Just In
- 2 hrs ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 2 hrs ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 3 hrs ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 7 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Movies Raayan: இசைப்புயல் இசையமைக்க.. நடனப்புயல் ஸ்டெப்ஸ் போட.. வெளியாக இருக்கு ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா
வாகன நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று காற்று மாசுபாடு. தலைநகர் டெல்லியே காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம். டெல்லி காற்று மாசுபாடு பிரச்னை பத்திரிக்கைகளில் அவ்வப்போது தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது. இதே போன்று நாட்டின் பல்வேறு நகரங்களும் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பயோ எரிபொருள் சார்ந்த வாகனங்களை உருவாக்க வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
விவசாயம் சார்ந்த எரிபொருளில் இயங்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். தற்போதைய நிலையில் இந்தியா எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக காற்று மாசுபாடு பிரச்னை இருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
எனவே மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நிதின் கட்கரி கேட்டு கொண்டுள்ளார். இது இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு உதவி செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் உதவும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவிற்கு எவ்வளவு அவசியம் என்பதை நிதின் கட்கரி மிக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்று எரிபொருட்களில் ஓடும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவையும் குறைக்க முடியும்.
இதனிடையே பாஸ்ட்டேக் குறித்த முக்கிய தகவல் ஒன்றையும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பாஸ்ட்டேக் மூலம் ஏற்கனவே நடைபெறுவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல், அனைத்து வாகனங்களுக்கும், பாஸ்ட்டேக் கட்டாயம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படவில்லை. அதற்கு பதிலாக 15 நாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி வரும் டிசம்பர் 15 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வாகன உரிமையாளர்கள் தற்போது பாஸ்ட்டேக்கை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!