Just In
- 2 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 3 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 5 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முதலாவதாக பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்றது அசோக் லேலண்ட்!
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரச்சான்றை பெற்ற இந்தியாவின் முதல் கனரக வாகன நிறுவனம் என்ற பெருமையை அசோக் லேலண்ட் பெற்றிருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 என்ற கடுமையான மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கான பணிகளில் வாகன நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கனரக வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் அசோக் லேலண்ட் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான தொழில்நுட்பத்துடன் கனரக வாகனங்களுக்கான எஞ்சின்களை தயாரித்துள்ளது.
இதற்காக, ஏராளமான முதலீடுகளையும் அசோக் லேலண்ட் செய்துள்ளது. மேலும், பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட டிரக்குகளையும் தீவிர சோதனைக்கு ஓட்டத்திற்கு உட்படுத்தி இருந்தது.
அசோக் லேலண்ட் தயாரித்துள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான கனரக வாகன எஞ்சின்களுக்கு புனேயில் இயங்கி வரும் அராய் சோதனை மையம் அங்கீகரித்து சான்றளித்துள்ளது. பிஎஸ்-6 எஞ்சின்களுக்கான அங்கீகாரத்தை பெறும் முதல் நிறுவனம் என்ற பெருமையை அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 16.2 டன் நிகர எடைக்கு மேற்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட இருக்கும் பிஎஸ்-6 எஞ்சின்களுக்கு அராய் அமைப்பு சான்றளித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 70 எச்பி முதல் 360 எச்பி திறன் கொண்ட கனரக டிரக் எஞ்சின்களில் இந்த புதிய எஞ்சின்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட டிரக்குகளை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாசு உமிழ்வு குறைவான சூழலை உருவாக்கும் முயற்சியில் அசோக் லேலண்ட் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ், பாரத் பென்ஸ், வால்வோ, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான வாகனங்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?