக்க சுமார் ரூ.3 லட்சம் கோடி செலவு செய்துள்ளோம். இது மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் நீரால் இணைக்க சாகர்மாலா என்ற திட்டத்தை வகுத்து தற்போது தேசிய அளவில் முதலாவது நீர் வழி போக்குவரத்து வாரணாசியில் துவங்கப்பட்டுள்ளது" என கூறினார்.
அவரது பேச்சில் சாகர்மாலா திட்டத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார் பார்த்தீர்களா? இந்த திட்டம் எதிர்கால இந்தியாவில் நீர் வழி போக்குவரத்திற்காக வித்தாக அமைய போகும் திட்டம் என்ற பேச்சு நிலவி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.
சாகர் மாலா திட்டம் கடந்த 2003ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. இந்த திட்டமானது இந்தியாவில் நீர் வழி போக்குவரத்தை மேம்படுத்துவதையே கொள்கையாக கொண்டது.
இத்திட்டதை முழுமையாக செயல்படுத்த 577 புராஜெக்ட்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதை செய்வதற்காக சுமார் 8 லட்சம் கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் புத்துயிர் பெற்றது.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..!
இந்த சாகர்மாலா திட்டம் என்பது தற்போது இருக்கும் துறைமுகங்களை நவீனப்படுத்துவது, புதிய துறைமுகங்களை அமைப்பது, துறைமுகங்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவது, துறைமுக இணைப்புகளை கட்டமைப்பது. கடலோர மக்களுக்கான வாழ்வாதார பிரச்னைகளை சீர் செய்வதுதான் சாகர் மாலாவின் அடிப்படை திட்டம்.
இதன்படி இந்தியாவில் 6 புதிய துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. மேற்கு வங்கத்தில் சாகர் தீவு, ஓடிசாவில் பாராதீப், தமிழ்நாட்டில் சீர்காழி, இணையம், கர்நாடகாவில் பேலிகேரி, மஹாராஷ்டிராவில் வாதவன் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படுகிறது.
ட்ரெண்டிங் டிரைவ்ஸ்பார்க் யூ டியூப் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்
டிரைவ்ஸ்பார்க் தமிழ் யூ டியூப் சேனலை பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!