Just In
- 2 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 2 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 3 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
துணை முதல்வர் வந்த கார் பத்திதான் இன்னைக்கு ஊரே பேசுது... ஏன் தெரியுமா?
துணை முதல்வர் வந்த கார் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை பிரபலப்படுத்தும் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த விஷயத்தில் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால், சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. தற்போது இந்தியாவின் பல்வேறு பெரு நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கி திணறி வருகின்றன. இந்த பிரச்னையை சரி செய்ய எலெக்ட்ரிக் வாகனங்கள் உதவும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பது எலெக்ட்ரிக் வாகனங்களின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
எனவே மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் மானியம் ஆகியவற்றை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலப்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநில அரசுகளை இதற்கு ஓர் உதாரணமாக சொல்லலாம். இதில், பீகார் மாநில சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் எலெக்ட்ரிக் காரில் வந்து இந்த கூட்ட தொடரில் கலந்து கொண்டார்.
பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக அவர் எலெக்ட்ரிக் காரில் வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த காரில் பயணம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் கிட்டத்தட்ட சத்தமே வரவில்லை. இந்த காருக்கு உள்ளே அமர்ந்திருக்கும்போது, அதன் டிசைன் மிகவும் சௌகரியமாக இருக்கிறது' என்றார்.
இந்த சூழலில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்ந்து, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் தற்போது எலெக்ட்ரிக் காரில் வந்துள்ளார். பீகார் மாநில அரசின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவே, டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வந்தார்.
இந்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி வசம்தான் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனம் ஆகிய துறைகள் உள்ளன. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், சுஷில் குமார் மோடி இனி மின்சார வாகனத்தில்தான் பயணம் செய்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஇஎஸ்எல் எனப்படும் எனர்ஜி எஃபிசியன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து (EESL - Energy Efficiency Services Ltd), பீகார் மாநில அரசு 9 எலெக்ட்ரிக் கார்களை ஐந்து ஆண்டுகளுக்கு லீசுக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர், தலைமை செயலாளர் ஆகியோரால் இந்த கார்கள் பயன்படுத்தப்படும்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என பீகார் மாநில அரசு நம்புகிறது.
ஏனெனில் பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் சட்டமன்றத்திற்கு எலெக்ட்ரிக் காரில் வந்த சமயத்தில் அந்த செய்தி பலரையும் சென்றடைந்தது. தற்போது பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் எலெக்ட்ரிக் காரை பயன்படுத்த தொடங்கியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பாக பலரும் பேச தொடங்கியுள்ளனர்.
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!