Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இனி 80 கி.மீ. வேகத்திற்கு மேல் டாக்ஸியில் செல்ல முடியாது... விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கேப்ஸ் பயன்பாட்டிற்கான கார்களில் தயாரிப்பின் போதே அந்த காரின் அதிகபட்ச வேகத்தை 80 கி.மீ. என கட்டுப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் வி
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கேப்ஸ் பயன்பாட்டிற்கான கார்களில் தயாரிப்பின் போதே அந்த காரின் அதிகபட்ச வேகத்தை 80 கி.மீ. என கட்டுப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க உதவியாக இருக்கும். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம் வாருங்கள்.
இந்தியாவில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெருக்கடிக்கு ஏற்ப, சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சமீப காலமாக கட்டமைக்கப்படும் சாலைகளின் தரம் உயர்வாக இருக்கிறது. இதனால் அதிக வேகத்தில் வாகனங்கள் பயணிக்கின்றன.
இவ்வாறு அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்களால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, குறிப்பிட்ட வாகனங்களில், ஸ்பீடு கவர்னர்கள் கொண்டு, அதிகபட்ச வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பள்ளி வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களில் எல்லாம் ஸ்பீடு கவர்னரை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வாகனங்கள் வேகமாக செல்வது கட்டுப்படுத்தப்படும். அத்துடன் விபத்துக்களையும் குறைக்கலாம் என்ற எண்ணத்தில் அரசு இதை செய்து வருகிறது.
இது மட்டும் இல்லாமல் டாக்ஸிகளுக்கும் வேக கட்டுப்பாட்டை சில மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. அந்த வகையில், டாக்ஸிகள் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திற்கு அதிகமாக செல்ல முடியாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறை ஒவ்வொரு மாநிலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனம் ஸ்பீடு லிமிட் உடன் வாகனங்களை தயாரித்துள்ளது. அதாவது டொயோட்டா நிறுவனம் செய்யும் டிராவல்ஸ் போர்டு கார்களில், 80 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல இயலாது. இதனால் அந்த கார்களை வாங்குபவர்கள் தனியாக ஸ்பீடு கவர்னர்களை மாட்ட வேண்டிய அவசியம் இல்லை.
இது போல ஏற்கனவே மாருதி சுஸூகி நிறுவனமும் இந்த ஸ்பீடு கண்ட்ரோலுடன் மாருதி டிசையர் டூர் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது டொயோட்டா நிறுவனமும் இதை பயன்படுத்தி வருகிறது.
பாதுகாப்பான வாகனங்களை விற்பனை செய்வதில், உலக அளவில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது. அதற்காக பிஎன்விஎஸ்ஏபி என்ற சோதனை, குறிப்பிட்ட மாடல்கள் வெளியாவதற்கு முன் செய்யப்படுகிறது.
இந்த சோதனையில் தேர்ச்சி பெற்ற கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும். இந்த சோதனையில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும், பிரேசில் நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும், இந்தியா ஆறாவது இடத்திலும் உள்ளன.
அதே நேரத்தில் இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களின் காரணமாக, ஒரு ஆண்டிற்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை காட்டிலும், 3-4 மடங்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாவின் பார்வையில்:
மற்ற நாடுகளை போல காரின் தரம் சோதிக்கப்பட்டாலும், இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை, அரசால் பெரும் அளவிற்கு குறைக்க முடியவில்லை. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளே, இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இங்கு கார் ஓட்டவே தெரியாத பலர், காருக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறார்கள். இதை சரி செய்ய அரசு பெரும் முயற்சியை எடுக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் மட்டுமே, இந்தியாவில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அதற்கு இடையில் இது போன்ற செயல்களும் கட்டாயம் தேவைப்படுகிறது. அரசு இதை செய்து வருவது வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்றே.
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..