Just In
- 1 hr ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- 3 hrs ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 5 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 5 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Movies Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சோதனை ஓட்டத்தின்போது தீப்பிடித்து எரிந்த புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்... சென்னை அருகே பரபரப்பு
சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக ஸ்கார்ப்பியோ எஸ்யூவி விளங்குகிறது. பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் புதிய மாற்றங்களுடன் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக இந்த புதிய மாடல் நாட்டின் பல்வேறு இடங்களில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகளில் கிடைக்கும் தரவுகளை வைத்து இந்த காரில் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை அருகே புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார் ஒன்று நேற்று மாலை சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது காரின் எஞ்சின் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுனர், அந்த காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கிவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மஹிந்திரா வேர்ல்டு சிட்டி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட சாலை சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் வர இருக்கிறது. அத்துடன், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் களமிறக்கப்பட இருக்கிறது.
தற்போதைய மாடலைவிட மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். அதாவது, இதன் புதிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் வழங்கப்படும்.
புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் நீள, அகலத்திலும் பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையிலேயே இதுவரை தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடலைவிட மிகவும் கம்பீரமாகவும், சக்திவாய்ந்த எஞ்சினுடன் வருவதால், ஸ்கார்ப்பியோ பிரியர்களையும், எஸ்யூவி கார் வாங்க இருப்போர் மத்தியிலும் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!