குடிபோதையில் கார் ஓட்டி பயங்கர விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்

தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள நபர் ஒருவர், குடிபோதையில் கார் ஓட்டி பயங்கரமான விபத்தை ஏற்படுத்தினார். அவர் யார் என தெரிந்தால் நீங்கள் கோவப்படுவது உறுதி.

தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள நபர் ஒருவர், குடிபோதையில் கார் ஓட்டி பயங்கரமான விபத்தை ஏற்படுத்தினார். அவர் யார் என தெரிந்தால் நீங்கள் கோவப்படுவது உறுதி.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எனவே உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக மிக அதிகப்படியான உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களால்தான் மிக அதிகப்படியான சாலை விபத்துக்கள் அரங்கேறுகின்றன. குடிபோதையில் வாகனங்களை இயக்கி, சாலை விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்களுக்கு, வெளிநாடுகளில் மிக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு இந்தியாவில் உரிய தண்டனை வழங்கப்படுவது இல்லை. இதன் காரணமாக ஏற்படும் அலட்சியம்தான், பலரும் குடிபோதையில் வாகனங்களை இயக்கி சாலை விபத்துக்களை ஏற்படுத்த மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இந்த சூழலில் சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் சாலையில், நேற்று மாலை (ஜனவரி 8) ஃபோர்டு எகோ ஸ்போர்ட் கார் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. மிகவும் தாறுமாறாக வந்த அந்த கார், சாலையோரமாக நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள், விபத்திற்கு காரணமான ஃபோர்டு எகோ ஸ்போர்ட் காரை விடாமல் துரத்தி சென்றனர். சிறிது நேரம் விரட்டி சென்ற பின், ஒருவழியாக அந்த காரை மக்கள் வழிமறித்து நிறுத்தினர்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அப்போது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பிரபல திரைப்பட இயக்குனர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திதான் காரை ஓட்டி வந்தது. இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதில், தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார். பிரபல நடிகர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி விட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இத்தனைக்கும் அவர் குடிபோதையில் இருந்தார். அவர் கொஞ்சம் கூட நிதானமே இல்லாமல் இருந்ததால், பொதுமக்கள் இன்னும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாயினர். பின்னர் இதுகுறித்து உடனடியாக சூளைமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடிகர் சக்தியிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. எனவே நடிகர் சக்தி கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

என்றாலும் அவர் உடனடியாக சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் பலர், குடிபோதையில் வாகனங்களை இயக்கி சாலை விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே வருவது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அலட்சியம் காரணமாக நடைபெறும் இத்தகைய விபத்துக்களுக்கு நமது நாட்டின் சட்ட திட்டங்களும் ஓர் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சீனா, சிங்கப்பூர் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில், குடிபோதையில் வாகனம் இயக்கும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

சீனாவில், ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.02% முதல் 0.08% வரை இருந்தால், வாகன ஓட்டியின் லைசென்ஸ் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படும். இதுவே 0.08 சதவீதத்திற்கு மேல் இருந்தால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 5 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படும்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

சிங்கப்பூரில் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.035% முதல் 0.09% வரை இருந்தால், ரூ.9,500 முதல் ரூ.19 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதுவே அங்கு ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.09 சதவீதத்திற்கு மேல் இருந்தால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

பிரேசிலில், ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0%-0.06% வரை இருந்தால், ஓராண்டுக்கு லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும். அதே சமயம் 0.06 சதவீதத்திற்கு மேல் இருந்தால், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இத்தனைக்கும் வழக்கு விசாரணை மிக துரிதமாக முடிக்கப்பட்டு, உடனே தண்டனை வழங்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அங்கு சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் குடிபோதையில் வாகனங்களை இயக்கி, சாலை விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை தடுப்பதற்கு என இந்தியாவில் தற்போது உள்ள சட்ட திட்டங்கள் எதுவும், சர்வதேச பொது சுகாதார நிறுவனத்தின் தரத்திற்கு ஏற்ப இல்லை என்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

பொதுவாக சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்துவதில், இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை தடுப்பதற்கான சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் இந்தியா மிகவும் பின்தங்கி காணப்படுகிறது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

குடிபோதையில் வாகனங்களை இயக்கி, சாலை விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை தடுப்பதற்கான சட்ட திட்டங்களை அமல்படுத்துவதில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை, உலக சுகாதார நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு வெளியிட்டது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதில், இந்தியாவிற்கு 10க்கு 4 மதிப்பெண்கள் மட்டும்தான் கிடைத்தன. ஆனால் சீனாவோ 10க்கு 9 மதிப்பெண்களை அள்ளியது. இதுதவிர சிங்கப்பூர் 10க்கு 8 மதிப்பெண்களையும், பிரேசில் 10க்கு 7 மதிப்பெண்களையும் பெற்றன.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பிரபல நபர்... யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் இந்தியாவின் மதிப்பெண்கள் வெறும் 4 மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இங்கு சட்ட திட்டங்களை கடுமையாக்கினால் மட்டுமே, குடிபோதையில் வாகனங்களை இயக்குபவர்களிடம் இருந்து, அப்பாவி மக்களை காப்பாற்ற முடியும் என்பதை இந்திய அரசு இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

Most Read Articles
English summary
Big Boss Fame Actor Shakthi Arrested For Drunk Driving In Chennai. Read In Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X