Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விபத்தில் சிக்கிய காரை பார்த்தவர்கள் புதிய கார் வாங்கும் விநோதம்..!
கார் ஷோரூம் என்றால் நல்ல அழகான கார் எந்த வித குறையும் இல்லாமல் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.
புதிய காரை விற்கும் ஷோரூமில் விபத்தில் சிக்கிய காரை காட்சிக்கு வைக்கப்பட்டு பார்த்திருக்கிறீர்களா? இது உண்மையில் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் விபத்தில் சிக்கிய காரை பார்த்து புதிய காரை வாங்குகிறார்களாம்.
கார் ஷோரூம் என்றால் நல்ல அழகான கார் எந்த வித குறையும் இல்லாமல் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களை கவர எல்லா டீலர்களும் இந்த யுக்தியை கையாள்கின்றனர்.
இவ்வாறாக காரை காட்சிக்கு வைப்பது மூலம் மக்கள் தாங்கள் வாங்கும் காரை வாங்கும் முன்னே அதன் லுக், வசிதிகள், அம்சங்கள் என எல்லாவற்றையில் நேரில் பார்த்து வாங்க முடியும். இதன் மூலம் மக்கள் மனதை காருடன் நெருக்கமாக உணர வைக்க முடியும்.
இவ்வாறாக நிறுத்தப்படும் காரில் கலர் லுக் என அனைத்தையும் கார் டீலர் கவனமாக பார்த்து அதை தேர்ந்தெடுப்பார். அந்த கார் பளபளக்கும் வகையில் சிறு தூசி கூட இல்லாமல் இருக்கும். நாம் அந்த காரை தொட்டால் அதில் நம் கைரேகை பதியும் அளவிற்கு மிக சுத்தமாக இருக்கும். இந்த மாதிரியான விற்பனை யுக்தியை உலகம் முழுவதும் நாம் பார்த்திருப்போம்.
ஆனால் அமெரிக்காவில் இதற்கு நேர் மாறாக விபத்தில் சிக்கிய டொயோட்டா கேம்ரி காரை வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைத்திருக்கிறார். கார் டீலர் ஒருவர். அவர் காட்சிக்கு வைத்துள்ள காரின் முன்புறமும் பின்புறம் விபத்தில் சிக்கி கடுமையாக சேதமாகியுள்ளது. இதை பத்திரமாக எடுத்து வந்து வாடிக்கையாளரின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் இந்த காரை அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானத்தில் உள்ள அந்நிறுவனத்தின் வாடிக்கையாளரை பிக்கப் செய்ய எடுத்து சென்றுள்ளார். அப்பொழுது ஒரு சிக்னலில் இவர் காத்திருக்கும் போது இவருக்கு பின்னால் வந்த சிறிய ரக டிரக் ஒன்று இந்த கார் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் இந்த கார் எதிரே நின்று கொண்டிருந்த பெரிய டிரக் மீது மோதியது.
இதில் காரின் முன்பக்கமும், பின்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது. ஆனால் காரில் உள்ளே இருந்தவர்களுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. மேலும் இந்த மோசமான விபத்திற்கு பின்பும் காரின் கதவுகள் எளிதாக திறக்கும் வகையில் இருந்தது. இதனால் காரில் இருந்து சுலமாக வெளியே வந்துவிட்டனர்.
இந்த விபத்து குறித்து முதலில் கேள்விபட்ட டீலர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் காரில் பயணித்தவர்களை நேரில் பார்க்க சென்றார். அவர்கள் எந்த வித காயமும் இன்றி எப்பவும் போல் இருந்தனர். ஆனால் காரின் முன் பாகமும் பின் பாகமும் பலத்த சேதமடைந்திருந்தது. இதை பார்த்தது டீலர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அப்பொழுது அவருக்கு புது விதமான யோசனை தோன்றியது.
உடனடியா அந்த காரை சரி செய்யாமல் நேராக அதை ஷோரூமிற்கு பத்திரமாக எடுத்து சென்று காட்சி வைத்து விட்டார். தற்போது அங்கு செல்லும் வாடிக்கையாளர்களிடம் இந்த காரின் பில்ட் தரம் பற்றி புரிய வைக்க இந்த காரை காட்சி படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதன் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் மீது பெரும் நம்பிக்கை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் இந்த காரை தொட்டுபார்க்க அனுமதியில்லை. விபத்தில் சிக்கிய காரை தொட்டு பார்த்தால் அல்லது பயன்படுத்தினால் பெரும் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த காரின் நிலையை பார்த்தாலே வாடிக்கையாளர்களுக்கு பெரும் நம்பிக்கை ஏற்படும் என அந்நிறுவனம் கருதுகிறது.
அந்நிறுவனம் கருதியதை போல இந்த முயற்சி பலன் அளித்துள்ளதாகவும், பலருக்கு இந்த காரை பார்த்து விட்டு நம்பிக்கை வந்து புதிய காரை வாங்கியதாகவும், இதனால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் காரை சென்டிமென்டாக பார்க்கும் போது வெளி நாடுகளில் கார்களை வெறும் பயணிக்கும் வாகனமாக மட்டுமே பார்க்கின்றனர்.
இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது கார் வாங்கும் பலர் விபத்திற்குள்ளான காரை பாரத்த பின்பு அதே போல புதிய காரை வாங்குவார்களா என்பது கேள்வி குறிதான். ஒரு சில பெரும் நகரங்களில் உள்ள டீலர்கள் இதை முயற்சிக்கலாம். அனால் அது நெகட்டிவ்வாக பலன் அளிக்காமல் போனால் சரிதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்