Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..
நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டாக்ஸி டிரைவரின் செயலுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டாக்ஸி டிரைவரின் செயலுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஓலா, உபேர் போன்ற கேப் (Cab) நிறுவனங்கள் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள், ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
ஆனால் ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகளில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலானோரால் பரவலாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக டாக்ஸிகளில் தனியாக செல்லும் பெண்கள் மிகுந்த அச்ச உணர்வுடன்தான் பயணித்து வருகின்றனர்.
ஏனெனில் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் உபேர் டாக்ஸியில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது உபேர் டாக்ஸியின் டிரைவரான சிவகுமார் யாதவ், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. முன்னதாக உபேர் டாக்ஸியின் டிரைவர் சிவகுமார் யாதவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்தான், டாக்ஸியில் தனியாக பயணிக்க பெண்கள் மத்தியில் அச்சம் அதிகரித்தது. சிவ குமார் யாதவ் என்ற அந்த டிரைவரால் உபேர் நிறுவனத்திற்கு பெரும் அவப்பெயர் உண்டானது. உபேர் நிறுவனத்தின் மீது ஏற்பட்ட அந்த கலங்கத்தை சந்தோஷ் என்ற டிரைவர் தற்போது துடைத்துள்ளார்.
பிரியஷ்மிதா குஹா என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன் தன் தாயாருடன் உபேர் டாக்ஸியில் பயணம் செய்தார். அந்த டாக்ஸியை சந்தோஷ் என்ற டிரைவர் ஓட்டி சென்றார். பிரியஷ்மிதா குஹாவும், அவரது தாயாரும் தங்கியிருந்த இடத்திற்கு சரியாக 1 மணியளவில் டாக்ஸி சென்று சேர்ந்தது.
ஆனால் அப்போது அந்த இடத்தின் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பிரியஷ்மிதா குஹாவும், அவரது தாயாரும் பரிதவிப்புக்கு ஆளாயினர். அப்போது நள்ளிரவு 1 மணியாகியிருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், 2 பெண்களையும் தனியாக விட்டு செல்ல டிரைவர் சந்தோசுக்கு மனம்வரவில்லை.
|
எனவே கேட் திறக்கப்படும் வரை, அவர்களின் பாதுகாப்பிற்காக டிரைவர் சந்தோஷ் அங்கேயே இருந்தார். சுமார் 2.30 மணியளவில் அதாவது ஒன்றரை மணி நேரம் கழிந்த பிறகே கேட் திறக்கப்பட்டது. அதுவரை டிரைவர் சந்தோஷ் அங்கேயேதான் இருந்தார்.
2 பெண்களும் உள்ளே சென்ற பின்புதான் டிரைவர் சந்தோஷ் கிளம்பி சென்றார். முன்னதாக அடுத்த பயணத்திற்கு அவருக்கு அவ்வப்போது அழைப்பு வந்து கொண்டிருந்தது. ஆனால் 2 பெண்களை நள்ளிரவில் தனியாக விட்டு விட்டு வர முடியாது என்பதால், அந்த அழைப்புகளை சந்தோஷ் நிராகரித்து விட்டார்.
|
நடந்த சம்பவங்களை எல்லாம் பிரியஷ்மிதா குஹா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் (ஆனால் எந்த இடம் என்பதை குறிப்பிடவில்லை). உடனே அந்த டிவிட் வைரலானது. தனது வருமானத்தை பெரிதாக எண்ணாமல், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களின் பாதுகாப்பிற்காக ஒன்றரை மணி நேரத்தை செலவிட்டதால், சந்தோசுக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கின.
இதனிடையே சமீப காலமாக #MeToo பரப்புரையின் கீழ் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியிலான கொடுமைகளை எல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சூழலில், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த டிரைவர் சந்தோஷின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரியஷ்மிதா குஹா டிவிட்டரில் வெளியிட்ட தகவல் உபேர் நிறுவனத்தையும் சென்றடைந்தது.
|
உடனடியாக டிரைவர் சந்தோஷை அழைத்து பாராட்டியது உபேர் நிறுவனம். உபேர் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பிரியஷ்மிதா குஹா டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தனது துர்கா பூஜை விழா கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதுடன் அவர்களை பாதுகாத்த டிரைவர் சந்தோசுக்கு தற்போது நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!