Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டொயோட்டாவிற்கு மேலும் மூன்று மாடல்கள்... மாருதி சுஸுகியின் தாராளம்!
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மாடலைத் தொடர்ந்து, விட்டாரா ப்ரெஸ்ஸா, சியாஸ், எர்டிகா ஆகிய மூன்று மாடல்களையும், டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானிய கார் நிறுவனங்களான டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட்டணி அமைத்துக்கொண்டன. இந்த கூட்டணியைத் தொடர்ந்து, முதல் முதலாக க்ளான்ஸா என்ற ஹேட்ச்பேக் ரகத்திலான காரை டொயோட்டா நிறுவனம், ரீபேட்ஜ் செய்து கடந்த வியாழனன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இந்த புதிய க்ளான்ஸா மாடலில் இரு வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில், ஒன்று ஜி எம்டி என்றி பெயரிலும், மற்றொன்று வி சிவிடி என்ற பெயரிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜி எம்டி-க்கு ரூ. 7.21 லட்சம் என்ற விலை எக்ஸ்-ஷோரூமிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வி சிவிடி வேரியண்டிற்கு ரூ. 8.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, க்ளான்ஸா கார் சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மாடலில் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போது, இரு நிறுவனங்களின் இணைப்பைத்தொடர்ந்து, இந்த கார் க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, மாருதி சுஸுகியின் மேலும் மூன்று மாடல்கள் டொயோட்டாவின் பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவ்வாறு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களாக இருக்கும் விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ் மற்றும் எர்டிகா ஆகிய மூன்று மாடல்களும்தான் தற்போது டொயோட்டா மூலம் ரீபேட்ஜ் செய்து தயாரிக்கப்பட உள்ளன.
மேலும், இந்த மாடல்களுக்கு புதிய பெயர் மற்றும் சில தனிப்பட்ட டிசைன் தாத்பரியங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில், டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் எனப்படும் செடான் ரக காரை ரீபிளேஸ் செய்யும் வகையில், சியாஸ் மாடலை டொயோட்டா உருவாக்க உள்ளது. பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டும், யாரிஸ் செடான் ரக கார், மந்தமான விற்பனையைப் பெற்று வருவதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
பிரிமியம் சந்தையைக் குறிக்கோளாக வைத்து செயல்படும் டொயோட்டா நிறுவனம், ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு களமிறக்க இருக்கும் இந்த கார்கள் மூலம் அதிக அளவில் விற்பனையை குவிக்க வேண்டும் நோக்கில் செயல்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக, சந்தையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளவே இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், ரீபேட்ஜ் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மாடல்களும் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸா, சியாஸ் மற்றும் எர்டிகா ஆகிய மாடல்கள் முன்னதாக, அந்த நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையில் வைத்து உற்பத்திச் செய்யப்பட்டு வந்தன. தற்போது, இவையனைத்தும், டொயோட்டா நிறுவனத்தின் கிர்லோஷ்கர் பெங்களூர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
புதிய க்ளான்ஸா, பலேனோவைக் காட்டிலும் மாறுதலாக இருக்கும் தோற்றமளிக்கும் வகையில், கணிசமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், காரின் ரேடியேட்டர் க்ரில் அமைப்பில் சிறு மாற்றம் செய்து பொருத்தப்பட்டுள்ளது. இந்த, க்ரில்லானது, இரண்டு குரோம் பூச்சுக் கொண்ட விங் அமைப்பைப் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, காரின் கேபினுக்குள்ளும் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், பிரத்யேக வசதியாக க்ளான்ஸா காரில், ஸ்டாண்டர்டு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் கூடிய ப்ளே காஸ்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டா தயாரிப்பில் இந்த வசதி அறிமுகம் செய்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த மாடல்களில் இந்த வசதி இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. ஆகையால், இந்த க்ளான்ஸா கார், மேலும் சிறப்பு வாய்ந்த காராக தற்போது இந்தியர்கள் மத்தியில் களமிறங்கியுள்ளது.
மேலும், க்ளான்ஸா காருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, டொயோட்டா நிறுவனம், 3 வருடங்கள் அல்லது ஒரு லட்சம் கிமீ வாரண்டியினை வழங்கியுள்ளது. இதே சலுகையை புதிதாக ரீபேட்ஜ் செய்ய இருக்கும் கார்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகையில், 5 வருடங்கள் அல்லது ஏழு வருடங்கள் என கூடுதல் ஆப்ஷனையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் வழங்க இருக்கின்றது.
இந்த கார் இரண்டு பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கின்றது. அவ்வாறு, ஒரு வேரியண்டில், கே12என் 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த எஞ்ஜினில் சிறிய ரகத்திலான ஹைபிரிட்டிற்கான தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
மற்றுமொரு வேரியண்ட், 1.2 லிட்டர் கே12எம் எஞ்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது, அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும்,113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.