Just In
- 6 min ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 1 hr ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 1 hr ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Movies அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் கார்ப்பரேட் நிறுவனம்.. டபே டிராக்டரின் வித்தியாச முயற்சி..
விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் அப்ளிகேஷன் ஒன்றை, டபே டிராக்டர் நிறுவனம் லான்ச் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் அப்ளிகேஷன் ஒன்றை, டபே டிராக்டர் நிறுவனம் லான்ச் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் 2வது மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமான டபே, விவசாயிகளுக்கு உதவும் வகையில், 'JFarm Service APP' என்ற அப்ளிகேஷனை லான்ச் செய்துள்ளது. டிராக்டர் தேவைப்படும் விவசாயிகள், இதன் மூலமாக மற்ற விவசாயிகளிடம் இருந்து டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து கொள்ள முடியும்.
இதுகுறித்து டபே நிறுவனத்தின் தலைவர் கேசவன் கூறுகையில், ''இந்த டிஜிட்டல் அப்ளிகேஷன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 600 ரூபாய் என்ற வீதத்தில் டிராக்டர்களை வாடகைக்கு விட்டதன் மூலம், மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும், சுமார் 16,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
இந்த விவசாயிகள் கடந்த சீசனில் மட்டும் டிராக்டர்களை வாடகைக்கு வழங்கியதன் மூலமாக ரூ.15 கோடி வருமானம் ஈட்டியுள்ளனர்'' என்றார். கார்ப்பரேட்களுக்கான சமூக பொறுப்பு (CORPORATE SOCIAL RESPONSIBILITY) திட்டத்தின் கீழ் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் இருந்து குறிப்பட்ட அளவு தொகையை ஒதுக்கி சமூக நடவடிக்கைகளுக்கு செலவிட வேண்டும் என்பதுதான் சிஎஸ்ஆர் எனப்படும் கார்ப்பரேட்களுக்கான சமூக பொறுப்பு திட்டமாகும்.
எனவே 'JFarm Service APP' மூலம் லாபம் ஈட்ட வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல என்று டபே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேசவன் மேலும் கூறுகையில், ''இந்தியாவில் தற்போது சுமார் 45 லட்சம் டிராக்டர்கள் உள்ளன. ஆனால் அவை அதிகம் பயன்படுத்தப்படுகிறதா? என்பது சந்தேகமே.
இந்த டிராக்டர்களை ஒரு வருடத்திற்கே வெறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மணி நேரம் வரை மட்டுமே பயன்படுத்துகின்றனர். எனவே அதனை வாடகைக்கு விடுவதன் மூலம் விவசாயிகளால் ஓரளவு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். இதற்காகவே இந்த டிஜிட்டல் அப்ளிகேஷன்.
இந்தியாவில் 45 லட்சம் டிராக்டர்கள் இருப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன். இதில், 10 சதவீத டிராக்டர்கள் இந்த திட்டத்தில் இணைந்தால் கூட, விவசாயிகளால் 421 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இந்த அப்ளிகேஷன் தற்போது 7 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் எஞ்சிய பகுதிகளிலும் இந்த நிதியாண்டிற்கு உள்ளாக, இந்த அப்ளிகேஷன் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சில மாநில அரசுகளுடன் டபே டிராக்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!