Just In
- 2 min ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 21 min ago ஓசூரில் தயாராகும் புதிய எலக்ட்ரிக் வாகனம்!! உருவாக்குவது யார் தெரியுமா?
- 1 hr ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 2 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ வாகனங்கள் வெளிநாட்டிற்கு விற்பனை...?
டாடா நிறுவனம் இந்திய ராணுவமும் இணைந்து எந்த அனைத்து கால நிலைகளிலும், அனைத்து தளங்களிலும் மிக சிறப்பாக வேலை செய்யும், ராணுவ வாகனங்களை வடிவமைத்துள்ளனர். விரைவில் இந்த வாகனங்கள் இந்திய ராணுவ பயன்பாட்டிற்
டாடா நிறுவனமும், இந்திய ராணுவமும் இணைந்து, அனைத்து கால நிலைகளிலும், அனைத்து தளங்களிலும் மிக சிறப்பாக இயங்கும், ராணுவ வாகனங்களை வடிவமைத்துள்ளனர். விரைவில் இந்த வாகனங்கள் இந்திய ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும் சில வெளிநாடுகளும் இந்த வாகனத்தை டாடா நிறுவனம் மூலம் வாங்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம் வாருங்கள்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், இந்திய ராணுவமும் இணைந்து, இந்திய ராணுவத்திற்காக புதிய ரக வாகனத்தை தயாரித்துள்ளனர். இந்த வாகனத்தை அதிக அளவில் ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், இந்தியாவின் ராணுவ பலத்தை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, புனேவில் உள்ள பிம்ஸ்டெக் ராணுவ தலைமையகத்தில், இந்த வாகனங்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது 4X4 மைன் புரோடெக்டெட் வாகனம் (எம்பிவி) மற்றும் டபிள்யூஎச்ஏபி 8X8 இன்ஃபேன்ட்ரி காம்பேட் வாகனம் (ஐசிவி) ரகத்தை சேர்ந்தது.
இதில் டாடா டபிள்யூஎச்ஏபி 8x8 வாகனம், இந்தியாவின் முதல் இன்ஃபேன்டரி காம்பேக்ட் ரக வாகனமாகும். இது அனைத்து கால நிலைகளிலும், மணல், தார், பாறை, சகதி என அனைத்து விதமான மேற்பரப்புகளிலும், எவ்வித தடங்கலும் இல்லாமல் பயணிக்கும். போர் காலங்களில், எதிரிகளை நேரடியாக குண்டுகள் மூலம் தாக்கும் வசதியும், இந்த வாகனத்தில் இருக்கிறது.
மேலும் இந்த வாகனம் வெடிகுண்டுகளில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கொண்டது. இந்த வாகனத்திற்கு அடியில் வெடி குண்டுகள் வெடித்தால் கூட வாகனத்திற்கும், வாகனத்திற்கு உள்ளே இருப்பவர்களுக்கும் எந்த வித சேதாரமும் ஏற்படாது.
இந்த ஐசிவியில் பேலிஸ்டிக் பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. மேலும் இந்த வாகனம் குறைந்த பராமரிப்புகளை கொண்டுள்ளது. இந்த வாகனத்தில், 10+2 என்ற அடிப்படையில், ராணுவ வீரர்கள் பயணம் செய்ய முடியும்.
இந்த வாகனம் எல்லா சூழ்நிலைக்கும், அனைத்து மேற்பரப்புகளிலும் பயணிக்கும் என்பதால், இதை போர்காலங்களில் பயன்படுத்த முடியும். இந்த ஐசிவி வாகனத்தை, டாடா மோட்டார்ஸ் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுமம் ஆகியவை இணைந்து வடிவமைத்துள்ளன.
இந்த 8x8 வாகனமானது, போர் வாகனம், சிபிஆர்என் (கெமிக்கல்,பயலாஜிக்கல், ரேடியோலாஜிக்கல், நியூக்லியர்) வாகனம், மீட்பு மற்றும் சப்ஃபோர்ட் வாகனம், மருத்துவ மீட்பு வாகனம், இன்ஜினியர் ஸ்குவார்டு வாகனம், மோர்ட்டார் கேரியர், கமெண்டர் வாகனம், ஆண்டி டேங்க் கைடடு மிஷல் வாகனம் என்ற பல்வேறு வேரியண்ட்களில் இந்த வாகனம் தயாரிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் டாடா 4x4 வாகனமானது, மைன் ப்ரூப் ட்ரூப் போக்குவரத்து வாகனம் ஆகும். இதனை எஸ்கார்ட் பாதுகாப்பு வாகனமாகவோ அல்லது சட்ட அமலாக்க சிறப்பு வாகனமாகவோ பயன்படுத்த முடியும்.
இது எம்பிவி ரக வாகனமாக உள்ளது. அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ், அதிக பவர் ஆகியவற்றுடன் எடை விகித வாகனமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் அதிவேகத்தில் பயணிக்க முடியும்.
மேலும் டாடா நிறுவனம் பிம்ஸ்டெக் உடன் மியான்மர் நாட்டிற்கு டாடா செனான் ஜிஎஸ் 800 வாகனத்தையும், மியான்மர் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கு டாடா 2.5டி எல்பிடிஏ 715 4X4 வாகனத்தையும், டாடா 5டி எல்பிடிஏ 1628 4x4 வாகனத்தை நேபாளுக்கும், மிஷன் ஸ்பெஷிபிக், லாகிஸ்டிக் வாகனத்தை ஐநா அமைதி மிஷனுக்கும் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது டாடா நிறுவனம் தங்களது ராணுவ வாகன தயாரிப்பு திறனை டபிள்யூஎச்ஏபி 8X8 ஐசிவி மற்றும் 4x4 மைன் பாதுகாப்பு வாகனம் ஆகியவற்றின் மூலம் அதிகரித்துள்ளது. இவை இரண்டும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. வருங்காலத்தில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும். மேலும் வேறு சில நாடுகளும், டாடா நிறுவனத்திடம் இருந்து இந்த வாகனத்தை பெற முயற்சித்து வருகின்றனர்.