Just In
- 1 hr ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- 3 hrs ago கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- 4 hrs ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 6 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
Don't Miss!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- News எல்.முருகனுக்கு டெல்லி டாஸ்க்! கச்சிதமாக செஞ்சு முடிச்சிட்டாரே! எடப்பாடி இதை எதிர்பார்த்து மாட்டாரு
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பெட்ரோல், டீசல் எஞ்சின்களுக்கு குட்பை சொல்ல டெய்ம்லர் முடிவு!
பெட்ரோல், டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு விடை கொடுக்க டெய்ம்லர் குழுமம் முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு குழுமங்களில் ஒன்று டெய்ம்லர். பஸ், டிரக் வேன் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களும், மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் சொகுசு கார்களையும் டெய்ம்லர் குழுமம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்ற நிறுவனமாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான சந்தை வலுப்பெற்று வருவதை மனதில் வைத்து பல அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது. பெட்ரோல், டீசல் எஞ்சின் வாகனங்களின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துவதற்கான திட்டங்களை டெய்ம்லர் குழுமம் வகுத்துள்ளது.
அதற்கு மாற்றாக, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனத் தயாரிப்பில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. அதாவது, பஸ், டிரக், வேன் மற்றும் சொகுசு கார்கள் என அனைத்தையும் மின்சார மாடல்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பேட்டரியில் இயங்கும் பஸ், வேன் மற்றும் டிரக்குகளை சந்தைக்கு கொண்டு வந்துவிட்டது டெய்ம்லர் குழுமம். அடுத்ததாக மின்சார சொகுசு கார்கள் தயாரிப்பில் அதீத கவனத்தை செலுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பெரும் முதலீட்டு திட்டங்களையும் கையில் எடுத்துள்ளது.
தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் EQS, EQB மற்ரும் EQC ஆகிய மின்சார சொகுசு கார் மாடல்களை பொது பார்வைக்கு கொண்டு வந்துவிட்டது. இந்த கார் மாடல்களை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தி சந்தைக்கு கொண்டு வரும் முனைப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், தற்போது தனது சொகுசு கார்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கோ அல்லது புதிதாக உருவாக்குவதற்கான திட்டங்களை கைவிட முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக மின்சார வாகனங்களுக்கான தொழில்நுட்பங்களை செம்மை படுத்தும் நோக்கத்தை கையில் எடுத்துள்ளது.
வரும் 2022ம் ஆண்டு முதல் தற்போது விற்பனையில் உள்ள சொகுசு கார்களின் மின்சார மாடல்களை அறிமுகம் செய்வதற்கு டெய்ம்லர் முடிவு செய்துள்ளது. எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல், டீசல் மாடல்கள்தான் டெய்ம்லரின் கடைசி தலைமுறை மாடல்களாக இருக்கும்.
Source: Auto Motor und Sport