Just In
- just now இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 47 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 58 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
புதிய கார் எனக்கூறி பழைய காரை வாடிக்கையாளரின் தலையில் கட்டிய டீலர்.. வசமாக சிக்கி கொண்டது டாடா
புதிய கார் என்ற போர்வையில், வாடிக்கையாளருக்கு பழைய காரை விற்பனை செய்த டாடா நிறுவன டீலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய கார் என்ற போர்வையில், வாடிக்கையாளருக்கு பழைய காரை விற்பனை செய்த டாடா நிறுவன டீலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், டாடா நிறுவனத்தையும் நுகர்வோர் நீதிமன்றம் தண்டித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அதுல் குமார் அகர்வால். பஞ்ச்குலாவில் உள்ள பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில், 3.61 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய டாடா கார் ஒன்றை, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, அதுல் குமார் அகர்வால் வாங்கினார்.
ஆனால் வாங்கிய முதல் நாளில் இருந்தே கார் அடிக்கடி பழுதாகி கொண்டே இருந்தது. எனினும் முதல் சர்வீஸ் முடிந்த பிறகு, பிரச்னைகள் சரியாகி விடும் என அதுல் குமார் அகர்வால் நினைத்தார். இதன்படி 2015ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி, முதல் சர்வீசுக்கு கார் விடப்பட்டது. ஆனால் அதன்பின்பும் முன்னேற்றம் இல்லை.
இதனால் காரில் ஏற்பட்ட பிரச்னைகளை எல்லாம், சண்டிகரில் உள்ள பெர்க்லி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு (டாடா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம்), அதுல் குமார் அகர்வால் பல முறை தெரியப்படுத்தினார். ஆனால் அங்குள்ள டெக்னீசியன்கள் எவரும் காரை சரி செய்து தரவில்லை.
குறிப்பாக, காரில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளியாகும் பிரச்னை நீடித்து கொண்டே இருந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான டாடா டீலர்களிடம் அதுல்குமார் அகர்வால் சென்று விட்டார். ஆனால் ஒருவராலும் பிரச்னையை சரி செய்ய முடியவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அதுல் குமார் அகர்வால், மாவட்ட குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் உத்தரவின் பேரில், சண்டிகரில் உள்ள பிஇசி யுனிவர்சிட்டி ஆப் டெக்னாலஜி பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி, அதுல் குமார் அகர்வாலின் காரை பரிசோதனை செய்தது.
அப்போது டர்போசார்ஜர், இன்ஜெக்டர், ப்யூயல் லைன் ஆகியவற்றை மாற்றியும் கூட, அதிக அளவிலான கரும்புகை வெளியாவது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் பிக் அப் மிகவும் மந்தமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக அந்த கார் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமானது, புதிய கார் என்ற பெயரில் பழுதடைந்த பழைய காரை அதுல் குமார் அகர்வாலுக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கி, தற்போது நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி பழைய காரை புதிது என விற்பனை செய்த பனர்ஸிதாஸ் ஆட்டோமொபைல்ஸ், பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத பெர்க்லி டாடா மோட்டார்ஸ் (அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம்) மற்றும் டாடா மோட்டார்ஸ் (கார் உற்பத்தியாளர்) ஆகியோர், அதுல் குமார் அகர்வாலுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
அத்துடன் பழைய காருக்கு பதிலாக அதுல் குமார் அகர்வாலுக்கு புதிய கார் வழங்க வேண்டும் அல்லது 3.61 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து திருப்பி வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஒருவரது ஸ்கோடா லாரா காரின் ரப்பர் பெல்ட் பழுதானது. இந்த சம்பவத்தில் டீலர்கள் எப்படி எல்லாம் கார் ஓனரை ஏமாற்றப்பார்த்தார்கள், அதில் இருந்து அவர் எப்படி தப்பினார் என்பதையும் இங்கே கிளிக் செய்து பாருங்கள்.
டாடா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்...
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?