Just In
- 2 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 4 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 4 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 5 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது
டாடா நெக்ஸான் கார் கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றி மீண்டும் நம் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த டாடா நிறுவனம் சிறப்பான கட்டுமான தரத்துடன் கூடிய பாதுகாப்பான கார்களை தயாரித்து வருகிறது. இதற்கு நெக்ஸான் காரை ஒரு உதாரணமாக சொல்லலாம். கார் க்ராஷ் டெஸ்ட்டிங் ஏஜென்சியான குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் இந்திய கார் டாடா நெக்ஸான்தான்.
தற்போது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் உடன் இருக்கும் ஒரே ஒரு இந்திய காரும் நெக்ஸான்தான். குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றதன் மூலம் டாடா நெக்ஸான் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. டாடா நெக்ஸான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.
டாடா நெக்ஸான் உரிமையாளர்கள் பலர் அதன் சிறப்பான கட்டுமான தரத்தையும், பாதுகாப்பு வசதிகளையும் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். ஏனெனில் சாலை விபத்தில் இருந்து பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் பல முறை காப்பாற்றியுள்ளது. இந்த சூழலில் தற்போது மேலும் ஒரு சாலை விபத்து தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
ஆனால் இம்முறையும் டாடா நெக்ஸான் கார் அதன் உரிமையாளரை பத்திரமாக காப்பாற்றி விட்டது. தில்பிரீத் சிங் என்பவர்தான் அந்த அதிர்ஷ்டசாலி. இவரிடம் டாடா நெக்ஸான் கார் ஒன்று உள்ளது. இவர் சமீபத்தில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தனது டாடா நெக்ஸான் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அது நள்ளிரவு சமயம்.
அப்போது மிகவும் குறுகலான சாலை ஒன்றில் அவரது டாடா நெக்ஸான் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தில்பிரீத் சிங்கிற்கு எதிர் திசையில் மற்றொரு வாகனம் வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே குறிப்பிட்டதை போல் அது மிகவும் குறுகலான சாலை. ஆனால் எதிர்திசையில் வந்த வாகனத்தின் டிரைவர் வேகத்தை குறைக்கவில்லை. மேலும் அவருக்கு வழிவிடவும் இல்லை.
எனவே அந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதாமல் இருப்பதற்காக தில்பிரீத் சிங் தனது டாடா நெக்ஸான் காரை திருப்பினார். அப்போது நிலை தடுமாறிய அவரது கார் சாலையோரமாக இருந்த அரச மரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது. அந்த சமயத்தில் கார் எந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தது என்பது தில்பிரீத் சிங்கிற்கு சரியாக நினைவில்லை.
எனினும் மணிக்கு 55-60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் சென்று கொண்டிருந்திருக்கலாம் என தில்பிரீத் சிங் தெரிவித்தார். விபத்து நேரும் சமயங்களை பொறுத்தவரை இது மிகவும் அதிவேகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது.
ஆனால் இங்கே ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் காரின் ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைந்து தில்பிரீத் சிங்கின் உயிரை காப்பாற்றி விட்டன. அத்துடன் வேதனை தரக்கூடிய அளவிற்கான காயங்கள் எதுவும் கூட அவருக்கு ஏற்படவில்லை. இதற்காக தனது டாடா நெக்ஸான் காருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதில், ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் காரின் பில்லர்கள் அப்படியே நல்ல வடிவில் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் டிரைவர் சைடு டோர் கூட இன்னும் வேலை செய்ய கூடிய நிலையில் இருப்பதாகதான் கூறப்படுகிறது. விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றிய தனது நெக்ஸான் கார் குறித்த கூடுதல் தகவல் ஒன்றை தில்பிரீத் சிங் கூறியுள்ளார்.
விபத்தில் சிக்கிய தனது டாடா நெக்ஸான் 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முந்தைய மாடல் என தில்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். அதாவது இது 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற டாடா நெக்ஸான் கிடையாது. 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட டாடா நெக்ஸான் கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருந்தன.
அதன்பின்பு டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் பாதுகாப்பு தரத்தை மேலும் உயர்த்தி, குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இருந்தபோதும் 4 ஸ்டார் ரேட்டிங் உடன் கூடிய நெக்ஸானே எவ்வளவு பாதுகாப்பான கார்? என்பதை இந்த விபத்தின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் டாடா நெக்ஸான் பயணிகளை காப்பாற்றியதாக வெளிவரும் முதல் இது செய்தி இது என கூற முடியாது. ஏனெனில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் டாடா நெக்ஸான் தங்கள் உயிரை காப்பாற்றியதாக பலர் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான பதிவுகள் சமூக வலை தளங்களில் வைரலாவது வாடிக்கையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!