2 மகள்களுடன் இளம்பெண் தீயில் கருகி பலியானதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

சாலையில் ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியதில், இளம்பெண் மற்றும் அவரது 2 மகள்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மகள்களுடன் இளம்பெண் தீயில் கருகி பலியானதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் நகரில் உள்ள லோனி பகுதியை சேர்ந்தவர் உபேந்திர மிஸ்ரா. இவரது மனைவி ரஞ்சனா மிஸ்ரா (30). இவர்களுக்கு ரிதி (5), நிக்கி என்ற மகள்கள் உள்ளனர். இதில், நிக்கி தற்போதுதான் நடை பழகி வந்தாள்.

உபேந்திர மிஸ்ரா-ரஞ்சனா மிஸ்ரா தம்பதிக்கு, ரிதி, நிக்கி தவிர 4 வயதில் மற்றொரு மகளும் உள்ளார். இவர்கள் 5 பேரும், டெல்லியில் உள்ள கல்காஜி கோயிலுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) சென்றிருந்தனர். அங்கு தரிசனம் முடித்து விட்டு, மாலை 6.30 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

உபேந்திரா மிஸ்ரா குடும்பத்தினர், டட்சன் கோ (Datsun Go) காரில் சென்று கொண்டிருந்தனர். இது சிஎன்ஜி எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG- Compressed Natural gas) மூலம் இயங்கும் கார் ஆகும். இதற்காக காரின் பின்பகுதியில் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டிருந்தது.

2 மகள்களுடன் இளம்பெண் தீயில் கருகி பலியானதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இந்த சூழலில் உபேந்திர மிஸ்ரா காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார். முன்பகுதியில் டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள பாசஞ்சர் இருக்கையில், உபேந்திர மிஸ்ராவின் 4 வயது மகள் அமர்ந்திருந்தார். எஞ்சிய மூவரும் காரின் பின் இருக்கையில், சிஎன்ஜி டேங்கிற்கு நெருக்கமாக அமர்ந்திருந்தனர்.

கிழக்கு டெல்லியில் உள்ள அக்ஸர்தாம் (Akshardham) கோயிலுக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ மிகப்பெரிய அளவில் கொளுந்து விட்டு எரிந்ததால், அவ்வழியாக சென்றவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே காரில் இருந்தவர்களை மீட்க அவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் இயலவில்லை. எனவே டெல்லி தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் 2 தீயணைப்பு வாகனங்களில், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

2 மகள்களுடன் இளம்பெண் தீயில் கருகி பலியானதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

அவர்கள் வெகுவாக போராடி தீயை விரைவாக அணைத்தனர். ஆனால் அதற்குள்ளாக ரஞ்சனா மிஸ்ரா மற்றும் அவரது மகள்கள் ரிதி மற்றும் நிக்கி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் பின் இருக்கையில், சிஎன்ஜி டேங்க்கை ஒட்டி அமர்ந்திருந்தனர்.

அதே சமயம் முன்பகுதியில் அமர்ந்திருந்த உபேந்திர மிஸ்ரா மற்றும் அவரது 4 வயது மகள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி அவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உபேந்திர மிஸ்ரா கூறுகையில், ''என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கார் எப்படி திடீரென தீப்பற்றியது என்பதும் எனக்கு தெரியவில்லை'' என்றார். இச்சம்பவம் டெல்லி மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்கள் தீப்பற்றி எரிவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் தலைநகர் டெல்லியில் மட்டும் 2வது மிகப்பெரிய சம்பவம் இது. முன்னதாக கடந்த பிப்ரவரி 22ம் தேதியன்று சிஎன்ஜி ஆட்டோ ஒன்று திடீரென தீப்பற்றியது.

இதில், ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். தெற்கு டெல்லியில் உள்ள சாதிக் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது தாய் மற்றும் அவரின் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

2 மகள்களுடன் இளம்பெண் தீயில் கருகி பலியானதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

சிஎன்ஜி வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்வலைகளால், டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''சிஎன்ஜி வாகனங்கள் அபாயகரமாக மாறி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், 2 காரணங்கள் மிகவும் முக்கியமானவை.

சிஎன்ஜி கிட்ஸ்களுக்கு (CNG Kits) என வகுக்கப்பட்டுள்ள ஸ்டாண்டர்டான விதிமுறைகளை மீறுவது முதலாவது காரணம். அங்கீகாரம் இல்லாத டீலர்களிடம் இருந்து அவற்றை வாங்குவது இரண்டாவது காரணம்.

பரிசோதனை செய்யப்படாத மற்றும் அனுமதி வழங்கப்படாத சிஎன்ஜி கிட்கள் மார்க்கெட்டில் எளிதாகவே கிடைக்கின்றன. ஒரு சில வாகன உரிமையாளர்கள் பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, இத்தகைய தரமற்ற சிஎன்ஜி கிட்களை அங்கீகாரம் இல்லாத டீலர்கள் மூலம் பொருத்தி கொள்கின்றனர்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சிஎன்ஜி கிட்களும் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற விதிமுறை மீறல்களை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்'' என்றார்.

சிஎன்ஜி வாகனங்கள் அபாயகரமாக மாறி வருவது ஏன்? என்பது குறித்து ஆட்டோமொபைல் நிபுணர் ஒருவர் கூறுகையில், ''3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிஎன்ஜி சிலிண்டர்களை கட்டாய லேப் டெஸ்ட்டிற்கு உட்படுத்த வேண்டும்.

2 மகள்களுடன் இளம்பெண் தீயில் கருகி பலியானதற்கு காரணம் இதுதான்... திடுக்கிடும் தகவல்கள் வெளியானது...

இதில், சிலிண்டர் எவ்வளவு அழுத்தத்தை தாங்கும் என்பது போன்று பல்வேறு சோதனைகள் செய்யப்படும். பின்னர் பரிசோதனை தேதி உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய சில்வர் நிற ரிப்போர்ட் பிளேட், சிஎன்ஜி சிலிண்டர் மீது பதிக்கப்படும்.

ஆனால் பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் கட்டாய லேப் டெஸ்ட்டை தவிர்த்து விடுகின்றனர். எனவே ரிப்போர்ட் பிளேட் காலாவதியாகி இருந்தால், அந்த வாகனத்திற்கு சிஎன்ஜி நிரப்பக்கூடாது என ஃபில்லிங் ஸ்டேஷன்களுக்கு (Filling Stations) உத்தரவிடப்பட்டுள்ளது.

என்றாலும் பெரும்பாலான ஃபில்லிங் ஸ்டேஷன்களில் இந்த உத்தரவு கடைபிடிக்கப்படுவதில்லை. இதில், கொடுமை என்னவென்றால் ஒரு சில வாகன உரிமையாளர்கள், வெறும் ரூ.100-200 செலவழித்து, முறைகேடான வழியில், அப்டேட் செய்யப்பட்ட ரிப்போர்ட் பிளேட்டை வாங்கி கொள்கின்றனர்'' என்றார்.

சிஎன்ஜி வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த சம்பவங்களை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. இதனிடையே உபேந்திர மிஸ்ரா குடும்பத்தினர் பயணித்த சிஎன்ஜி காரில் தீப்பற்றியது ஏன்? என்பது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதற்கு தற்போது வரை உறுதியான காரணம் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும் காரின் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிஎன்ஜி சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. இது தொடர்பாக மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

உபேந்திர மிஸ்ரா ஆண் குழந்தை மீது விருப்பப்பட்டதாகவும், ஆனால் பெண் குழந்தைகளாக பிறந்ததால், அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நீண்ட வருடங்களாக தகராறு இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே திருமணம் ஆனது முதல் மனைவியை அவர் வெளியே எங்கேயும் அழைத்து செல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 13 வருடங்களில் முதல் முறையாக தற்போதுதான் மனைவியை, உபேந்திர மிஸ்ரா வெளியே அழைத்து சென்றுள்ளார்.

அப்போதுதான் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. எனவே மனைவி மற்றும் குழந்தைகளை உபேந்திர மிஸ்ரா திட்டமிட்டு கொலை செய்திருக்கலாம் என ரஞ்சனா மிஸ்ராவின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் உபேந்திர மிஸ்ரா மனைவிக்கு கொடுமைகள் இழைத்ததாகவும், பலமுறை கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், ரஞ்சனா மிஸ்ராவின் உறவினர்கள் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது.

இதனால் இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். எனவே வழக்கின் கோணம் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

NOTE: Images Used Are Only For Representational Purpose Only

Most Read Articles
English summary
CNG Car Catches Fire: Mother, 2 Little Daughters Killed. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X