Just In
- 35 min ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவில் மட்டுமல்ல... பாகிஸ்தான், சீனாவிலும் இதே நிலைமைதான்... கடுமையாக திணறுவது யார் தெரியுமா?
இந்தியாவை போன்று நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிலும், கார் விற்பனை கடுமையாக சரிவடைந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்து வருகிறது. குறிப்பாக கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியே திணறலுக்கு ஆளாகியுள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
மாருதி சுஸுகி மட்டுமல்லாது அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையும் இந்தியாவில் வீழ்ச்சியைதான் சந்தித்து வருகிறது. இதுபோன்ற கடுமையான நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டுமானால், வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SIAM - Society of Indian Automobile Manufacturers) இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது. ஆனால் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால் ஆட்டோமொபைல் துறையினர் ஏமாற்றமடைந்துள்ளனர். மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முடிவில் உறுதியாக உள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அள்ளி வீசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், இந்தியாவில்தான் கடந்த சில மாதங்களாக கார் விற்பனை மந்தமாக உள்ளது என்றால், நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிலும் கூட இதே நிலைமைதான்.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனை கடுமையாக சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக ஹோண்டா நிறுவனம் பாகிஸ்தானில் உள்ள தனது ஆலையில் 10 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்கள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வருவதால், ஹோண்டா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் கூட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ச்சியாக கார் உற்பத்தியை குறைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை தொடர்ந்து 5 மாதங்களாக உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளது. சரக்கு தேக்கமடைவதை தவிர்ப்பதற்காக மாருதி சுஸுகி இந்த நடவடிக்கையை எடுத்தது.
இந்த சூழலில் இண்டஸ் மோட்டார் கம்பெனியும் (Indus Motor Company - IMC) கூட 8 நாட்களுக்கு கார் உற்பத்தியை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது. இண்டஸ் மோட்டார் கம்பெனிதான் பாகிஸ்தானில் டொயோட்டா கார்களை உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச வரி, விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தானில் கார் விற்பனை சரிவடைந்து வருகிறது.
அதே நேரத்தில் உற்பத்தியை குறைப்பதா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக பாகிஸ்தான் சுஸுகி மோட்டார் கம்பெனி இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. அதே சமயம் சீனாவில் 2019ம் ஆண்டின் முதல் பாதியில் வாகனங்கள் விற்பனை 12 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளது. ஆக மொத்தத்தில் விற்பனை வீழ்ச்சியடைந்து வருவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் திணறலுக்கு ஆளாகியுள்ளன. ஆனால் சீனாவின் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்ட் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 80 சதவீதம் என்கிற அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!