Just In
- 41 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிக் டாக் மோகத்தால் நடந்த விபரீதம்.. வேலையையிழந்து பரிதவிக்கும் ஓட்டுநர்...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிக் டாக் மோகத்தினால் பேருந்து ஓட்டுநர்கள் சிலர் வேலையையிழந்து பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் நாளுக்கு நாள் இணையத்தின்மீதான மோகம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதன் வெளிப்பாடாகவே, இளைஞர்களை குறி வைக்கின்ற வகையில் நாள்தோறும் புதிய புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
அவ்வாறு, தற்போதைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஓர் செயலியாக டிக் டாக் காணப்படுகின்றது.
இந்த செயலியை நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காக பாராளுமன்றம் வரை குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தை நாடி அந்த செயலி மீண்டும் பொது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இதன் மீது தடை விதிக்க வேண்டும் என்று போராடுகின்ற வகையில் பல்வேறு அறுவறுக்கத்தக்க வீடியோக்களை அதன் பயனர்கள் சிலர் செயலில் பதிவிட்டு வந்தனர்.
இதன்காரணமாகவே, அந்த செயலியை உடனடியாக பயன்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் சிலர் டிக் டாக் செயலி மீதிருந்த மோகத்தினால் தற்போது அவர்களது பணியை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ள நினைக்கும் இளைஞர்கள் சிலர், டிக் டாக் போன்ற செயலியைப் பயன்படுத்தி ஸ்டண்ட் செய்வது, நடனம் ஆடுவது உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அவ்வாறு வெளியிடப்படும் பெரும்பாலான வீடியோக்கள் அவர்களுக்கே சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுகின்றன.
அந்தவகையில், சர்ச்சையை ஏற்படுத்தும்வகையில் வீடியோக்களை வெளியிடும் நபர்களை குறிப்பாக மோட்டார் வாகனம் சார்ந்து வீடியோக்களை பதிவிடும் இளைஞர்களை குறிவைத்து கேரள மாநில மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து துவங்கியுள்ளனர்.
இதன்படி, அவர்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் தற்போது மூன்று பேருந்து ஓட்டுநர்கள் வேலையையிழந்து, செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மூன்று பேருந்து ஓட்டுநர்களும் ஆபத்து விளைவிக்கின்ற வகையில் பேருந்தை இயக்கி டிக் டாக் வீடியோ பதிவிட்டதன் காரணத்தினாலேயே இத்தகைய சூழலை அடைந்திருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், இதுகுறித்த இரண்டு வீடியோக்களை பஸ் பிரேமிக்கள், கேரளா டூரிஸ்ட் பஸ் பேன்ஸ் ஆகிய யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
முதல் வீடியோவில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை சிறிது வேகத்தில் செல்லுமாறு இயக்கிய பின்னர் கீழே இறங்குகின்றார். மேலும், அவர் ஒரு யானையை தன் பின்னால் நடக்கவிட்டு அழகு பார்ப்பதைப் போல் பேருந்தை தடவியவாறு அதன் முன் பக்கம் நடக்கின்றார். பின்னர், பேருந்தில் ஏறி அதனை நிறுத்துகின்றார்.
இந்த நிகழ்வினை அவர் ஓர் ஆள்வரமற்ற மைதானத்தில் நிகழ்த்தியிருந்தாலும், போக்குவரத்து வாகன சட்டத்தின் குற்றமாகும். ஒரு வேலை அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருந்தால் அது மிகமோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே நிதர்சனமான உண்மை.
ஆகையால், தனக்கு மட்டுமின்ற சுற்றத்தார்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்ட அப்பேருந்தின் ஓட்டுநருக்கு தண்டனையளிக்கும் விதமாக ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல் வீடியோவைப் போலவே இரண்டாவது வீடியோவிலும் ஒரு சில காட்சிகள் முரண்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இந்த வீடியோவில் காணப்படும் மூன்று ஓட்டுநர்களும் பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போதே ஆட்டம் போடுவது, கையை விட்டு பேருந்தை இயக்குவது மற்றும் செல்ஃபி வீடியோ எடுப்பது என ஆபத்தை உணராமல் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகியதை அடுத்து கேரள மாநில போக்குவரத்து அதிகாரிகள் கண்களிலும் பட்டுள்ளது. இதையடுத்தே முரண்பட்ட செயல்களில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓட்டுநர் உரிமம் ரத்து மற்றும் பணியை விட்டு நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஓட்டுநர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் போன்றே பேருந்துகள் மீதும் ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பேருந்தில் தடை செய்யப்பட்ட மின் விளக்குகள் மற்றும் ஒலி பெருக்கிகள் உள்ளிட்டவை பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறி நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!