Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 5 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளரே நஷ்டஈடை கட்ட வேண்டும் என்றும், அவர் கட்டவில்லை என்றால் அந்த வாகனத்தை ஏலத்தில் விட்டு அத
இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளரே நஷ்டஈடை கட்ட வேண்டும் என்றும், அவர் கட்டவில்லை என்றால் அந்த வாகனத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு நஷ்டஈடு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் நடக்கும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தரமான சாலைகள் அமைத்தல், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துதல் என அரசு தொடர்ந்து முயற்சிகளை எடுத்து கொண்டு இருக்கிறது.
இருந்தாலும் இந்தியாவில் நிகழும் விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் இந்தியாவில் ஓடும் அத்தனை வாகனங்களுக்கும் காப்பீடு அவசியம் என்ற சட்டம் அமலில் இருக்கிறது.
இதன் மூலம் எதிர்பாராத வகையில் விபத்துக்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் இன்சூரன்ஸ் வாங்காத வாகனம் விபத்தில் சிக்கினால்?
இன்சூரன்ஸ் வாங்காத வாகனம் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த இன்சூரன்ஸ் நிறுவனமும் பொறுப்பேற்காது. இப்படியாக ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. அதில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் நிகழ்த்திய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளரே பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்றும், இதை 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும்,
இல்லாவிட்டால் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை அரசு பறிமுதல் செய்து, அதை ஏலத்தில் விட்டு, அதில் வரும் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் விபத்தில் சிக்கினால், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டை விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர்களே செலுத்த வேண்டும் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான 12 வாரங்களுக்குள் இதனை செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கோ, ரத்த காயம் ஏற்படும் அளவிற்கோ விபத்தில் சிக்கினால் அதை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், விபத்தில் சிக்கிய காரின் உரிமையாளர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வரை வாகனத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படுத்திய இன்ஸ்சூரன்ஸ் இல்லாத வாகனத்தின் உரிமையாளர் விபத்து நடந்து 3 மாதங்களுக்குள் நஷ்டஈடு வழங்கப்படவில்லை எனில் அந்த வாகனத்தை ஏலத்தில் விட அறிவிக்கப்பட வேண்டும்.
அந்த அறிவிப்பு வெளியாகி 15 நாட்களுக்குள் அந்த வாகனத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை நஷ்டஈடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாகனம் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் வாகனத்திற்கான மூன்றாம் நபருக்கான காப்பீட்டை கட்டாயம் எடுத்திருக்க வேண்டும். வாகனத்திற்கான சொந்த சேதாரத்திற்கான காப்பீட்டை எடுப்பதும், எடுக்காமல் இருப்பதும் கட்டாயமில்லை.
இதில் மூன்றாம் நபருக்கான காப்பீடு என்பது வாகனத்தால் ஏற்படும் தீ விபத்து, வெடிவிபத்து, சாலை விபத்து, மற்றும் ரயில் பாதை விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பணம் வழங்கப்படும்.
அதுவே மூன்றாம் நபருக்கான காப்பீடு மற்றும் சொந்த வாகனத்திற்கான சேதார காப்பீடு என்றால் திருட்டு, வாகனத்திற்கான சேதாரம், பயணிகள் மற்றும் டிரைவர்கள உயிரிழந்தால் அவர்களுக்கான இழப்பீடு மற்றும் மூன்றாம் நபருக்கான காப்பீட்டில் உள்ள பலன்கள் சேர்ந்து கிடைக்கும்.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!