Just In
- 3 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 3 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 6 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!
டெல்லியில் பிஎஸ்-6 பெட்ரோல், டீசல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதன் காரணமாக 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த சூழலில் பிஎஸ்-6 பெட்ரோல் மற்றும் டீசல் தற்போது தலைநகர் டெல்லியில் கிடைக்கிறது.
பிஎஸ்-6 எரிபொருள் தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தகவலை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராஜ்யசபாவில் நேற்று (ஜூலை 15) தெரிவித்தார். அத்துடன் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும் என்பதையும் அவர் உறுதி செய்தார்.
இந்திய மார்க்கெட்டில் தற்போதே பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான வாகனங்கள் கிடைக்க தொடங்கியுள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. எனினும் ஏராளமான நிறுவனங்கள் பிஎஸ்-6 வாகனங்களை தற்போது சோதனை செய்து வருகின்றன.
அவை அனேகமாக நடப்பாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகரங்களில் இந்திய தலைநகர் டெல்லியும் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக டெல்லி மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக மேலும் சில நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதில், பல்வேறு எக்ஸ்பிரஸ்வேக்கள் மற்றும் பைபாஸ்களை உருவாக்குவதும் அடக்கம். இதன் மூலம் டெல்லி நகர எல்லைக்குள் லாரி போன்ற கனரக வாகனங்கள் நுழைவது தடுக்கப்படும். தற்போதைய சூழலில் 60 ஆயிரம் லாரிகள் டெல்லிக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக இந்தியாவின் வாகன மார்க்கெட் எதிர்காலத்தில் முற்றிலுமாக மாறப்போகிறது. பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தங்கள் வாகனங்களில் டீசல் இன்ஜின்களின் எந்தவொரு வெர்ஷனையும் வழங்க மாட்டோம் என இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே அறிவித்துள்ளது.
மேலும் சில நிறுவனங்கள் சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை மட்டும் நிறுத்தி விட முடிவு செய்துள்ளன. சிறிய டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்த அதிக செலவு ஆகும். எனவே அவற்றை அப்டேட் செய்வது என்பது அவ்வளவு லாபகரமானதாக இருக்காது என்பதால், ஒரு சில நிறுவனங்கள் இவ்வாறான முடிவை எடுத்துள்ளன.
கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மாற தொடங்கியுள்ளன. பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை சற்று உயரவுள்ளது. ஆனால் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு மானியம் மற்றும் வரி சலுகைகளை வழங்குவதன் மூலமாக இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை பிரபலமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமடைவதற்கு, உள்கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாதது ஒரு தடையாக உள்ளது. எனவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு முயன்று வருகிறது.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?