Just In
- 34 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 53 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாரத் பென்ஸ் பிஎஸ்-6 கனரக வாகனங்கள் அறிமுகம்!
பாரத் பென்ஸ் நிறுவனத்தின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பஸ், டிரக்குகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. அவற்றின் அறிமுகம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் இந்தியாவில் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (DICV) என்ற பெயரில் இந்தியாவில் வர்த்தக வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பாரத் பென்ஸ் பிராண்டில் தனது பஸ் மற்றும் கனரக டிரக்குகளையும் விற்பனை செய்து வருகிறது. பாரத் பென்ஸ் டிரக்குகள் சென்னையில் உள்ள ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் வாகனங்களை விற்பனை செய்வது கட்டாயமாகிறது. அதன்படி, தனது டிரக்குகளுக்கு பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான எஞ்சின்களை டெய்ம்லர் இந்தியா நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
இந்த எஞ்சின்களுக்கு பிஎஸ்-6 சான்றையும் பெற்றிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருப்பதோடு, அந்த எஞ்சின் பொருத்தப்பட்ட புதிய டிரக்குகள் மற்றும் பஸ் மாடல்களையும் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய பஸ், டிரக் மாடல்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் டெய்ம்லர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான தமது பஸ், டிரக் மாடல்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் சந்தையில் மதிப்பு வாய்ந்த மாடல்களாக தொடர்ந்து இருக்கும் என்று டெய்ம்லர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கனரக வாகனங்களில் 80 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் இதனை 90 சதவீதமாகவும் உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய வாகனங்களை இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக டெய்ம்லர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவை புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான வாகனங்களை தயாரிப்பதற்கான முக்கிய கேந்திரமாக பயன்படுத்த உள்ளது டெய்ம்லர் நிறுவனம்.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!