Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 3 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Movies இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டாடா கார்களின் விலை கணிசமாக உயர்கிறது
வரும் ஜனவரி 1 முதல் தனது அனைத்து பயணியர் வாகனங்களின் விலையையும் ரூ.40,000 வரை உயர்த்த இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால்
அடுத்த மாதம் டாடா கார்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களை வைத்து, ஒவ்வொரு காலாண்டிலும் கார் நிறுவனங்கள் பரிசீலனை செய்வது வழக்கம். ஆண்டின் மத்தியில் வரும் காலாண்டுகளில் விலை உயர்வு தவிர்க்கப்பட்டாலும், புத்தாண்டிலும் அதற்கு அடுத்து மார்ச்சிலும் கார் விலையை உயர்த்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து, கார் விலையை உயர்த்தும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. புத்தாண்டில் கார் விலையை உயர்த்தப் போவதாக முன்னணி கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
வரும் ஜனவரி 1 முதல் தனது அனைத்து பயணியர் வாகனங்களின் விலையையும் ரூ.40,000 வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் கூறி இருக்கிறது.
டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் முன்னணி மாடல்களின் விலை உயர்த்தப்பட இருக்கிறது. இது புத்தாண்டில் டாடா கார்களை வாங்க காத்திருப்போருக்கு சற்று ஏமாற்றம் தரும் விஷயமாக அமைந்துள்ளது.
இந்த கார்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொண்டால், விலை உயர்விலிருந்து தப்ப இயலுமா என்பதை அருகிலுள்ள டாடா டீலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்வது அவசியம். முன்பதிவு செய்திருப்பவர்களும் புத்தாண்டில் டெலிவிரி பெற திட்டமிட்டிருந்தால், டாடா டீலரை தொடர்பு கொண்டு விலை உயர்வு குறித்து உறுதி செய்து கொள்வது அவசியம்.
இதனிடையே, இந்த ஆண்டு போலவே புதிய மாடல்களை 2019ம் ஆண்டிலும் களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. முதல் மாடலாக அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கும் டாடா ஹாரியர் எஸயூவி ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
மேலும், இந்த எஸ்யூவியானது விற்பனைக்கு முன்னதாக, சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பொது மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலமாக, இந்த எஸ்யூவியை மிக எளிதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைய செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.