Just In
- 1 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 20 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 2 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 2 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
Don't Miss!
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விபத்தின்போது விரிவடையாத ஏர் பேக்... 8 ஆண்டுக்கு பின் கார் நிறுவனத்திற்கு கிடைத்த தண்டனை இதுதான்
கார் விபத்தில் சிக்கியபோது ஏர் பேக் விரிவடையாமல் மோசம் செய்தது. இது தொடர்பான வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பின் கார் உற்பத்தி நிறுவனத்திற்கு தண்டனை கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலம் சபர்மதி பகுதியை சேர்ந்தவர் அபேகுமார் ஜெயின். இவர் கடந்த 2010ம் ஆண்டு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஒன்றை வாங்கினார். இந்த கார் வாராண்டியின் கீழ் இருந்த சூழலில், கடந்த 2011ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. ஆனால் விபத்து நடைபெற்ற சமயத்தில் காரின் ஏர் பேக் (Airbag) விரிவடையவில்லை என கூறப்படுகிறது.
கார்களில் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஓர் முக்கிய உபகரணம்தான் ஏர் பேக். கார்களின் விலையை பொறுத்து, அதில் கொடுக்கப்படும் ஏர் பேக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். விபத்து நடைபெறும் சமயங்களில் ஏர் பேக் விரிவடைந்து, காரில் பயணம் செய்பவர்களின் உயிரை பாதுகாக்கும். தற்போது ஏர் பேக்குகள் குறித்த விழிப்புணர்வு வாடிக்கையாளர்களிடம் மேலோங்கி வருகிறது.
எனவே பல்வேறு நிறுவனங்களும் பாதுகாப்பிற்காக தங்கள் கார்களில் ஏர் பேக்குகளை வழங்கி வருகின்றன. ஆனால் ஏர் பேக் போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கூட சில சமயங்களில் செயல்படாமல் போய், கார்களில் பயணம் செய்யும் பயணிகளை கை விட்டு விடுவதற்கான வாய்ப்புகள் சிறிய அளவில் இருக்கத்தான் செய்கின்றன. அபேகுமார் ஜெயினின் காரிலும் அதேதான் நடைபெற்றது.
விபத்து நிகழ்ந்தபோது, அவரது காரின் ஏர் பேக் விரிவடையாமல் மோசம் செய்தது. எனினும் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கில் கொண்டு, அபேகுமார் ஜெயினுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் 2.75 லட்ச ரூபாயை வழங்கியது. ஆனால் கார் உற்பத்தி நிறுவனமும், டீலரும் காருக்கான தொகையை திருப்பி தர வேண்டும் அல்லது காரை மாற்றி தர வேண்டும் என அபேகுமார் ஜெயின் விரும்பினார்.
எனவே அகமதாபாத் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை (கூடுதல்) அபேகுமார் ஜெயின் அணுகினார். இது குறைபாடுள்ள கார் எனவும், அதனால்தான் விபத்து நடைபெற்ற சமயத்தில் ஏர் பேக் விரிவடையவில்லை எனவும் அபேகுமார் ஜெயின் தெரிவித்தார். இதுதவிர தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவிற்காக ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் அபேகுமார் ஜெயினின் குற்றச்சாட்டை கார் உற்பத்தி நிறுவனம் மறுத்தது. அதே நேரத்தில் இந்த புகாரை எதிர்த்த அதன் உள்ளூர் டீலர், ஏர் பேக் விரிவடையாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என வாதிட்டார். ''விபத்து நடைபெற்றபோது ஜெயின் காரில் இல்லை. எனவே டிரைவர் சீட் பெல்ட்டை பயன்படுத்தினாரா? என்பதை அவரால் சொல்ல முடியாது'' என்பது டீலரின் வாதமாக இருந்தது.
ஆம், சீட் பெல்ட்டிற்கும், ஏர் பேக்கிற்கும் தொடர்பு உள்ளது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர் பேக் வேலை செய்யும். ஏர் பேக் விரிவடைவது என்பது வாகனத்தின் வேகத்தை சார்ந்தும் இருக்கும். முன்னதாக காரின் உற்பத்தி குறைபாடு காரணமாகவே ஏர் பேக் விரிவடையவில்லை என இன்சூரன்ஸ் சர்வேயர் தெரிவித்திருந்தார். அவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார்.
ஆனால் ஏர் பேக் ஏன் விரிவடையவில்லை? என்பதை ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியரால் மட்டுமே தெளிவாக கூற முடியும் என டீலர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தீர விசாரித்த நுகர்வோர் குறைதீர் மன்றம், ஏர் பேக் ஏன் விரிவடையவில்லை? என்பது தொடர்பாக ஆட்டோமொபைல் இன்ஜினியரின் கருத்து இல்லாததால், இந்த கோளாறுக்கான காரணத்தை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்தது.
அத்துடன் ஏர் பேக் விரிவடையாததற்கு உற்பத்தி குறைபாடுதான் காரணம் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால், காருக்கான தொகையை திருப்பி வழங்க வேண்டும் அல்லது காரை மாற்றி தர வேண்டும் என்ற அபேகுமார் ஜெயினின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த கோளாறு வாராண்டி காலத்தில் நடைபெற்றதால், இது கார் உற்பத்தி நிறுவனத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக பார்க்கப்படுகிறது.
எனவே காரின் உரிமையாளர் அபேகுமார் ஜெயினுக்கு சம்பந்தப்பட்ட கார் உற்பத்தி நிறுவனம் இழப்பீடாக 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவிற்காக கூடுதலாக ரூ.50 ஆயிரம் சேர்த்து மொத்தம் 2.50 லட்ச ரூபாயை வழங்கும்படி நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!