Just In
- 37 min ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 2 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 3 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 5 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- News ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு புதுவை, தெலுங்கானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Movies ராஜமெளலி படத்துல மகேஷ் பாபு இந்த கெட்டப்புல நடிக்கிறாரா?.. வெளியான வெறித்தனமான ஸ்டில்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 550 அதிநவீன பஸ்கள் இயக்கம்.. சென்னை, கோவைக்கு ஸ்பெஷல் கவனிப்பு
தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சென்னை, கோவையில் வெகு விரைவில் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதுதவிர சென்னை, கோவையில் வெகு விரைவில் 100 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தமிழக தலைநகர் சென்னை மற்றும் கோவையில், எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம், தமிழக போக்குவரத்து துறை மற்றும் லண்டன் சி-40 முகமைக்கு இடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், கடந்த மார்ச் மாதம் கையெழுத்தானது.
தமிழக போக்குவரத்து துறை எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க லண்டன் சி-40 முகமை உதவி செய்யும். இதன் ஒரு பகுதியாக, லண்டன் சி-40 முகமையை சேர்ந்த பிரதிநிதிகள், கடந்த மாதம் 21-24 வரை சென்னையில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது லண்டனில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வருமாறு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அழைப்பு விடுத்தனர். இதன்பேரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் டேவிதார் ஆகியோர் சமீபத்தில் லண்டன் சென்றனர்.
எலெக்ட்ரிக் பஸ்கள் எவ்வாறு இயக்கப்படுகிறது? என்பதை ஆய்வு செய்வதற்காக அவர்கள் லண்டன் பயணம் மேற்கொண்டனர். இந்த சூழலில், கரூரில் நேற்று (செப்.20) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''சென்னை மற்றும் கோவையில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 80 எலெக்ட்ரிக் பஸ்களையும், கோவையில் 20 எலெக்ட்ரிக் பஸ்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நான் லண்டன் சென்றிருந்தபோது, டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (Transport For London-TFL) அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன் (TFL எனும் அரசு அமைப்புதான், கிரேட்டர் லண்டனில் பஸ்களை இயக்கி வருகிறது).
எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதில் உள்ள சவால்கள் குறித்தும், அதிக அளவிலான சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழலில், சி-40 முகமையை சேர்ந்த குழுவினர் மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளனர்.
சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது தொடர்பாகவும், சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவ வேண்டிய இடங்களை கண்டறிவது தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர். சென்னை, கோவையில் இயக்கப்படவுள்ள எலெக்ட்ரிக் பஸ்களின் விலை தலா 2 கோடி ரூபாய்'' என்றார்.
சென்னை, கோவையில் இயக்கப்படவுள்ள 100 எலெக்ட்ரிக் பஸ்கள் தவிர்த்து, தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில், 450 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் தமிழகம்தான் போக்குவரத்து துறையில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது. ஆனால் அதிகாரிகள் மத்தியில் தலைவிரித்தாடிய ஊழல், லஞ்சம் காரணமாக, நாளடைவில் தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் பயணிக்க தொடங்கியது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிநவீன வசதிகளுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் நிலையோ பரிதாபமாக உள்ளது. ஏனெனில் தமிழகத்தில் ஓட்டை, உடைசல் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, ஸ்லீப்பர், ஏசி, கழிவறை வசதிகளுடன் கூடிய அதிநவீன பஸ்கள், கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் இன்னும் 15 நாட்களில் 450 புதிய பஸ்கள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுதவிர சென்னை மற்றும் கோவையில் எலெக்ட்ரிக் பஸ்களை வெகு விரைவில் இயக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனெனில் எலெக்ட்ரிக் பஸ்கள் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்கலாம். அத்துடன் இந்த பஸ்கள் சுற்றுச்சூழலுக்கும் மாசுபாட்டை ஏற்படுத்தாது.
இது தாமதமான நடவடிக்கைதான் என்றாலும், தமிழக அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் புதிய பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
-
பாதி விலையில் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! மத்திய அரசு செய்த வேறலெவல் மேஜிக்!
-
இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!
-
மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!