எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

மக்கள் பரபரப்பாக விவாதித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான அதிரடி ஆபரேஷனை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல்தான் இது நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மத்திய பட்ஜெட்டிலும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

இதில், மின்சார வாகனங்களை கடனில் வாங்கினால் அதற்கான வட்டிக்கு வருமான வரியில் இருந்து சலுகை பெற முடியும் என்ற அறிவிப்பு மிகவும் முக்கியமானது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகள் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைய தொடங்கியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

எலெக்ட்ரிக் வாகனங்களின் பெரிய மைனஸே அவற்றின் விலைதான். ஆனால் தற்போது அவற்றின் விலை ஓரளவிற்கு குறைய தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை 1.58 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் பொதுமக்கள் மத்தியில் மதிப்பிழக்க தொடங்கியுள்ளன. உண்மையில் தற்போது இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் கார், மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக மிக கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

இதனால் மாருதி சுஸுகி உள்பட அனைத்து முன்னணி நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நஷ்டம் காரணமாக பல வாகன டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. ஏராளமான பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள வாகன டீலர்ஷிப்களில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

இதே நிலை நீடித்தால் இன்னும் பல லட்சம் பேர் வேலையிழக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி நிலைமை சீராக உதவ வேண்டும் என ஆட்டோமொபைல் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இரக்கம் காட்டுவது போல் தெரியவில்லை.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

ஜிஎஸ்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்டோமொபைல் துறையினர் முன் வைத்தாலும் மின்சார வாகனங்களுக்கு மட்டுமே மத்திய அரசால் சலுகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கொடுத்து வரும் ஊக்கமே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான டிமாண்ட் குறைய காரணம் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் மீது இருந்து வந்த மக்களின் கவனம் சிதற மின்சார வாகனங்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கமே காரணம் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இங்கே ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு அதுதான் தேவை. அதைதான் மத்திய அரசு விரும்புகிறது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

பாஸ், மக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டமே! எனவே ஆட்டோமொபைல் துறை உடனடியாக சீரடைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. போதாக்குறைக்கு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வேறு 2020 ஏப்ரல் 1 முதல் அமலாகவுள்ளன. அப்போது வாகனங்களின் விலை இன்னும் உயரும்.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறை இன்னும் பலத்த அடி வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி வெளியான அறிவிப்பு ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இம்முறை ஆட்டோமொபைல் துறையினர் மட்டும் அதிர்ச்சியடையவில்லை. பொதுமக்களும் சேர்ந்தே அதிர்ச்சியடைந்தனர்.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

அன்றைய தினம் வரைவு அறிக்கை ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. இதில், புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் மற்றும் அவற்றின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. கட்டண உயர்வு என்றால் ஏதோ சிறிதளவு என நினைத்து விட வேண்டாம். பல மடங்கு!

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

உதாரணத்திற்கு டூவீலர்களை சொல்லலாம். இரு சக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணம் தற்போது 50 ரூபாயாகதான் உள்ளது. இதனை ஆயிரம் ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிவு மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கு என இரண்டுக்கும் தற்போதைய கட்டணம் தலா 600 ரூபாய் மட்டுமே.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

ஆனால் இந்த பரிந்துரைகள் அமலுக்கு வந்தால், கார்களுக்கான பதிவு கட்டணம் 5,000 ரூபாயாக உயரும். அதே சமயம் கார்களின் பதிவை புதுப்பிக்க 10,000 ரூபாயை நீங்கள் செலுத்த வேண்டியது வரும். இது மிக கடுமையான கட்டண உயர்வு என்பதால், பேசாமல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி விடலாமா என நீங்கள் யோசிப்பீர்கள் அல்லவா?

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

அதற்காகதான் இப்படி ஒரு திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. ஆம், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பும் மத்திய அரசின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. இப்படி ஒரு திட்டம் குறித்த தகவல் வெளியானதும், சமூக வலை தளங்களில் விவாதங்கள் அனல் பறக்க தொடங்கின.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

போகிற போக்கை பார்த்தால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு திடீரென தடை விதித்து விடுவார்களோ? என்றெல்லாம் கூட பேச்சுக்கள் அடிபட்டன. பண மதிப்பிழப்பு போன்ற துணிச்சலான நடவடிக்கைகள் இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டன. ஆனால் கவலைப்பட வேண்டாம். ஒரே அடியாக தடை விதிப்பது சாத்தியமற்றது என்பதால், மத்திய அரசுக்கு அப்படி ஒரு எண்ணம் தற்போது இல்லை.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

ஆனால் வருங்காலங்களில் இது படிப்படியாக நடக்கலாம். அதற்கான ஆரம்பு புள்ளியாகதான் தற்போதைய நடவடிக்கைகள் தெரிகின்றன. இந்த சூழலில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இன்னும் சுமார் ஒன்றரை மாத கால அளவில் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகி வந்தன.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

இதற்கு ஆட்டோமொபைல் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே மிக மோசமான நிலையில் உள்ள ஆட்டோமொபைல் துறையை இந்த முடிவு இன்னும் சீரழித்து விடும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Society of Indian Automobile Manufacturers - SIAM) கூட தங்கள் கவலையை பதிவு செய்தது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

எனவே இது தொடர்பாக மத்திய அரசு தற்போது பரிசீலிக்க தொடங்கியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் கடுமையான மந்த நிலை காரணமாக பதிவு கட்டணங்களை உயர்த்தும் திட்டம் ஒருவேளை தள்ளிப்போகலாம் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்படுவதற்கு பதில் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரலாம் என தெரிகிறது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

அனேகமாக பதிவு கட்டணங்களை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு கொண்டு வரலாம் என இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை உறுதியாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான ஆபரேஷன் உறுதி...

இது தொடர்பாக CNBC-TV18 செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படாததால், பதிவு கட்டணங்களை மிக கடுமையான உயர்த்தும் முடிவு ஒன்று எதிர்பார்க்கப்பட்டது போலவே விரைவில் அமல்படுத்தப்படலாம். அல்லது தற்காலிக நிவாரணமாக ஒரு சில மாதங்கள் மட்டும் தள்ளிப்போலாம். ஆனால் இதனை கைவிடும் முடிவு மட்டும் மத்திய அரசுக்கு இல்லை. அதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு தொடர்பான விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Most Read Articles
English summary
Auto Sector Slowdown: Government May Postpone Vehicle Registration Fee Hike Proposal. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X