Just In
- 4 min ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 1 hr ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 1 hr ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- 2 hrs ago 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 அதிநவீன பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு
தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சென்னை, கோவையில் வெகு விரைவில் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சென்னை, கோவையில் வெகு விரைவில் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழக தலைநகர் சென்னை மற்றும் கோவையில், எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், தமிழக போக்குவரத்து துறை மற்றும் லண்டன் சி-40 முகமைக்கு இடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது.
தமிழக போக்குவரத்து துறை எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க லண்டன் சி-40 முகமை உதவி செய்யும். இதன் ஒரு பகுதியாக, லண்டன் சி-40 முகமையை சேர்ந்த பிரதிநிதிகள், கடந்த மாதம் 21-24 வரை சென்னையில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது லண்டனில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அழைப்பு விடுத்தனர். இதன்பேரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் டேவிதார் ஆகியோர் சமீபத்தில் லண்டன் சென்றனர்.
எலெக்ட்ரிக் பஸ்கள் எவ்வாறு இயக்கப்படுகிறது? என்பதை ஆய்வு செய்வதற்காக அவர்கள் லண்டன் பயணம் மேற்கொண்டனர். இந்த சூழலில், கரூரில் நேற்று (செப்.20) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''சென்னை மற்றும் கோவையில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 80 எலெக்ட்ரிக் பஸ்களையும், கோவையில் 20 எலெக்ட்ரிக் பஸ்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நான் லண்டன் சென்றிருந்தபோது, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (Transport For London-TFL) அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன் (TFL எனும் அரசு அமைப்புதான், கிரேட்டர் லண்டனில் பஸ்களை இயக்கி வருகிறது).
எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் உள்ள சவால்கள் குறித்தும், அதிக அளவிலான சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழலில், சி-40 முகமையை சேர்ந்த குழுவினர் மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளனர்.
சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது தொடர்பாகவும், சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ வேண்டிய இடங்களை கண்டறிவது தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். சென்னை, கோவையில் இயக்கப்படவுள்ள எலெக்ட்ரிக் பஸ்களின் விலை தலா 2 கோடி ரூபாய்'' என்றார்.
சென்னை, கோவையில் இயக்கப்படவுள்ள 100 எலெக்ட்ரிக் பஸ்கள் தவிர்த்து, தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில், 450 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் தமிழகம்தான் போக்குவரத்து துறையில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது. ஆனால் அதிகாரிகள் மத்தியில் தலைவிரித்தாடிய ஊழல், லஞ்சம் காரணமாக, நாளடைவில் தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் பயணிக்க தொடங்கியது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிநவீன வசதிகளுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் நிலையோ பரிதாபமாக உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் ஓட்டை, உடைசல் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, ஸ்லீப்பர், ஏசி, கழிவறை வசதிகளுடன் கூடிய அதிநவீன பஸ்கள், கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுதவிர சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை வெகு விரைவில் இயக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கலாம். அத்துடன் இந்த பஸ்கள் சுற்றுச்சூழலுக்கும் மாசுபாட்டை ஏற்படுத்தாது.
இது தாமதமான நடவடிக்கைதான் என்றாலும், தமிழக அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் புதிய பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!