Just In
- 41 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 7 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
Don't Miss!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வெறும் 40 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கார் டிரைவரால் 40 லட்சத்தை இழந்த குடும்பம்... வைரலாகும் ஷாக் வீடியோ
வெறும் 40 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கார் டிரைவரால், 40 லட்ச ரூபாயை குடும்பம் ஒன்று பரிதாபமாக இழந்துள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 40 ரூபாய்க்கு ஆசைப்பட்ட கார் டிரைவரால், 40 லட்ச ரூபாயை குடும்பம் ஒன்று பரிதாபமாக இழந்துள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு ஏற்ப திருடு போகும் வாகனங்களின் எண்ணிக்கையும் மறுபுறம் அதிகரித்து கொண்டுள்ளது. பல அதிநவீன மற்றும் நூதனமான யுக்திகளை பயன்படுத்தி, கொள்ளையர்கள் வாகனங்களை திருடுகின்றனர்.
அதுமட்டுமின்றி வாகனங்களின் முக்கியமான உபகரணங்களையும், வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்களையும் மிகவும் நூதனமான முறையில் கொள்ளையர்கள் திருடி செல்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சூழலில் காரின் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த 40 லட்ச ரூபாயை, 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, மிகவும் நூதனமான முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளது. இதற்காக மர்ம கும்பல் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 40 ரூபாய்தான்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் வாகன உரிமையாளர்களின் அச்சத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. 3 பேர் கொண்ட அந்த கும்பல், வெறும் 40 ரூபாயை பயன்படுத்தி, 40 லட்ச ரூபாயை எப்படி கொள்ளையடித்தனர்? என இனி பார்க்கலாம்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த குடும்பம் ஒன்று, தங்களது ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி வகை காரில், கடந்த சில நாட்களுக்கு முன் நகைகள் வாங்குவதற்காக, நாட்டின் தலைநகர் டெல்லிக்கு வந்திருந்தனர்.
பின்னர் பிரபலமான நகை கடை ஒன்றின் முன்பாக காரை நிறுத்தி விட்டு, அனைவரும் உள்ளே சென்றனர். நகைகடைக்குள் அவர்கள் அனைவரும், ஆர்வத்துடன் வித்தியாசமான நகை டிசைன்களை பார்வையிட்டு கொண்டிருந்தனர்.
ஆனால் டிரைவர் மட்டும் காரிலேயே இருந்தார். அத்துடன் காரின் டிக்கியில் பேக் ஒன்று இருந்தது. அதில், 40 லட்ச ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. நகைகளை வாங்கி முடித்த பின் பணத்தை எடுத்து கொள்ளலாம் என அந்த குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
அப்போதுதான் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு வந்து, பணத்தை கொள்ளையடிக்கும் தங்கள் திட்டத்தை அரங்கேற்ற தொடங்கியது. ஒரு சில நிமிடங்களில் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, 40 லட்ச ரூபாய் இருந்த பேக்கை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
3 பேரில் முதலாவது நபர், காரின் டிக்கியின் அருகே நின்று கொண்டு, செல்போனில் பேசி கொண்டே அங்கும் இங்கும் நடமாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இரண்டாவது நபர், டிரைவர் சீட்டிற்கு அருகே சென்று, 40 ரூபாய் மதிப்பிலான தாள்களை, முன்பக்க சக்கரத்திற்கு அருகே வேண்டுமென்றே சிதற விட்டார்.
பின்னர் கார் கண்ணாடியை தட்டி, பணத்தை நீங்கள் கீழே சிதற விட்டு விட்டீர்கள் என டிரைவரிடம் கூறினார். உடனடியாக கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிய டிரைவர், சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றார்.
அந்த நேரத்தில் காரின் டிக்கியின் அருகே நின்று கொண்டிருந்த முதலாவது நபர், டிக்கியை திறந்து, 40 லட்ச ரூபாய் வைக்கப்பட்டிருந்த பேக்கை எடுத்து கொண்டு அங்கிருந்த நழுவினார். அப்போது மூன்றாவது நபர், காரின் டிரைவரை கண்காணித்து கொண்டே இருந்தார்.
டிரைவர் பின்னால் திரும்பி பார்த்தால் முதலாவது நபருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அவர் டிரைவரை உற்று கவனித்து கொண்டே இருந்தார். ஆனால் டிரைவர் பின்னால் திரும்பி பார்க்கவே இல்லை. இதனால் 40 லட்ச ரூபாய் பரிதாபமாக பறிபோனது.
இந்த சம்பவங்கள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அந்த வீடியோ காட்சி, தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டெல்லியை சேர்ந்த 'தக் தக்' என்ற கும்பல்தான், இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. வாகனங்களையும், வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடிப்பதையே இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதற்காக இது போன்ற நூதன வழிமுறைகளை அவர்கள் கையாள்கின்றனர். கடந்த சில நாட்களாக வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த 'தக் தக்' கொள்ளை கும்பல், தற்போது மீண்டும் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளனர்.
இதுபோன்ற கொள்ளையர்களிடம் இருந்து தப்ப வேண்டுமானால், காரின் முன் மற்றும் பின் இருக்கைகளில் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் வைக்காதீர்கள். அப்படியே வைக்க வேண்டும் என்றாலும், இருக்கைகளுக்கு அடியே மிகவும் பாதுகாப்பாக மறைத்து வையுங்கள்.
அத்துடன் காரின் கதவுகளை லாக் செய்யாமல் எங்கும் சென்று விடாதீர்கள். காரின் கதவுகள் லாக் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை சோதித்து பார்ப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். எப்போதும் இதனை பின்பற்றலாம்.
அப்போதுதான் இத்தகைய கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வாகனத்தையும், வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த பொருட்களையும் பாதுகாக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?