Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கோடைகால வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி?: சிறந்த சில ஐடியாக்கள்
கோடைகால அனலினால் காரினுள் வெப்பம் அதிகரித்து ஓட்டுனர்கள் கார்களை ஓடுவதற்கு மிகவும் கடினமான சூழ்நிலை உண்டாகும். இதனை தவிர்க்க கோடை வெப்பத்தில் கார்களை பாதுகாப்பது எப்படி என சில வழிகளை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கோடை காலம் முழுமையாக துவங்கும் முன்னரே வெயில் மக்களை வதைக்க ஆரம்பித்துள்ளது. பல நகரங்களில் 100 டிகிரியை நெருங்கியுள்ள வெப்பத்தால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் வெப்பத்தில் நாம் குளிரூட்டும் விஷயங்களை செய்து நம்மை பராமரித்து கொள்வது போல கார்களையும் பராமரிக்க வேண்டும்.
கோடை காலமான மே மற்றும் ஜூன் மாதத்தில் தான் அதிகமாக வெளியூர் பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் உள்ளதால் காரை கூலாக வைப்பது கார் ஓட்டுபவர்களின் சிரமத்தை குறைக்கும். காரினுள் அதிக உஷ்ணம் வராமல் தவிர்க்க காரினுள் குளிர்ந்த நிலையை தக்க வைப்பது மிகவும் அவசியம். குறிப்பாக கோடை காலங்களில் குழந்தைகளுடன் செல்லும்போது காரின் உஷ்ணம் அவர்களை அதிகமா பாதிக்கும். இதனை தவிர்க்க சில வழிமுறைகளை கையாண்டால் வெப்பத்தில் காரினை பாதுக்காக்க முடியும்.
காரின் டோர்களில் பிரதிபலிப்பான்கள் மற்றும் மறைப்புகள் பொறுத்துவத்தின் மூலம் காரினுள் வரும் வெப்பத்தை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக தரமான பிரதிபலிப்பான்கள் மற்றும் மறைப்புகள் காரில் பொருத்துவதன் மூலம் காரினுள் வரும் வெப்பம் தடுக்கப்பட்டு குளுமையான சூழல் உருவாகிறது. மேலும் பிரதிபலிப்பான்கள் மற்றும் மறைப்புகள் கார் டோரின் கண்ணாடிகள் மங்காமல் தடுக்க உதவுகிறது. இதனால் டோரின் கண்ணாடிகள் நீண்ட காலம் தாரமாக இருக்கும். பிரதிபலிப்பான்கள் மற்றும் மறைப்புகள் மூலம் காரின் ஓட்டுநர் மட்டுமின்றி பயணிகளும் சிறப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
காரினை பார்க்கிங் செய்யம்போது நிழலான இடத்தில் பார்க்கிங் செய்வது காரின் வெப்பத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி கார் பெயிண்டின் தன்மை குறையாமல் கட்டுப்படுத்தும். குறிப்பாக மரங்களின் நிழலில் நிறுத்தினால் மரத்தின் குளுமையான காற்று காரினுள் குளிர்ந்த சூழலை அப்படியே வைத்திருக்கும். அதிலும் காரினை நிழலில் நிறுத்தும்போது டோர் கண்ணாடிகளை திறந்து வைத்தால் காற்று உங்கள் காரினுள் உள்ள வெப்பத்தை குறைக்கும். ஆனால் காரினுள் உங்கள் விலையுயர்ந்த பொருட்களை விட்டுச்செல்லாம் இருப்பதை உங்கள் பாதுகாப்பிற்காக உறுதி செய்து கொள்ளுங்கள.
கோடை காலத்தில் தினமும் காரினை எடுக்கும் முன்பு குளிர்ந்த நீரை காரின் மேல் ஊற்ற வேண்டும் இது காரின் வெப்பத்தை வெகுவாக குறைக்கும். குளிர்ந்த நீர் காரின் வெப்பத்தை வெளியேற்றி இதமான காற்றை காரினுள் செலுத்தி காரினை கூலாக வைத்திருக்கும். மேலும் காரில் செல்லும்போது குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருமுறை காரின் முன் கண்ணாடியில் குளிர்ந்த நீரை ஊற்றுவதன் மூலம் காரின் முன் கண்ணாடியின் மூலம் வரும் உஷ்ணத்தை குறைக்கலாம்
காரினை பொது இடங்களில் அல்லாது பொது மால்கள் மற்றும் அப்பார்மெண்ட்களில் உள்ளது போன்ற பேஸ்மன்ட் பார்க்கிங்களில் காரினை நிறுத்தும்போது காரின் டோர் கண்ணாடிகளை திறந்து வைத்து செல்ல வேண்டும். பொதுவாக அது போன்ற பேஸ்மன்ட் பார்கிங்களில் வெயிலின் வெப்பம் குறைவாகவே இருக்கும் ஆகையால் காற்று காரினுள் செல்வதால் காரினுள் உள்ள வெப்பத்தை குறைக்கும். இது குறிப்பாக ஏசி இல்லாத கார்களுக்கு சிறந்த வழியாக இருக்கும்.
Read More:இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி வரும் நான்கு புதிய கார்கள்: மிக விரைவில் அறிமுகம்!
காரின் ஏசியினை குறிப்பிட்ட காலத்தில் சர்வீஸ் செய்து வைக்க வேண்டும். தவறினால் ஏசி அனல் காற்றினை காரினுள் செலுத்தும் வாய்ப்புள்ளது. மேலும் காரில் செல்லும் பொது ஏசியினை ஆன் செய்த்தவுடன் சிறிது நேரம் காரின் டோர் கண்ணாடிகளை திறந்து வைக்க வேண்டும். இது காரின் வெளியில் இருந்து வரும் குளிர் காற்றை காரினுள் ஏசி மூலம் பரப்புவதற்கும் உதவியாக இருக்கும். ஏசி காற்றுடன் இயற்கை காற்று சேர்ந்தால் காரினுள் இன்னும் குளுமையான சூழல் காணப்படும்.
மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக கோடைகால வெப்பத்தில் கார்களை சிறப்பாக பாதுகாப்பதுடன் காரின் பெயிண்ட் மற்றும் மிரர்களின் ஆயுட்காலத்தை நீடிக்கவும் உதவுகிறது. காரின் குளுமையான சூழலை பாதுகாப்பதன் மூலம் காரின் என்ஜின் தன்மையும் குறையாமல் பாதுக்காக்க முடியும். கோடை காலத்தில் நம்மை பராமரித்து கொள்வது போல கார்களையும் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு