Just In
- 57 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டிரைவர்.. பாராட்டு குவிகிறது..
நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டாக்ஸி டிரைவரின் செயலுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை ஆபத்தில் இருந்து பாதுகாத்த உபேர் டாக்ஸி டிரைவரின் செயலுக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஓலா, உபேர் போன்ற கேப் (Cab) நிறுவனங்கள் வெகு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள், ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
ஆனால் ஓலா, உபேர் போன்ற டாக்ஸிகளில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு பெரும்பாலானோரால் பரவலாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக டாக்ஸிகளில் தனியாக செல்லும் பெண்கள் மிகுந்த அச்ச உணர்வுடன்தான் பயணித்து வருகின்றனர்.
ஏனெனில் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த 2014ம் ஆண்டு இளம்பெண் ஒருவர் உபேர் டாக்ஸியில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது உபேர் டாக்ஸியின் டிரைவரான சிவகுமார் யாதவ், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. முன்னதாக உபேர் டாக்ஸியின் டிரைவர் சிவகுமார் யாதவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு பின்தான், டாக்ஸியில் தனியாக பயணிக்க பெண்கள் மத்தியில் அச்சம் அதிகரித்தது. சிவ குமார் யாதவ் என்ற அந்த டிரைவரால் உபேர் நிறுவனத்திற்கு பெரும் அவப்பெயர் உண்டானது. உபேர் நிறுவனத்தின் மீது ஏற்பட்ட அந்த கலங்கத்தை சந்தோஷ் என்ற டிரைவர் தற்போது துடைத்துள்ளார்.
பிரியஷ்மிதா குஹா என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன் தன் தாயாருடன் உபேர் டாக்ஸியில் பயணம் செய்தார். அந்த டாக்ஸியை சந்தோஷ் என்ற டிரைவர் ஓட்டி சென்றார். பிரியஷ்மிதா குஹாவும், அவரது தாயாரும் தங்கியிருந்த இடத்திற்கு சரியாக 1 மணியளவில் டாக்ஸி சென்று சேர்ந்தது.
ஆனால் அப்போது அந்த இடத்தின் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் பிரியஷ்மிதா குஹாவும், அவரது தாயாரும் பரிதவிப்புக்கு ஆளாயினர். அப்போது நள்ளிரவு 1 மணியாகியிருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், 2 பெண்களையும் தனியாக விட்டு செல்ல டிரைவர் சந்தோசுக்கு மனம்வரவில்லை.
|
எனவே கேட் திறக்கப்படும் வரை, அவர்களின் பாதுகாப்பிற்காக டிரைவர் சந்தோஷ் அங்கேயே இருந்தார். சுமார் 2.30 மணியளவில் அதாவது ஒன்றரை மணி நேரம் கழிந்த பிறகே கேட் திறக்கப்பட்டது. அதுவரை டிரைவர் சந்தோஷ் அங்கேயேதான் இருந்தார்.
2 பெண்களும் உள்ளே சென்ற பின்புதான் டிரைவர் சந்தோஷ் கிளம்பி சென்றார். முன்னதாக அடுத்த பயணத்திற்கு அவருக்கு அவ்வப்போது அழைப்பு வந்து கொண்டிருந்தது. ஆனால் 2 பெண்களை நள்ளிரவில் தனியாக விட்டு விட்டு வர முடியாது என்பதால், அந்த அழைப்புகளை சந்தோஷ் நிராகரித்து விட்டார்.
|
நடந்த சம்பவங்களை எல்லாம் பிரியஷ்மிதா குஹா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் (ஆனால் எந்த இடம் என்பதை குறிப்பிடவில்லை). உடனே அந்த டிவிட் வைரலானது. தனது வருமானத்தை பெரிதாக எண்ணாமல், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களின் பாதுகாப்பிற்காக ஒன்றரை மணி நேரத்தை செலவிட்டதால், சந்தோசுக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கின.
இதனிடையே சமீப காலமாக #MeToo பரப்புரையின் கீழ் திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியிலான கொடுமைகளை எல்லாம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட சூழலில், நள்ளிரவு நேரத்தில் 2 பெண்களை பாதுகாத்த டிரைவர் சந்தோஷின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரியஷ்மிதா குஹா டிவிட்டரில் வெளியிட்ட தகவல் உபேர் நிறுவனத்தையும் சென்றடைந்தது.
|
உடனடியாக டிரைவர் சந்தோஷை அழைத்து பாராட்டியது உபேர் நிறுவனம். உபேர் நிறுவனத்தின் இந்த செயலுக்கு பிரியஷ்மிதா குஹா டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தனது துர்கா பூஜை விழா கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2 பெண்களிடம் நள்ளிரவு நேரத்தில் கண்ணியமாக நடந்து கொண்டதுடன் அவர்களை பாதுகாத்த டிரைவர் சந்தோசுக்கு தற்போது நாடு முழுவதிலும் இருந்து பொதுமக்கள் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!