Just In
- 26 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாகன நிறுவனங்களால் விவசாயிகளின் வருவாயை உயர்த்த முடியும்... எப்படி தெரியுமா? பாஜக அமைச்சர் செம ஐடியா
வாகன நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று காற்று மாசுபாடு. தலைநகர் டெல்லியே காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி தவித்து கொண்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம். டெல்லி காற்று மாசுபாடு பிரச்னை பத்திரிக்கைகளில் அவ்வப்போது தலைப்பு செய்தியாக மாறி விடுகிறது. இதே போன்று நாட்டின் பல்வேறு நகரங்களும் காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. எனவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பயோ எரிபொருள் சார்ந்த வாகனங்களை உருவாக்க வேண்டும் என ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
விவசாயம் சார்ந்த எரிபொருளில் இயங்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார். தற்போதைய நிலையில் இந்தியா எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக காற்று மாசுபாடு பிரச்னை இருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
எனவே மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நிதின் கட்கரி கேட்டு கொண்டுள்ளார். இது இந்தியாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு உதவி செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும் உதவும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் இந்தியாவிற்கு எவ்வளவு அவசியம் என்பதை நிதின் கட்கரி மிக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்று எரிபொருட்களில் ஓடும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவையும் குறைக்க முடியும்.
இதனிடையே பாஸ்ட்டேக் குறித்த முக்கிய தகவல் ஒன்றையும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பாஸ்ட்டேக் மூலம் ஏற்கனவே நடைபெறுவதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல், அனைத்து வாகனங்களுக்கும், பாஸ்ட்டேக் கட்டாயம் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்படவில்லை. அதற்கு பதிலாக 15 நாள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி வரும் டிசம்பர் 15 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வாகன உரிமையாளர்கள் தற்போது பாஸ்ட்டேக்கை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350