Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 5 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
மின் கம்பத்தில் மோதிய டாடா நெக்ஸான்... இந்த முறையும் அடடே, மூன்று ஆச்சர்ய குறி!!!
கோவாவில் உள்ள நான்கு வழிச் சாலை ஒன்றில் சென்ற புத்தம் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.
கார் ஓட்டும்போது கவனக்குறைவும், அதிவேகமும் அழையா விருந்தாளிகளாக விபத்துக்கு வழி வகுக்கும் என்பதை விளக்க பல சம்பவங்களை சான்றாக வழங்கி இருக்கிறோம். இந்த சூழலில், அதிவேகத்தால் ஏற்பட்ட மற்றொரு கார் விபத்து நமக்கு மீண்டும் எச்சரிக்கையை தந்துள்ளது.
கோவாவில் உள்ள நான்கு வழிச் சாலை ஒன்றில் புத்தம் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி அதிவேகமாக சென்றுள்ளது. நான்கு வழிச்சாலை காலியாக இருந்ததால், ஓட்டுனர் காரை அதிவேகத்தில் செலுத்தியதாக தெரிகிறது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த நெக்ஸான் எஸ்யூவி சாலைக்கு நடுவில் உள்ள தடுப்புப் பகுதியில் இருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் டாடா நெக்ஸான் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. கூரை, பின்புறம் வரை அந்த மோதல் தாக்கத்தால் பலத்த சேதமடைந்துள்ளது.
குறுக்கே ஏதேனும் வாகனம் அல்லது பாதசாரி வந்ததால், ஓட்டுனர் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், அந்த கார் தற்காலிக பதிவு எண்ணுடன் இருப்பதால், டீலர் பணியாளர்களால் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கார் விபத்துக்குள்ளானதும் அதில் இருந்த மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், கார் கதவுகள் திறந்து கொண்டதால், அவர்கள் எளிதாக வெளியேறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர்.
இதுபோன்ற விபத்துக்களின்போது கார் கதவுகள் நசுங்கி பூட்டிக் கொண்டால், காரில் பயணித்தவர்கள் அவசர சமயத்தில் வெளியேற முடியாது. இந்த காரில் கதவுகள் திறந்து கொண்டதால் எளிதாக வெளியேறி இருப்பது நல்ல விஷயம்.
ஒவ்வொரு காரின் இயங்கு தன்மை மற்றும் சமநிலை ஆகியவை மாறுபடும். எனவே, நீண்ட கார் ஓட்டிய அனுபவம் இருந்தபோதிலும், புதிய காரை ஓட்டும்போது நிதானம் அவசியம். சில நாட்கள் ஓட்டி பிடிபட்ட பிறகு சற்று வேகத்தை கூட்டுவது பயன்தரும்.
மேலும், நகரங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலைகளில் கார் ஓட்டும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சிறு கவனக் குறைவு கூட விபத்துக்கு வழிகோலும்.
அத்துடன், குடியிருப்பு உள்ள பகுதிகளில் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தாலும் கூட அதிவேகத்தில் செல்வதை அறவே தவிர்ப்பது அவசியம். நிதானமான வேகத்தில் கடந்து சென்று குடியிருப்புப் பகுதிகளை தாண்டிய பிறகு வேகத்தை கூட்டிச் செல்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.
பொதுவாக ஓட்டுனர்களுக்கு அதிக நிதானமும், சகிப்புத் தன்மையும் இருக்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியாத விஷயமாகவிடும். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருப்பதே பெரிய விஷயம்.
Source: Team-BHP
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!