Just In
- 35 min ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- 1 hr ago காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- 2 hrs ago 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- 3 hrs ago ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
Don't Miss!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்கிறீயா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Movies Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மோடி அரசுக்கு எதிராக ஒன்று திரளும் ஆட்டோ ஓட்டுநர்கள்... எதற்கு தெரியுமா...?
மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, எரிபொருள் வாகனங்கள்மீது அறிவிக்கப்படாத போரை தொடுத்து வருகின்றது. மின்வாகனங்களின் பயன்பாட்டை நாடு முழுவதும் ஊக்குவிக்கம் முயற்சியாக இந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.
இதனால், ஏற்கனவே மந்த நிலையைச் சந்தித்து வரும் இந்திய மோட்டார் வாகனத்துறை, தற்போது அதல பாதாளத்திற்கு செல்லும் அபயாம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்திய ஆட்டோமொபைல் துறையை குழிதோண்டி புதைக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதற்கான வரைவு அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தயார் செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த போக்கு, வாகனங்களைச் சார்ந்து தொழில்முனைவோருக்கு கடும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவையில் பணி புரிபவர்களுக்கு இந்த தகவல் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. இதன்காரணமாக, பலர் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் ஆட்டோ ஓட்டுநர் சங்கம், மத்திய அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்த தங்களின் எதிர்ப்பை கடிதம் வாயிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அவுரங்காபாத் ஆட்டோ ஓட்டுநர்கள் யூனியன் தலைவர் நிஷார் அஹமத் கான் கூறியதாவது, "முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 600 என்ற பதிவு கட்டணத்தை ரூ. 1,000ஆக, அரசு கடந்த 2016ம் ஆண்டு உயர்த்தியது. தற்போது அதனை மீண்டும் ரூ. 5,000 உயர்த்தியுள்ளது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்" என்றார்.
இதேபோன்று, மூன்று சக்கர ஆட்டோக்களின் காலாவதி குறித்த விதிகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், "ஒரு ஆட்டோவின் ஆயுட்காலம் 20 வருடங்கள் ஆகும். ஆனால், ஒரு ஆட்டோ 15 ஆண்டுகள் வரை, ஒவ்வொரு வருடத்திற்கும் எஃப்சி சான்று பெற்று இயக்கப்பட்டு வருகின்றது. இவை, 15 ஆண்டுகளைக் கடந்த பின்னர் 6 மாதங்களுக்கு ஒரு முறை எஃப்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அப்போது வாகனத்தின் உறுதி தன்மையைப் பொருத்து அவை ஸ்கிராப் செய்யப்பட உள்ளன" என தெரிவித்தார்.
இந்த புதிய திட்டத்தை மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அண்மையிதான் அறிமுகம் செய்தது. மேலும், இதனை மோட்டார் வாகன சட்டம் 1988ன்கீழ் அது கொண்டு வந்துள்ளது.
இத்திட்டம், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்களின் பெரும் தலை வலியாக மாறியுள்ளாக. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் வாகனத்தில் முக்கிய பங்கினை ஆட்டோக்கள் வகிக்கின்றன. இருப்பினும், இவர்கள் சொர்ப வருமானத்தை நம்பியே இருக்கின்றனர். இதில் பெரும் பங்கினை எஃப்சி, வாடகை, பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்துவதால், அவர்கள் இக்கட்டான சூழலைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், மத்திய அரசின் இந்த கொள்கைக்கு எதிராக அவுரங்காபாத் நகர ஆட்டோ ஓட்டுநர்கள் தற்போது போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளனர். மேலும், தங்களின் எதிர்ப்பை பலமாக காட்டும் விதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை.
அதேசமயம், தங்களின் வேண்டுகளை உடனடியாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவுரங்காபாத் ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக அதன் யூனியன் தலைவர் அஹமத் கான் முன் வைத்துள்ளார்.
அவுரங்காபாத் ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமல்ல, மத்திய அரசின் இதுபோன்ற அதிரடி முடிவுகளால் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையே தள்ளாடி வருகிறது.
இந்தியாவில் பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறை தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கார் மற்றும் டூவீலர் உள்பட அனைத்து விதமான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருகிறது.
இதனால் வாகன நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்களை வேலையில் இருந்தும் அவை நீக்கி கொண்டுள்ளன. வாகன விற்பனை சிறப்பாக இல்லாத காரணத்தால் ஏராளமான டீலர்ஷிப்களும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தத்தில் ஆட்டோமொபைல் துறை கதிகலங்கி போயுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து எடுத்து கொண்டால், ஆட்டோமொபைல் துறையில் தற்போது வரை சுமார் 3.50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இது போன்று ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி கொண்டே உள்ளன.
ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவமே வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை சரிவடைய முக்கியமான காரணம் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி தொடர்பாக விவாதிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியபோது கூட அவர்கள் இதனை தெரிவித்தனர். உண்மைதான். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.
அதே சமயம் பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான மத்திய அரசின் பிடி நாளுக்கு நாள் இறுகி கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை பல மடங்கு உயர்த்தும் வரைவு அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பதிவு கட்டணங்களை இவ்வளவு கடுமையாக உயர்த்தினால், பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்கும் ஆர்வம் மக்களுக்கு குறைந்து விடும். எனவேதான் இவ்வாறான ஒரு வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர வரும் 2023ம் ஆண்டிற்கு பிறகு, ஐசி இன்ஜின் மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 150 சிசி வரையிலான இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிப்பது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால் பொதுமக்கள் தற்போது கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் முக்கியத்துவம் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என அத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் நாளுக்கு நாள் நிலைமை சிக்கலாகி கொண்டே செல்வதால், மத்திய அரசு தற்போது சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களுக்கு அவ்வளவு வேகமாக இருக்காது என கூறப்படுகிறது. அதாவது ஆட்டோமொபைல் துறை திணறி வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு அடுத்த சில மாதங்களுக்கு மிகவும் மெதுவாகவே செய்யும் என தெரிகிறது.
எனவே பெரிய அளவில் தீவிரம் காட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல் மேலே குறிப்பிட்டபடி வரும் 2023ம் ஆண்டுக்கு பிறகு, ஐசி இன்ஜின் மூலமாக இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 150 சிசி வரையிலான டூவீலர்கள் ஆகியவற்றின் விற்பனைக்கு தடை விதிப்பது தொடர்பான பணிகளையும் மத்திய அரசு அவ்வளவு தீவிரமாக செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கை மத்திய அரசு படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில், பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் நோக்கத்துடன் இயங்கி வரும் அரசு துறைகளுக்கு தற்போது உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனையை குறைக்கும் முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம் எனவும், அவற்றை தற்போதைக்கு நிறுத்தி வைக்கும்படியும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை உயர்த்தும் திட்டமும் இதில் அடக்கம். எனவே பதிவு கட்டணங்கள் தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
அனேகமாக அந்த திட்டத்தை மத்திய அரசு தற்போதைக்கு நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை இவ்வளவு கடுமையாக உயர்த்தினால், ஆட்டோமொபைல் துறை இன்னும் சீர்குலைந்து போய் விடும் என அத்துறை சார்ந்த வல்லுனர்கள் முன்பு தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
Source: auto.economictimes
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
உடனே திருப்பி கொண்டு வாங்க! பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு! விலை கம்மினு வாங்கீட்டு புலம்பும் உரிமையாளர்கள்!