அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

டாடா நிறுவனம் வழங்கிய டிகோர் எலெக்ட்ரிக் காரில் ரேஞ்ச் இல்லை என்பதால் அந்த காரை பயன்படுத்த மாட்டோம் என அரசு அதிகாரிகள் போர்கொடி தூக்கியுள்ளதாக செய்திகள் வந்தது. அந்த அதிகாரிகளுக்கு பதிலடி கொடுக்க

By Balasubramanian

டாடா நிறுவனம் வழங்கிய டிகோர் எலெக்ட்ரிக் காரில் ரேஞ்ச் இல்லை என்பதால் அந்த காரை பயன்படுத்த மாட்டோம் என அரசு அதிகாரிகள் போர்கொடி தூக்கியுள்ளதாக செய்திகள் வந்தது. அந்த அதிகாரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டாடா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விபரத்தை கீழே படியுங்கள்

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

இந்திய மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது. அதற்கு முன்னதாக அரசு சார்பில் பயன்படுத்தப்படும் வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற அரசு முடிவு செய்துதது.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

இதையடுத்து டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனத்திற்கு எலெக்ட்ரிக் கார்களை வழங்க இஇஎஸ்எல் மூலம் டெண்டரை வழங்கியது. இதன் மூலம் அரசு 10 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடிவு செய்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

முதற்கட்டமான 500 வாகனங்கள் ஏற்கனவே அரசிடம் வழங்கப்பட்டுவிட்டது. மற்ற வாகனங்களை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அரசு அதிகாரிகள் எலெக்ட்ரிக் காரை வாங்க மறுத்து வருவதாக செய்திகள் வெளியானது.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

அதாவது அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட காரில் முழு சார்பில் 80-82 கி.மீ. தான் இயங்கவதாகவும், அதனால் தாங்கள் பயணம் செய்ய சிரமமா க இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

மேலும் இந்த கார்களின் உலகத்தரம் வாய்ந்த பேட்டரிகள் அமைக்கப்படவில்லை என்றும் 27-35 கி.வா. பேட்டரிகள் தான் உலக தரம் வாய்ந்தது எனவும், ஆனால் இந்த கார்களில் 17 கி.வா பேட்டரிகள் தான் அமைக்கப்பட்டுள்ளது என புகார் எழுப்பபட்டது.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

இதற்கு பதில் அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் குழுமம் பதில் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : " தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் இஇஎஸ்எல் மூலம் வரும் தகவல்களை பார்த்தால் எங்கள் வாகனத்தில் ரேஞ்ச் ஒரு பிரச்னையே இல்லை.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

நேற்று வெளியான செய்தியில் இருந்த குற்றச்சாட்டுப்படி உலக தரமான பேட்டரிகளை பொருத்த பேட்டரிக்கு மட்டுமே 7 லட்ச ரூபாய் செலவாகும். இதனால் காரின் விலை மிக அதிகமாக உயர்ந்து விடும்.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

இந்தியாவில் கார் வாங்குபவர்களில் 74 சதவீதத்தினர் 4-8 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட விலையிலான கார்களையே வாங்குகின்றனர். 15 லட்ச ரூபாய்க்கு அதிமான காரை வாங்குபவர்கள் மிக குறைவு.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

அதனால் எலெக்ட்ரிக் காரை தயாரிக்கும் போது இந்த விலைக்குள் இருக்குபடி தயாரித்தால் தான் மக்கள் பயன்பாட்டிற்கு செல்லும். மேலும் நாங்கள் நடத்திய ஆய்வு படி சரசரியாக தனி நபர் பயன்பாட்டிற்காக காரை பயன்படுத்தும் ஒருவர் 50-60 கிமீட்டர் வரை பயணம் செய்வார். நாங்கள் வழங்கியுள்ள கார் 130 கி.மீ. வரை பயணம் செய்யும் திறன் வாய்ந்தது.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

இவர்கள் கேட்கும்படி ஒரு முழு சார்ஜில் 250 கி.மீ செல்லும் வகையிலான பேட்டரிகளை பொருத்த வேண்டும் என்றால் பேட்டரியின் விலையே 7 லட்ச ரூபாய் வரை செல்லும் இதனால் ஒட்டு மொத்த காரின் விலை 15 லட்சமாக மாறலாம். ஆதே நேரத்தில் எதிர்காலத்தில் பேட்டரிகளின் விலை குறைந்தால் அந்த பேட்டரிகளை கொண்டு இந்த பேட்டரிகளை மாற்ற முடியும்.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

மேலும் பேட்டரிகளின் விலை குறைந்தால் கார்களின் விலையும் கணிசமாக அளவு குறைந்து விடும். எலெக்ட்ரிக் கார்களின் அதிகமான செலவு என்பது பேட்டரிக்கு தான். மற்ற பாகங்களுக்கான விலை குறைவு தான்.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

தற்போது அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கார் என்பது இஇஎஸ்எல்லிற்கும் எங்களுக்குமான ஒப்பந்தத்தில் உள்ள படியே வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் எதை உறுதியளித்தோமே அதை நாங்கள் சரியா வழங்கியுள்ளோம்" என கூறியுள்ளனர்.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

டாடா நிறுவனம் 350 எலெக்ட்ரிக் கார்களையும் மஹிந்திரா நிறுவனம் 150 எலெக்ட்ரிக் கார்களையும், இதுவரை அரசிற்கு வழங்கியுள்ளன. இன்னும் அந்நிறுவனங்கள் 9500 கார்களை வழங்க வேண்டியது உள்ளது. இதில்40 சதவீத கார்கள் மஹிந்திரா நிறுவனம் வழங்கும்.

அரசு அதிகாரிகளுக்கு பதிலடி கொடுத்த டாடா; உங்க வாலை எங்ககிட்ட ஆட்டாதீங்க...

எலெட்ரிக் கார்களை மற்ற கார்களை போல நினைத்தால் இவ்வாறான பிரச்னைகள் ஏற்படலாம். எலெக்ட்ரிக் காரின் ஒட்டு மொத்த செயல்பாடும் வேறு விதமாக இருக்கும். இந்த காரை தினமும் மறக்காமல் சார்ஜ் ஏற்ற வேண்டும். இதை கருத்தில் கொண்டு நாம் கார் பயன்படுத்தும் விதத்தை எலக்ட்ரிக் கார்களுக்கு ஏற்றார் போல் மாற்றி கொள்ள வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்
  2. ஹார்லி டேவிட்சனிற்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்; வரி அரசியலில் சிக்கியது ஹார்லி
  3. புதிய ரேஞ்ச்ரோவர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!!
  4. 70's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?
  5. தவறான டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களை களையெடுக்க QR கோடு சிஸ்டம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அதிரடி!
English summary
Tata Motors says range not a major concern for Tigor EVs supplied to EESL.Read in Tamil
Story first published: Friday, June 29, 2018, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X