Just In
- 3 hrs ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- 8 hrs ago 35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!
- 10 hrs ago மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- 10 hrs ago டீசலை எதிர்பாக்காதீங்க.. பெட்ரோல் மட்டும்தான் கிடைக்கும்.. ரொம்ப நாளா எதிர்பார்க்கப்படும் காரில் டுவிஸ்ட்!
Don't Miss!
- Sports 12 மாதங்களாக கெஞ்சி கொண்டிருக்கிறோம்.. சுனில் நரைன் கண்டுகொள்ளவே இல்லை.. கலங்கிய ராஜஸ்தான் வீரர்!
- Movies 4000 ஆயிரம் சதுர அடி.. மும்பையில் புது வீடு வாங்கிய பூஜா ஹெக்டே.. விலை என்ன தெரியுமா?
- News 21 மாநிலங்கள்.. 102 தொகுதிகளில் ஏப்.19 முதற்கட்ட தேர்தல்! இறுதிக்கட்ட பரப்புரையில் தலைவர்கள் தீவிரம்
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சோதனை ஓட்டத்தின்போது தீப்பிடித்து எரிந்த புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்... சென்னை அருகே பரபரப்பு
சென்னை அருகே சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடலாக ஸ்கார்ப்பியோ எஸ்யூவி விளங்குகிறது. பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் புதிய மாற்றங்களுடன் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக இந்த புதிய மாடல் நாட்டின் பல்வேறு இடங்களில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகளில் கிடைக்கும் தரவுகளை வைத்து இந்த காரில் மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை அருகே புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி கார் ஒன்று நேற்று மாலை சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது காரின் எஞ்சின் பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுனர், அந்த காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கிவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மஹிந்திரா வேர்ல்டு சிட்டி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட சாலை சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் வர இருக்கிறது. அத்துடன், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் களமிறக்கப்பட இருக்கிறது.
தற்போதைய மாடலைவிட மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும். அதாவது, இதன் புதிய டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளில் வழங்கப்படும்.
புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் நீள, அகலத்திலும் பெரிய கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையிலேயே இதுவரை தொடர்ந்து சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடலைவிட மிகவும் கம்பீரமாகவும், சக்திவாய்ந்த எஞ்சினுடன் வருவதால், ஸ்கார்ப்பியோ பிரியர்களையும், எஸ்யூவி கார் வாங்க இருப்போர் மத்தியிலும் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.
-
எல்லாரும் லட்டு கொடுத்து கொண்டாட போறாங்க.. புதிய ஸ்விஃப்ட் மே 2வது வாரத்துக்குள் அறிமுகமாக போகுதா!
-
31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
-
இந்தியாவின் முதல் தங்க நிறம் கொண்ட ஸ்கார்பியோ!.. இந்த கலரும் அதுக்கு செம்ம எடுப்பா இருக்கு!